என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » traffic disruption officials review
நீங்கள் தேடியது "Traffic disruption officials review"
பெரும்பாறை அருகே மலைச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கிழ்மலை பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, கே.சி.பட்டி ஆகிய பகுதிகளுக்கு வத்தலக்குண்டு மற்றும் திண்டுக்கல்லில் இருந்து செல்வதற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தடுப்புச் சுவர்களும் சேதமடைந்தன. இந்த மலைச்சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இதனை சீரமைக்க மண், ஜல்லி கற்கள் சாலையிலேயே கொட்டப்பட்டன.
ஆனால் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சித்தரேவு-பெரும்பாறை மலைப்பகுதியில் ஏணிக்கல் என்ற இடத்தில் சாலையை அகலப்படுத்தி புதிதாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது வனத்துறையினர் முன்னிலையில் வன நிர்ணய திட்ட அலுவலர் (தாசில்தார்) பஷீர் அகமது, ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாசு, சாலை ஆய்வாளர் மஞ்சுநாத், மணலூர் வி.ஏ.ஓ. காளிதாஸ், சர்வேயர் சபரிநாதன் ஆகியோர் மீனாட்சி ஊத்து முதல் ஏணிக்கல் வரை சாலையை சர்வே செய்யும் பணியை ஆய்வு செய்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதன் பின்பு பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
கொடைக்கானல் கிழ்மலை பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, கே.சி.பட்டி ஆகிய பகுதிகளுக்கு வத்தலக்குண்டு மற்றும் திண்டுக்கல்லில் இருந்து செல்வதற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தடுப்புச் சுவர்களும் சேதமடைந்தன. இந்த மலைச்சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இதனை சீரமைக்க மண், ஜல்லி கற்கள் சாலையிலேயே கொட்டப்பட்டன.
ஆனால் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சித்தரேவு-பெரும்பாறை மலைப்பகுதியில் ஏணிக்கல் என்ற இடத்தில் சாலையை அகலப்படுத்தி புதிதாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது வனத்துறையினர் முன்னிலையில் வன நிர்ணய திட்ட அலுவலர் (தாசில்தார்) பஷீர் அகமது, ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாசு, சாலை ஆய்வாளர் மஞ்சுநாத், மணலூர் வி.ஏ.ஓ. காளிதாஸ், சர்வேயர் சபரிநாதன் ஆகியோர் மீனாட்சி ஊத்து முதல் ஏணிக்கல் வரை சாலையை சர்வே செய்யும் பணியை ஆய்வு செய்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதன் பின்பு பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X