search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • ஈரோடு- சேலம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • இன்று முதல் 30ந் தேதி வரை கோவை- சேலம் (06802), சேலம்- கோவை (06803) மெமு ெரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    கோவை- சேலம் மெமு ெரயில் சேவை நாளை முதல் 30-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சேலம் ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    ஈரோடு- சேலம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் இன்று முதல் 30ந் தேதி வரை கோவை- சேலம் (06802), சேலம்- கோவை (06803) மெமு ெரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நெல்லை-செங்கோட்டை இடையே நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை- செங்கோட்டை இடையே ரெயில் பாதையில் தண்டவாளங்கள் வலுப்ப டுத்தப்பட்டு மின்பாதை அமைக்கப்பட்டது.

    அதில் மின்சார ரெயில் என்ஜின் மூலம் அதிவேகமாக ரெயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    நெல்லை-செங்கோட்டை இடையே மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்குவதற்காக நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் எவ்வித குறைபாடுகளும் இன்றி ரெயில் இயங்கியதால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் அந்த வழித்தடத்தில் நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில் (06681-06658) வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் இன்னும் மின்மயமாக்கல் பணிகள் முடிவடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணி, மாலை 6.15 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, காலை 10.05 மணி, மாலை 5.50 மணிக்கும் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட இருந்த நிலையில் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது.

    வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட நிலையிலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து அதி காரிகளிடம் கேட்டபோது அவர்களுக்கும் இந்த திடீர் ரத்து குறித்த தகவல் தெரியவில்லை. ஓடுபாதையில் தேவையான அளவு மின்சாரம் வினியோகம் இல்லையா அல்லது மின்சார என்ஜின் இல்லையா என்பது குறித்து அவர்களுக்கும் முழு விபரம் தெரியவில்லை. இதனால் எந்த விதமான முன்னறிவிப்பும், காரணமும் இல்லாமல் மின்சார என்ஜின் ரெயில் இயக்கம் ரத்தானது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படும் பகுதியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் வகையில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயிலுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் இருந்து 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கோவையை சென்றடைவதால் வந்தே பாரத் ரெயில் சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை வரை வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் முழுமை அடைந்துள்ளது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அதிக வருவாய் கொடுக்கும் ரெயில் நிலையமான நெல்லை வரைக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் நல சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய இணை மந்திரி முருகன் இந்த வருடத்திற்குள் சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    அதன்படி சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிறுத்துவதற்கான பிட்லைன் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தற்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படும் பகுதியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் ரெயிலை பொறுத்தவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முழுமையான மின் இணைப்புகள் இருந்தால் மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இதனால் பிட்லைனில் மின் மயமாக்கல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    இதற்காக அங்கு டிரான்ஸ்பார்ம்கள் உள்ளிட்ட கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகளில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே சென்னை- நெல்லை இடையே மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கு சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது.

    கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. எனவே சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுமா? அல்லது மாலை, இரவு நேரங்களில் இயக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    தற்போது இயக்கப்பட்டு இயக்கபடும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்ல பயண நேரம் 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் பயண நேரம் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் கூறியதாவது:-

    பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே மூலம் விரைவில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுவதால் அதே தண்டவாளங்களில் வந்தே பாரத் ரெயிலை இயக்கலாம். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

    அதே நேரத்தில் நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தவுடன் அதில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது சந்திப்பு ரெயில் நிலையத்தில் மற்ற ரெயில்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பிட்லைனில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயிலை பொருத்தமட்டில் முழுமையான மின் இணைப்பு இருந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

    எனவே வந்தே பாரத் ரெயில் பெட்டிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ரெயில் நிலையத்தில் உள்ள பிட்லைனில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
    • 2 நாட்களுக்கு கோவையில் புறப்படும் ெரயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.

    திருப்பூர் :

    கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12084) இயக்கப்படுகிறது.திருச்சி ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு கோவையில் புறப்படும் ரெயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.

    தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லாது. மறுமார்க்கமாக மாலை 4:50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு இரவு 9:20 மணிக்கு கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    உடுமலை :

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு -திருச்செந்தூர் ரெயில் மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் வரும் 12-ந் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் ரெயில் திண்டுக்கல்- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பாலக்காடு வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • இந்திய அரசு பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
    • 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவ ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழச்சிக்கு டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் விஜயகுமார், செயலாளர் ராஜ் நாராயணன், இணை செயலாளர் மற்றும் ராய் டிரஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன், மாடர்ன் நர்சரி பள்ளி தலைமையாசிரியை தீபா ராணி, டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், அபி செல் ஷோரூம் உரிமையாளர் மாணிக்க வாசகம், பயிற்றுநர்கள் பிரபு, கிருபாகரன் மற்றும் அகாடமியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அகாடமியின் நிறுவனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    மவுன அஞ்சலியை அகாடமி செயலாளர் ராஜ் நாராயணன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் பேசுகையில்:-

