என் மலர்
நீங்கள் தேடியது "Tourism"
- கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதால், இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். ஏற்காட்டின் ரம்மியமான சூழலையும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும், சிலு சிலு காற்றையும் அவர்கள் அனுபவித்து மகிழந்தனர். மேலும் இங்குள்ள பூங்காக்களை கண்டுகளித்தும், ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதூகலித்தனர்.
வெயிலின் தாக்கமில்லாமல் நிலவும் அருமையான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள வண்ண மலர்களையும், அண்ணா பூங்காவில் உள்ள வண்ணமயமான மலர்களையும், லேடிசீட், பக்கோடா பாயின்ட் போன்ற காட்சி முனைகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்தனர். சேர்வராயன் கோவில், ஐந்திணை பூங்கா, பீக்கு பார்க் போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
அதிகமான சுற்றுலா பயணிகளிள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. சிலர் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், இரவு முழுவதும் காரில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.
- தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.
- சமீபகாலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.
சில குடும்பங்களில் வார இறுதியில் ஒரு மினி சுற்றுலா போவதை வழக்கமாக வைத்திருப்பர். சில குடும்பங்களில், சேர்ந்தாற்போல் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா போய்விடுவர். ஆனால் பல குடும்பங்களில் பள்ளி ஆண்டு விடுமுறை தான் சுற்றுலா செல்லும் நேரம். அவ்வாறு விடுமுறையை கழிக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சொர்க்கமாக திகழ்வது ஏற்காடு மலைவாசஸ்தலம்.
தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் தான் ஏற்காடு. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.
சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதனாலேயே ஏழைகளின் ஊட்டி என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது.
மரங்களின் நிழலும், தென்றலின் சுகமும், வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகான கவர்னராக இருந்த சர் தாமஸ் முரோ என்பவரால் 1842-ம் ஆண்டு ஏற்காடு கண்டறியப்பட்டது. ஏற்காடு அதன் பெரும்பான்மை சாகுபடியான காபி, ஆரஞ்சு, பலாப்பழம், கொய்யா, ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு தோட்டங்களுக்கு பெயர் போனது. காபி ஒரு முக்கிய உற்பத்தியாகும். இது ஆபிரிக்காவில் இருந்து 1820-ல் ஸ்காட்டிஷ் கலெக்டர் எம்.டி. காக்பர்ன் மூலம் ஏற்காடு வந்தது. மேலும் இங்கு அரிய வகையான மரங்களும் வனவிலங்குகளும் உடைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம், தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன. மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகளும் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.
தென்னிந்தியாவின் ஆபரணம் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. மே மாதத்தில் இங்கு வர நேர்ந்தால் இந்த கோடை திருவிழாவை தவறவிட்டுவிட கூடாது. மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல ஏற்காட்டில் உள்ளன.
எம்ரால்ட் ஏரி
அதில் முதலாவதாக ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படுவது, அதன் நடுவே அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். இது மிகவும் பிரபலமாக எமரால்டு ஏரி என்று அழைக்கப்படுகிறது. அற்புதமான மலைகள் மற்றும் அழகிய தோட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த ஏரி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏரியில் படகு மூலம் சவாரி செய்யும் வசதிகள் நியாயமான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. உங்கள் தேவைக்கு ஏற்ப சுயமாக இயக்கப்படும் படகுகளையும் தேர்வு செய்யலாம்.

பகோடா பாயின்ட்
ஏற்காடு பிரதான பஸ் நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகோடா பாயின்ட், ஏற்காட்டிலியே மிகவும் உயரமான தளமாகும். இதன் உச்சியில் இருந்து ஏற்காட்டின் மொத்த அழகையும் கண்டு களிக்கலாம். இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள், இங்கு கற்களால் ஒரு ராமர் கோவிலை கட்டியுள்ளனர். இதன் அழகை கண்டு கழிக்க, இரவு 7 மணிக்கு முன் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும், இந்த 300 அடி உயர நீர்வீழ்ச்சியின் மயக்கும் மற்றும் வசீகரிக்கும் அழகு, உங்கள் மனதிலும் இதயத்திலும் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் அனுபவமாக இருக்கும்.
இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது. கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த அருவியை ட்ரெக்கிங் பயணம் மூலமாக அடர்த்தியான வனப்பகுதியினுள் பயணித்தும் சென்றடையலாம்.
லேடிஸ் சீட்
ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான இடம் லேடிஸ் சீட். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். வானிலை சரியாக இருந்தால், இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள். இந்த தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.
கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மணி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்து கொண்டிருந்ததால் லேடிஸ் சீட் என்ற பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஜென்ஸ் சீட், சில்ட்ரன் சீட் ஆகியவையும் இங்கு மிக பிரபலம். இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும். அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளை நோக்கியவாறு அமைந்துள்ளன.
