search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    திண்டிவனம் பாலத்தின் மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    திண்டிவனம்:

    மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6-வது மற்றும் 7-வது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில் தண்ணீர் நிரப்பும் படி பயணிகள் ஒவ்வொரு ரெயில் நிலையமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை.

    இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தது. அங்கும் தண்ணி நிரப்பாமல் வேகமாக ரெயில் புறப்பட்டது.

    இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பயணிகள் ஆத்திரமடைந்து திண்டிவனம் பாலத்தின் மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    உடனே ரெயில் கார்டு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இறங்கி வந்த பயணிகளிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பும் வசதி இல்லை.

    விழுப்புரம் ரெயில் நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்புவதாக கூறி பயணிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் காலதாமதமாக சென்றது.

    பொதுமக்கள் அனைவரும் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யும் போக்குவரத்திற்கு உறுதுணையாக இருக்கும் ரெயில்களில் தண்ணீர் பிரச்சினை போன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது பொதுமக்களின் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    உசிலம்பட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ரெயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.
    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு மதுரையில் இருந்து தேனி வரை ரெயில்  பாரத பிரதமர் மோடி அவர்கள் சென்னையில் நேற்று இரவு தொடங்கிவைத்தார். 

     மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு வந்த ரயிலை பி. அய்யப்பன் எம்.எல்.ஏ  தலைமையில் அ.தி.மு.க கட்சியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

    மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றிவிட்டு அகல ரெயில் பாதையாகும் மாற்ற நிதி ஒதுக்கி அதற்குண்டான வேலைகளை முடித்து பலமுறை சோதனை ஓட்டம் முடிந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னையி லிருந்து காணொளி காட்சி வாயிலாக மதுரையில் இருந்து தேனி வரை ரயிலை இயக்க கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    மதுரையில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த ரெயிலை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் தலைமையில்  கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளங்களுடன் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பூமா ராஜா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம். வி. பி. ராஜா  மாநில அம்மா பேரவை இணைச் செயலா ளர்  துரைத்தன ராஜன் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் வந்த ெரயிலில் ஏறி தேனி வரை பயணம் செய்தார். 

    இதில் மதுரையிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மதுரையி லிருந்து உசிலம்பட்டி வரை பயணம் செய்து உசிலம்பட்டி பா.ஜ.க நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சொக்கநாதன் மாவட்ட செயலாளர் மொக்கராஜ் நகரச் செயலாளர் முத்தையா ஒன்றிய செய லாளர் கருப்பையா பாஜக நிர்வாகிகள் பாண்டி யராஜன், தீபன் முத்தையா, நாகராஜ் மகளிரணி இன்பராணிஉற்சாகமாக வரவேற்றனர்.இந்தகழ்ச்சியில் பெரும் திரளாக பொதுமக்கள் கூடி ஆரவாரமாக ரெயில்வே வரவேற்றனர்.
    கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி வரைசெல்லும் புதிய ரெயிலுக்கு மானாமதுரை, சிவகங்கையில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலேயர்  காலத்தில்  இருந்து மானாமதுரை, காரைக்குடி என  2 பெரிய ஜங்ஷன் ரெயில் நிலையங்கள்  இருந்தன. அப்போதைய மீட்டர் கேஜ்  ரெயில் பாதையில் ஏராளமான ரெயில்  வசதிகள் இருந்தது. 

    நாடுமுழுவதும்  அகலரெயில் பாதைகளாக மாற்றம் செய்து தற்போது  குறைந்த அளவு  ரெயில்கள் செல்கின்றது. தற்போது காரைக்குடி -மானாமதுரை வரை மின்  பாதை  பணிகளும் நடைபெற்றுவருகிறது. 

    காமராஜர் முதல்வராக இருந்தபோது சென்னை   செல்ல தென்மாவட்ட பயணிகளுக்கு  பயணநேரம்குறையும் வகையில்  விருதுநகர்- மானாமதுரை இடையே  ரெயில் பாதை அமைத்து சென்னைக்கு  இணைப்பு ரெயிலாக மானாமதுரை வரை சென்று வந்தது. தற்போது அந்த ரெயில் பாதையில் செங்கோட்டை-சென்னை வரை வாரந்திர ரெயில்  மட்டுமே செல்கிறது. தினசரி ரெயில் சேவை கிடையாது.
     
    தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை வாரம்ஒருநாள் செல்லும் சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. அந்த ரெயில் வருகிற ஜூன் 4-ந் தேதி எர்ணாகுளத்தில்இருந்து மதியம் புறப்பட்டு மறுநாள் காலை வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வரை  செல்கிறது. 