    ரெயில்வே நிர்வாகமும், இந்திய அரசும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • அண்ணாமலை மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் திருச்சியில் நடந்த தெற்கு ரெயில்வே ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு தெற்கு ரெயில் நிர்வாகம் கால அட்டவணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வரும் ரெயில் பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில் அங்கிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    பவுர்ணமி நாட்களில் சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

    தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பவுர்ணமி நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு சென்றடையும். தொடர்ந்து அங்கிருந்து வழக்கம் போல் மயிலாடுதுறை செல்லும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் ஜூலை மாதத்தில் 2 மற்றும் 3-ந் தேதிகள், 30 மற்றும் 31-ந் தேதிகள், ஆகஸ்டு மாதத்தில் 30 மற்றும் 31-ந் தேதிகள், செப்டம்பர் மாதத்தில் 28 மற்றும் 29-ந் தேதிகள், அக்டோபர் மாதத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகள், நவம்பர் மாதத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகள், டிசம்பர் மாதத்தில் 25 மற்றும் 26-ந் தேதிகள் ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

    திருவள்ளூர்:

    நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் மற்றும் பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என உறுதி செய்ய உள்தணிக்கை என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் மாநில அரசு நிதியில் செயல்படும் பணிகள் மற்றும் சென்னை பெருநகர திட்ட அலகுகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

    இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மற்றும் காக்களூர் புட்லுாரை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில் 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய மேம்பாலம் கட்டும் பணி, நடந்து வருகிறது. இதில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் பணி நிறைவடைந்து விட்டது.

    இதேபோல், நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

    இந்த மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில் தலைமையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் ம.சத்தியசீலன் மற்றும் நான்கு உதவி கோட்டப்பொறியாளர்கள், 8 உதவிப்பொறியாளர்கள் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் பட்டாபிராம் பகுதியில் ரெயில்வே கேட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், திருவலங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பால பணிகள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலைபணிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் டில்லிபாபு உடன் இருந்தனர்.

    மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    சென்னை:

    நமது உரிமை காக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், 60 ஆண்டுகள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருந்த மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் இச்சலுகை ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டு ஆண்டுகளில் ரூ.3000 கோடி கூடுதல் வருவாய் ரெயில்வே துறைக்கு கிடைத்த காரணத்தால் இந்த ரத்து தொடரும் என்பது பொறுப்பற்ற அறிவிப்பு, இதனை மறுபரிசீலனை செய்து உடனடியாக சலுகை ரத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள், வியாபாாிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    மதுரை

     மதுரை - தேனி இடையே வருகிற 27-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்த ரெயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா, பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை ரெயில் போக்குவரத்து கடந்த 
    1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓடத் தொடங்கியது. 

    குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரெயில் சேவை பயனுள்ளதாக இருந்தது.

    இந்த ரெயில் பாதை அகலரெயில் பாதை பணிக்காக  2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை - போடி அகல ரெயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி - ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராயும் ஆய்வு செய்தனர்.

     ஆண்டிபட்டி - தேனி 17 கி.மீ. தூரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரெயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார். 
     மதுரை - தேனிக்கு முதல் கட்டமாக ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் மதுரை- தேனி ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 27 முதல் ரெயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட ரெயில் பயணிகள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
    மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரெயில் ஓடுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தோம். 

    பிரதமர் சென்னையில் ரெயில் சேவையை 26-ந் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி - போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும்.மேலும், மதுரை - போடிக்கு மின்சார ரெயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது என்றனர்.

    தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை வழியாக தேனிக்கு தினசரி ரெயில் இயக்க  வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில்  இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2  ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

    இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

    வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

    சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக ரெயில்வே துறை ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கனரக தொழில்நுட்ப எந்திரங்களை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் சென்னை செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்றும் இன்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். இந்த ரெயில்களில் சென்னைக்கு வரும் பயணிகள் வசதிக்காக காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    3 பஸ்கள் மட்டுமே காட்பாடி ரெயில் நிலையத்தில் சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

    உடைமைகளுடன் ரெயிலில் வசதியாக வரும் பயணிகள் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வர படாத பாடுபடுகின்றனர். அவர்கள் பஸ்களில் உடமைகளை வைக்க இடமில்லாமல் திண்டாடுகின்றனர்.

    3 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் மற்ற பயணிகள் காட்பாடியில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் செல்கின்றனர்.

    சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதேபோல வருகிற 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அப்போது கோவை இன்டர்சிட்டி, லால்பாக், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரெயில்களை சென்னை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×