அண்ணா பூங்கா
ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும். இதேபோல் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.
தாவரவியல் பூங்கா
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அற்புதமான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் இந்த பூங்கா ஒரு கடவுளின் பரிசு போல காட்சியளிக்கும்.
சேர்வராயன் கோவில்
கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் உள்ளது இக்கோவில். மே மாதத்தில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம். இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும், காவிரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவிரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.
இவை தவிர கரடி குகை, ஆர்தர் இருக்கை, மாண்ட்ஃபோர்ட் பள்ளி, மீன் காட்சியகம், திப்பேரேரி காட்சி முனை, கொட்டச்சேடு தேக்கு காடு, கிரேஞ்ச், ரெட்ரிட் இல்லம், மஞ்சகுட்டை வியூ பாயிண்ட், தலைசோலை அண்ணாமலையார் கோவில், நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகியவையும் ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும்.

எப்படி ஏற்காடுக்கு செல்வது?
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால், விமானம், ரெயில் மற்றும் சாலை என அனைத்து போக்குவரத்து முறைகளாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சேலம் விமான நிலையம் ஏற்காடுக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். சேலம் விமான நிலையத்திலிருந்து ஏற்காடு சுமார் 47 கி.மீ. ஆகும். பயணிகள் விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து இலக்கை அடையலாம்.
இதேபோல் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கேரளா, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு தினசரி ரெயில்கள் உள்ளன. ரெயில் நிலையத்திலிருந்து ஏற்காடு செல்ல வாடகை வண்டியில் செல்லலாம். இல்லையெனில் ரெயில் நிலையத்திலிருந்து சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் பஸ்சில் ஏறுங்கள். அங்கிருந்து ஏற்காடு செல்லும் பஸ் கிடைக்கும்.
தமிழ்நாடு மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக ஏற்காடு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை அல்லது சேலம் போன்ற நகரங்களில் இருந்து ஏற்காட்டுக்கு வாகனத்தில் வார இறுதியில் மக்கள் செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சேலம் - ஏற்காடு செல்லும் பஸ்கள், ஏற்காடு ஏரிக்கரையில் நின்று செல்லும். ஏரியில் ஒரு வண்டி ஸ்டாண்ட் உள்ளது, அங்கு நீங்கள் சுற்றுலாவிற்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்புறம் என்ன அப்பிடியே ஜாலியா ஏற்காட்டுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்க..!
ஏற்காட்டில் என்ன கிடைக்கும்?
ஏற்காடு ஒரு மலை வாசஸ்தலம் என்றாலும் தீவிர வெப்ப நிலை மாற்றம் இங்கு இருப்பதில்லை. எனவே சுற்றுலா பயணிகள் சுமப்பதற்கு கடினமான தங்கள் குளிர் கால உடமைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இலகுவான உடைமைகளை கொண்டு வந்தால் போதுமானது. ஆண்டு முழுவதும் லேசான மற்றும் இதமான வெப்பநிலையே இங்கு காணப்படுகிறது. ஏற்காட்டின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.
ஆண்டு முழுவதும் இந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்றாலும் கூட, கோடை மற்றும் குளிர்காலத்தில் ஏற்காடு செல்வது ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்காட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்குறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பருவமழை பெய்கிறது. மழைப்பொழிவு காரணமாக, இப்பகுதியில் மலையேற்றம் செய்வதும் மற்ற இடங்களுக்குச் செல்வதும் கடினமாகிறது.
ஏற்காட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. இதனால் ஏற்காடு குளிர்காலத்தில் இனிமையான காலநிலை மற்றும் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளைக் கொண்டுள்ளது. எனவே அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் தான் ஏற்காடு செல்ல சிறந்த பருவம் ஆகும். ஏராளமான பட்ஜெட் மற்றும் நடுதரப்பட்ட ஹோட்டல்கள் ஏற்காட்டில் இருப்பதால், இங்கு தங்குவது ஒரு எளிதான விஷயமாகும்.
உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அழகிய சுற்றுப்புற காட்சிகள் நிறைந்த அறைகள், தனி பங்களா, காற்றோட்டமான அறைகள் என விரும்பியவற்றை நீங்கள் தேர்வு செய்து தங்கலாம். ஏன் வீடு போன்ற தங்கும் இடங்கள் கூட உள்ளன. ஏற்காட்டிற்கு வருபவர்கள், உள்ளூர் ஏற்காடு காபியை ருசிக்க வேண்டும். அதன் சொந்த சுவை மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. இதேபோல், இங்கு நூற்றுக்கணக்கான மிளகாய் பஜ்ஜி கடைகள் உள்ளன. இந்த பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர். அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது. இதுமட்மின்றி ஸ்பைசி மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி, பிரட் ஆம்லெட் போன்றவையும் மிக பிரபலம்.
