என் மலர்
நீங்கள் தேடியது "Traffic Police"
- போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை.
- போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சந்திப்புகளில் நின்று கொண்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, வேகமாக செல்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு அபராதம் வசூலிக்கின்றனர்.
வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்துகின்றனர்.
போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. அவர்களிடம் 'கூகுள் பே' மூலம் பணத்தை செலுத்துமாறு போலீசார் வசூலித்து வருகின்றனர்.
ஆனால் அதற்குரிய ரசீது வழங்குவதில்லை. அந்த பணத்தை போலீசார் தங்களது உறவினர்களின் 'கூகுள் பே' செல்போன் நம்பரில் பெற்று மோசடி செய்வது தற்போது அம்பலமாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மே மாதம் 9-ந்தேதி தனது குடும்பத்துடன் காரில் புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னலை மீறிவிட்டதாக அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கூகுள் பே மூலம் ரூ.500 வசூலித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படவில்லை
இதனால் சந்தேகம் அடைந்த முரளிதரன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட கூகுள் பே எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து போலீஸ்காரர் வசூலித்த அபராத பணம் தனிப்பட்ட நபருக்கு சென்றது தெரியவந்தது.
அந்த போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான புதுவை சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதே போல் மேலும் பல சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் சிலர் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பணம் வசூலித்த போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
- பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது.
- கயிறு கட்டிய இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
பழனி:
பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் மாலைநேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஆர்.எப். ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை யோர ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆர்.எப். ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த கயிறு கட்டி இடம் கொடுக்க ப்பட்டது. அந்த இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கடந்து ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.
தீபாவளி பண்டிகை வரை பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூரின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
- சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் பகுதியில் கண்காணிப்பு மையம் திறக்க பட்டது.
- போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்டது.
சீர்காழி:
போக்குவரத்து காவல்துறை சார்பில் சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் மூன்று சாலை சந்திப்பில் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் ஓலிப்பெருக்கியுடன் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடை பெற்றது.
விழாவிற்கு போக்குவரத்து காவல் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமை வகித்தார்.
சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பங்கேற்று கண்காணிப்பு மையத்தினை திறந்து வைத்தார்.
இதில் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.
- திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
- போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.
திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.
- இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
- சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.
இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.
- சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது.
கடலூர்:
கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.
இந்த பஸ் நிறுத்தம் வழியாக கடலூரில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தினந்தோறும் இவ்வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் நிற்காமல் வெளியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஒரு அரசு பஸ், புதுச்சேரி அரசு பஸ் உள்பட 8 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
- பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்கமுடியாது என ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.
- நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்துத்துறை, போலீசார் பேருந்தில் பயணிக்கையில் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத்துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என தெரிவித்தது.
இதற்கிடையே, சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இந்த நடவடிக்கையால் போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு அருகே வாரண்ட் வைத்திருந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதேபோல், திருநெல்வேலியில் உள்ள வள்ளியூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற 3 டிரைவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார். சீட் பெல்ட் அணியாதது, யூனிபார்ம் சரியாக அணியாதது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறைக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து தெரிய வரும்.
- தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர்.
- காம்யா என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
ஆனால் தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்
மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான அவர் மே 12 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் 3 முறை எவரெஸ்ட் சிகரத்தில் எறியுள்ளார்.
எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவது மிகவும் சிரமமானது. சிலரால் மட்டும் தான் இந்த சாதனையை படைக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது தினமும் இந்த சாதனையை பலர் படைத்தது வருகின்றனர்.
இதற்கு காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எண்ணற்றோர் ஆர்வம் காட்டுவதும் தான்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
- போக்குவரத்து துறையின் சாரதி மென்பொருளில் போலி மருத்துவ சான்றுகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய அறிவிப்பு.
- தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண்ணை மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
40 வயதிற்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறுவது மற்றும் புதுப்பிப்பது குறித்துசென்னை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்,
மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன்படி, 40 வயதிற்கு மேற்பட்டோர் மருத்துவச்சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ, புதுப்பிக்கவோ முடியும். மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்களிடம் சான்றுபெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து துறையின் சாரதி மென்பொருளில் போலி மருத்துவ சான்றுகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய அறிவிப்பு என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண்ணை மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூர் பகுதியில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், ஹாப்பூர் போலீசார் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு 9,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கடந்தாண்டு இதே ஊரில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் 22,000 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
- பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமம்.
சென்னை:
சென்னையில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.
இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இதனால் மாநகர பஸ்கள் சரியான இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை அகற்றினர். ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை போக்குவரத்து போலீசுக்கு வந்த 2000 புகார்களில் 800 புகார்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பானவை. அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் சட்ட விரோத வாகன நிறுத்தம் சம்பந்தப்பட்டது.
பரங்கிமலை-பூந்தமல்லி சாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஷேர் ஆட்டோக்களில் ஆட்கள் வரும் வரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் கூறினாலும் சண்டைக்கு வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்துவதால் ஆட்டோ டிரைவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்துகிறோம் என்றனர்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறுகையில், பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
- விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- சிலர் விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள்.
சென்னையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள். போலீசாரை கண்டதும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது தொடர்பான பதிவு வைரல் ஆனது.
சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் வகையில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்ற குறிப்பு கூகுள் மேப்ஸ்-இல் இடம்பெற்றால், பலரும் ஹெல்மட் அணிய தொடங்குவார்கள்.
இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அறிவுறுத்தியுள்ளார்.