    இதற்காக ரெயில் நின்று  செல்லும் ரெயில் நிலையங்கள்பட்டியலை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான ஜங்ஷன் ரெயில் நிலையங்கள் தென்காசி, மானாமதுரை நிலையங்களில்  இந்த ரெயில்  நிற்காது. இதுதவிர விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகங்கை மாவட்ட தலைநகர் சிவகங்கை ஆகிய  ஊர்களில் ரெயில் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டு  உள்ளது. 

    இந்தியாவில்  முக்கியமான புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் வடமாநிலங்களுக்கு  செல்லும் அனைத்து  அதிவிரைவு  எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களில்  நின்று செல்கிறது. ராமநாதபுரம் பகுதியில் இருந்தும்   ரெயில்நிலையங்கள் இல்லாத ஊர்களான கமுதி,முதுகுளத்தூர், இளையான்குடி,  பார்த்திபனூர், வீரசோழன், அபிராமம்  போன்ற  ஊர்களில்  இருந்தும் ஏராளமான பயணிகள் சென்னை  மற்றும்  பிறமாநிலங்களுக்கு செல்ல மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு  வருகின்றனர். 

    தற்போது புதிதாக விடப்பட்டுள்ள வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயிலை  மானாமதுரை, சிவகங்கையில் நின்று  செல்ல மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    மீட்டர்கேஜ் பாதை   இருந்தபோது கொல்லத்தில் இருந்து  நாகூர் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி  தினமும் இருந்தது. அகலரெயில்பாதை வந்த பிறகு ரெயில்களில் தண்ணீர் நிரப்பும் வசதி கொண்ட மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்  நிற்காமல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகளை புறக்கணித்து  செல்வதா?  என பயணிகள் கேள்வி எழுப்பினர்.
      
    இதுபற்றி ஓய்வுபெற்ற ரெயில் என்ஜின் ஓட்டுநர், மாவட்ட  காங்கிரஸ் மனித உரிமைகள் தலைவர் ராஜாராம்  கூறுகையில்,  தமிழகத்தில்  அதிக அளவில் ரெயில்சேவைவசதி  குறைக்கப்பட்டு உள்ளது.   

    வட இந்தியாவில் அதிக   அளவில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்  வசதிகள்  தினசரி உள்ளது. ஆனால் தமிழகத்தில் போதுமான ரெயில் சேவைகள் இல்லை.  கொரோனாகாலத்தில் நிறுத்தப்பட்ட  பயணிகள் ரெயில் சேவை பலநகரங்களில் தொடங்கப்படவில்லை.  

    தற்போது விடப்பட்ட புதிய ரெயில் கேராளாவில்  அதிக ஊர்களில் நின்று செல்லும் வகையிலும், தமிழகத்தில் முக்கியமான  ரெயில் நிலையங்களான  தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய  ஊர்களில் ரெயில் நிற்காது என்றும்  அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் சிவகங்கை  மாவட்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து  உள்ளனர்.

    இது குறித்து மதுரை ரெயில்வே  கோட்ட அதிகாரிகள் புதிய ரெயிலை   தென்காசி,  மானாமதுரை, சிவகங்கை  ஊர்களில் நின்று செல்ல நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து ரெயில்வே வாரிய  துறைக்கும் மனுக்கள் அனுப்பி வைக்க பட்டு உள்ளன.
    ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

    திருப்பூர்:

    திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயில் (எண்.06030) வருகிற 2-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதுபோல் மேட்டுப் பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரெயில் (எண்.06029) வருகிற 3-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    அந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    31, 1-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பயணிகள் பாதுகாப்பு கருதி அரக்கோணம் யார்டில் வருகிற 31 மற்றும் 1-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 5 ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரெயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு அரக்கோணம் புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே ரத்து.

    மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணி புறப்பட்டு செல்லும் ரெயில் திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து. காலை 11 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் புறப்படும் ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

    31, 1-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்கு புறப்படும் திருத்தணி-மூர்மார்க்கெட் முழுவதும் ரத்து. காலை 11.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-திருத்தணி முழுவதும் ரத்து.

    பகல் 12 மணிக்கு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 12.35 மணிக்கு திருத்தணி-மூர்மார்க்கெட் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 1.30 மணிகு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து.

    மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கடம்பத்தூர்- மூர்மார்க்கெட், திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம் இடையே இயக்கப்படுகின்றன.

    கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
    மதுரை

    மதுரை- ராமேசுவரம் இடையே காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும், முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்கள்  இயக்கப்பட்டு வந்தன. இவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.   

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுரை- ராமேசுவரம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படவில்லை.  இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

    தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் மதுரை-ராமேசு வரம் இடையே பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். 