ஆண் மற்றும் பெண்களுக்கு நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகையான முடவன் ஆட்டுக்கால் கிழங்கு இங்கு பரவலாக கிடைக்கின்றன. இந்த கிழங்கில் சூப் வைத்து விற்கின்றனர். இந்த சூப்பின் சுவையானது ஆட்டுக்கால் சூப்பின் சுவையை போலவே இருக்கும். இதையும் சுவைத்து பார்க்க மறக்காதீர்கள்.
- புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும்.
- புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் புத்தகரம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்த விகாரம் என்று அழைக்கப்படும். புத்த கிரகம், புத்த விகாரம் என்பது காலப்போக்கில் மருவி புத்தகரம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், இடையே உள்ள இடத்தில் குளம் சீரமைத்தபோது அழகிய புத்தர் சிலை ஒன்று கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்த புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும், செம்பாதி தாமரை அமர்வு உடன் கால்களும், சிந்தனை முத்திரையுடன் கைகளும், தலைமுடி சுருள் சுருளாகவும், ஞான முடி தீப்பிழம்பாகவும், கழுத்தில் மூன்று கோடுகளும், இடது புற தோள் மட்டும் சீவர ஆடையால் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலையின் பின்புறம் தலைப்பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது.
பின்புறம் உள்ள உடலின் முதுகுப் பகுதியில் சீவர ஆடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16-ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையில் காண முடியும்.
தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள புத்தகரத்தில் மட்டுமே பவுத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிஷிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வு குழுவினர் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கண்டறிந்து உள்ளனர்.
மேலும் புத்தகரம் கிராமப் பகுதியில் பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதும், பல்லவர் காலத்திற்கு முந்திய குடியேற்றங்களும் இருந்து உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது. அத்தகைய சிறப்புகளை உடைய புத்தர் சிலையை தற்பொழுது வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய குமார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியைப் பெற்று புத்த விகாரம் எனும் புத்தர் கோவில் சுற்றுலா துறையின் மூலம் கட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சி துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
- சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி தொடங்கி வைக்கப்பட்டது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊஞ்சலில் விளையாட வைத்து மகிழ்வித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தலத்தில் கடந்த ஆண்டு சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறையில் பேராவூரணி பகுதி மக்கள் மற்றும் பல்வேறு மாவட்ட சுற்றுலா பயணிகள் வேன் மற்றும் கார் மூலம் குழந்தைகளை அழைத்து வந்து கடற்கரையில் அமைந்துள்ள மனோராவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் தங்களது குழந்தை களை சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சலில் விளையாட விட்டு மகிழ்ந்தனர். படகு சவாரி செய்து கடலின் அழகை பார்த்து ரசித்து சென்றனர்.
- நரிக்குடி ஒன்றியம் சார்பில் கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் அகத்தாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகவள்ளி சீனிவாசன் தலைைமயில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்கள், தூய்மைப்பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், நூலகர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர்களை ஒருங்கிணைத்து நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அகத்தாகுளம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். சுற்றுலா வாகனத்தை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கி.ஊ) வழியனுப்பி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு அழைத்து செல்லப்படும்.
- அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு நேரடியாக சுற்றுலா ரெயிலை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( ஐ.ஆர்.சி.டி.சி ) முடிவு செய்துள்ளது.
பாரத் கவ்ரவ் சுற்றுலா ரெயில் வரிசையில் இயக்கப்படும் இந்த ரெயில் வரும் ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரம், கொச்சுவேலியில் காலை புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்து சேரும்.
பின்னர் அங்கிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக ஜூலை 3-ம் தேதி ஹைதராபாத் நகரில் டெக்கான் சார்மினார், கோல்கொண்டா, ஜூலை 5-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மகால், மதுராவில் கிருஷ்ணர் பிறப்பிடம், ஜூலை 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு ள்ளது.
பின்னர், அங்கிருந்து 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் மற்றும் இந்திய, பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின்னர் புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அஷர்தம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.
அதன் பின்னர் இந்தச் சிறப்பு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்குச் சாதாரண படுக்கை வசதி ரூ. 22,350-ம், குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380-ம் எனக் கட்டணம் நிர்ணயி க்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதி விற்கு 82879 31965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகி ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா விற்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் காவிரியில் ஆனந்தமாக நீராடி பூங்காவிற்கு சென்று பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும், சறுக்கு விளையாடியும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் கார்களிலும், பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களி லும் சுற்றுலா தளங்களுக்கு வந்ததால் மேட்டூர், கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் 7,216 சுற்றுலா பணிகள் மேட்டூர் அணை பூங்கா விற்கு வந்து சேர்ந்தனர். இதன் மூலம் பார்வை யாளர் கட்டணமாக ரூ.36 ஆயிரத்து 80 வசூல் ஆனது. அணையின் வலது கரை யில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 827 பேர் வந்து சென்றனர்.
- உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.
- விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்தி ருந்தார்.
தமிழ்நாட்டின் சுற்றுலாத்து றையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான அறிவிப்பும் ஒன்றாகும்.
அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண, விமான பங்களிப்பாளர், சிறந்த தங்கும் விடுதி, உணவகம், சிறந்த வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், சுற்றுலா தொடர்பான கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சுற்றுலாவில் சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் விளம்பர கருத்து சுற்றுலா விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து உலக சுற்றுலா தினமான 27.9.2023 அன்று விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்மு னைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து 15.8.2023 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 04362-230984 மற்றும் 9176995873 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம்.
- இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.
மேட்டூர் அணை பூங்கா
அவர்கள் இங்குள்ள காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த பூங்காவில் பொதுபணித் துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யபடுகிறது.
இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.38.495 வசூல் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் இருந்த ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
- மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின.
- வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை. 1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை சேதப்படுத்தியது யானைகள் தான் என உறுதி செய்தனர்.
வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும்.
- ஒரே பையுடன் பயணம் செய்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.
பயணத்திக்காக பலரும் பல்வேறு வழிகளில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், பயணத்தின்போது பணத்தை சேமிப்பதை இழந்துவிடுவார்கள். அப்படி பயணத்தின்போது சேமிக்க சில ஆலோசனைகள் இங்கே..
எப்போதும் ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும். குறுகிய கால பொது விடுமுறை உள்ள நாட்களை பயணத்துக்காக தேர்ந்தெடுத்தால், பயணத்துக்கான செலவு, தங்குமிடம், உணவு பொருட்கள், நினைவுப் பொருட்கள் என அனைத்தும் மலிவாக கிடைக்கும்.
வருடத்தில் சில மாதங்கள் அல்லது சில நாட்களில் எந்த சீசனும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்களை தேர்வு செய்து பயணத்துக்கான டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யுங்கள். குறைவான கட்டணத்தில் சிறந்த தள்ளுபடியுடன் டிக்கெட்டுகள் கிடைக்கும்.
நீண்ட தூர பயணத்தின்போது தொடர்ச்சியாக செல்லக்கூடிய ஒரு வழி பயணத்தை தேர்ந்தெடுப்பது சலிப்பை ஏற்படுத்தினாலும், பயனத்துக்கான செலவை குறைக்கும்.
பயண காலத்துக்கு ஏற்றவாறு நாமே உணவு, தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சேமிப்புடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதேநேரம் உணவு மற்றும் தேவையான பொருட்களை கொண்டு செல்ல தனி பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒரே ஒரு பையுடன் பயணத்தை மேற்கொள்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.
அதுமட்டுமில்லாமல், பயணத்தின்போது தேவையின்றி வாங்கக்கூடிய பொருட்களின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம். தேவைக்கேற்ப நாம் தங்கும் இடங்களை நாள் கணக்கில் பதிவு செய்வதை விட, மணிக்கணக்கிற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் முன்பதிவு செய்வது செலவை குறைக்க சிறந்த வழி.
பயண நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் உணவுக்கான செலவை கட்டுப்படுத்த நீங்கள் உண்ணும் உணவின் தன்மையை தெளிவாக முடிவு செய்யுங்கள். பயணத்தின்போது பொரித்த எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும். சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பயணத்தின்போது நாம் பொதுவாக செய்யும் மற்றொரு தவறு. சுற்றுலா சென்ற இடத்தில் நாம் பயன்படுத்தும் லோக்கல் வாகனங்கள். சுற்றுலாவின்போது நமக்கென தனியாக வாகனங்களை' பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வீண் செலவை குறைப்பதுடன், சுற்றுலா செல்வதன் அசல் உணர்வை உணரும்படியான புதிய அனுபவத்தை பெறவும், சுய ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.
- தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், நகர மன்றத் துணைத் தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிப்படை தேவைகள்
கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேதாச்சலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்து வெளியேறினார்.
5-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும்.
இந்த கைலாசநாதர் ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அதிசய எண்கோண வடிவ தெப்பக்குளமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
சுற்றுலா தலம்
அதேபோல் தாரமங்கலம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள தாரமங்கலம் ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி தமிழக அரசின் காவிரி உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு உபரி நீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாத காரணத்தினால் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி, தூர்வாரி தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடுகள் செய்து நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏரியை சுற்றுலா தலமாக்கும் முயற்சிக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தனர்.
சுகாதார பணிகள்
14-வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் பேசும்போது, மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்தமாறு கோரிக்கை விடுத்தார்.
4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய பரிசீலனை செய்து குறைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.