என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train"
திண்டிவனம்:
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6-வது மற்றும் 7-வது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில் தண்ணீர் நிரப்பும் படி பயணிகள் ஒவ்வொரு ரெயில் நிலையமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை.
இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தது. அங்கும் தண்ணி நிரப்பாமல் வேகமாக ரெயில் புறப்பட்டது.
இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பயணிகள் ஆத்திரமடைந்து திண்டிவனம் பாலத்தின் மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
உடனே ரெயில் கார்டு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இறங்கி வந்த பயணிகளிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பும் வசதி இல்லை.
விழுப்புரம் ரெயில் நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்புவதாக கூறி பயணிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் காலதாமதமாக சென்றது.
பொதுமக்கள் அனைவரும் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யும் போக்குவரத்திற்கு உறுதுணையாக இருக்கும் ரெயில்களில் தண்ணீர் பிரச்சினை போன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது பொதுமக்களின் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
திருப்பூர்:
திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயில் (எண்.06030) வருகிற 2-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதுபோல் மேட்டுப் பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரெயில் (எண்.06029) வருகிற 3-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பயணிகள் பாதுகாப்பு கருதி அரக்கோணம் யார்டில் வருகிற 31 மற்றும் 1-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 5 ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரெயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு அரக்கோணம் புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே ரத்து.
மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணி புறப்பட்டு செல்லும் ரெயில் திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து. காலை 11 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் புறப்படும் ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
31, 1-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்கு புறப்படும் திருத்தணி-மூர்மார்க்கெட் முழுவதும் ரத்து. காலை 11.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-திருத்தணி முழுவதும் ரத்து.
பகல் 12 மணிக்கு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 12.35 மணிக்கு திருத்தணி-மூர்மார்க்கெட் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 1.30 மணிகு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து.
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கடம்பத்தூர்- மூர்மார்க்கெட், திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம் இடையே இயக்கப்படுகின்றன.
உடுமலை:
வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை பொறுத்தவரை, பாலக்காடு-திருச்செந்தூர், பாலக்காடு-சென்னை, கோவை-மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, உடுமலை வழியாக மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் உடுமலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்கள் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை வாராந்திர சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
உடுமலை வழியாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது. இதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை 7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வரும்போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதனால், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறிய பயணிகள் பலர் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்றனர். அவர்கள் பழனி உள்ளிட்ட அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் பயணிகள் இறங்கும் போது தங்களுக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். இந்த நிலையில்திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை:
தாம்பரம் பணிமனையில் நாளை (1-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 15 மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தாம்பரம் பணிமனையில் நாளை (1-ந் தேதி) காலை 9.55 முதல் மதியம் 1.55 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.02 மணி, 9.30, 10.12, 10.56, 11.50, 12.20 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு 9.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு-கடற்கரைக்கு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம்-கடற்கரைக்கு 9.15 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு 10.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.செங்கல்பட்டு-கடற்கரைக்கு 11 மணி, 1.30, 12.20, 1 மணிக்கு இயக்கப்படும் ரெயில்கள், திருமால்பூர்-கடற்கரைக்கு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 9.02 மணி, 10.56, செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி, 10.12, 11.50, 12.20 மணிக்கும், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-அரக்கோணம் பகல் 12.40 மணி, செங்கல்பட்டு-கடற்கரை 9.30, 10.30 காஞ்சீபுரம்-கடற்கரைக்கு செல்லும் ரெயில் செங்கல்பட்டில் இருந்து 9.15 மணிக்கு புறப்படும்.
தாம்பரம்-கடற்கரைக்கு காலை 11.50 மணி, மதியம் 1.50 மணி, செங்கல்பட்டு-கடற்கரைக்கு 11.30, 12.20 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரைக்கு காலை 10.45 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
காரைக்குடி சென்னை எழும்பூர் காலை 5.05 மணி ரெயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.
சென்னை எழும்பூர்-மதுரைக்கு 1.40 மணிக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை:
ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு ‘லக்கேஜ்’ கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பயணத்திற்கும் ‘லக்கேஜ்’ கொண்டு செல்லும் அளவு மாறுபடுகிறது.
முதல் வகுப்பு ஏசி முதல் 2-ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை உள்ள பயணிகளுக்கு எத்தனை கிலோ ‘லக்கேஜ்’ கொண்டு செல்லலாம் என்று விதிமுறை உள்ளது.
ஆனால் அதனை இதுவரை ரெயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது ‘லக்கேஜ்’ அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்களில் சமீப காலமாக ‘சங்கிலி’ இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், சக பயணிகள் சிரமப்படுவதை மனதில் வைத்து அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.
பயணத்தின் போது அதிக அளவு உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இது பயண தூரத்துக்கு ஏற்பமாறுபடும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்