    இதைத்தொடர்ந்து  2 ஆண்டுகளுக்கு பின்னர்  இன்று முதல் மதுரை- ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று அறிவி க்கப்பட்டது. அதன்படி இன்று  (30-ந் தேதி)  மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு மதுரை-ராமேசுவரம்  பயணிகள் ெரயில்  புறப்பட்டுச் சென்றது. 

    இந்த ரெயில் காலை 10:15 மணிக்கு ராமேசுவரத்துக்கு போய் சேர்ந்தது.மறு மார்க்கத்தில் ராமேசு வரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.55 மணிக்கு மதுரை வந்து சேரும். 

    இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜ கம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    மதுரை- ராமேசுவரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவது, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலில் பயணிகள் மிகவும் உற்சாகமாக பயணம் செய்தனர். 
    பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    உடுமலை:

    வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை பொறுத்தவரை, பாலக்காடு-திருச்செந்தூர், பாலக்காடு-சென்னை, கோவை-மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, உடுமலை வழியாக மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் உடுமலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    தினசரி இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்கள் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை வாராந்திர சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை வழியாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது. இதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

    அதன்படி நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை 7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வரும்போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அதனால், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறிய பயணிகள் பலர் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்றனர். அவர்கள் பழனி உள்ளிட்ட அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் பயணிகள் இறங்கும் போது தங்களுக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். இந்த நிலையில்திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

    மதுரை - தேனி ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை

    மதுரை - தேனி - மதுரை ரெயில்கள் கால அட்டவணையில் நாளை (1-ந் தேதி) முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் (06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரெயில் (06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு மதுரை வந்து சேரும்.
    சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு 9.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தாம்பரம் பணிமனையில் நாளை (1-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 15 மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாம்பரம் பணிமனையில் நாளை (1-ந் தேதி) காலை 9.55 முதல் மதியம் 1.55 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.02 மணி, 9.30, 10.12, 10.56, 11.50, 12.20 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு 9.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் செங்கல்பட்டு-கடற்கரைக்கு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம்-கடற்கரைக்கு 9.15 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு 10.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.செங்கல்பட்டு-கடற்கரைக்கு 11 மணி, 1.30, 12.20, 1 மணிக்கு இயக்கப்படும் ரெயில்கள், திருமால்பூர்-கடற்கரைக்கு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதைதொடர்ந்து சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 9.02 மணி, 10.56, செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி, 10.12, 11.50, 12.20 மணிக்கும், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை-அரக்கோணம் பகல் 12.40 மணி, செங்கல்பட்டு-கடற்கரை 9.30, 10.30 காஞ்சீபுரம்-கடற்கரைக்கு செல்லும் ரெயில் செங்கல்பட்டில் இருந்து 9.15 மணிக்கு புறப்படும்.

    தாம்பரம்-கடற்கரைக்கு காலை 11.50 மணி, மதியம் 1.50 மணி, செங்கல்பட்டு-கடற்கரைக்கு 11.30, 12.20 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரைக்கு காலை 10.45 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    காரைக்குடி சென்னை எழும்பூர் காலை 5.05 மணி ரெயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-மதுரைக்கு 1.40 மணிக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

    எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

     பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
    ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு ‘லக்கேஜ்’ கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பயணத்திற்கும் ‘லக்கேஜ்’ கொண்டு செல்லும் அளவு மாறுபடுகிறது.

    முதல் வகுப்பு ஏசி முதல் 2-ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை உள்ள பயணிகளுக்கு எத்தனை கிலோ ‘லக்கேஜ்’ கொண்டு செல்லலாம் என்று விதிமுறை உள்ளது.

    ஆனால் அதனை இதுவரை ரெயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது ‘லக்கேஜ்’ அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரெயில்களில் சமீப காலமாக ‘சங்கிலி’ இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், சக பயணிகள் சிரமப்படுவதை மனதில் வைத்து அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.

    பயணத்தின் போது அதிக அளவு உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.

    இந்த நிலையில் ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

    மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இது பயண தூரத்துக்கு ஏற்பமாறுபடும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் சேவை தொடங்கியது.
    மதுரை

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே வருகிற 12-ந் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.  

    நெல்லையில் இருந்து  காலை 11.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கு நெல்லை செல்லும். இந்த ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரியில் நின்று செல்லும். 

    இது தவிர பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பாலக்காடு - திருச்செந்தூர், திருச்செந்தூர் - நெல்லை ஆகிய விரைவு ரெயில்களில் வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையும், நெல்லை - திருச்செந்தூர், பாலக்காடு -  திருச்செந்தூர் ஆகிய விரைவு ரெயில்களில் வருகிற 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×