search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.
    • நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் நடிகராக அறிமுகமாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ட்ரெயின்' (Train). இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


    விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.


    இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் மிஷ்கின் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். 'ட்ரெயின்'(Train) என தலைப்பிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.


    இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின்' திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


    இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
    • அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரெயில் நிலையம் அருகில் இன்று காலை 10.20 மணி முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரெயில், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து தானாபூர் செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அதே போன்று காட்பாடி மார்க்கமாக செல்லும் தானாபூர்-பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில், சென்னையிலிருந்து ஷீரடி செல்லும் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் ஆகியவை காலதாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் காலை 10.20 மணிக்கு சிக்னல் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே திருவலத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பராமரிப்பு முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது. இது ஏன் என்றும் ரெயில் பயணிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    • மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
    • பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கி உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ் போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம்.
    • மாணவன் சீருடையில் இருந்துள்ளான்.

    சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ், ரெயில்களில் மீது ஏறி சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும் வழக்குப் பதிவு செய்தும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அபாயகரமான பயணம் அவ்வப்போது தொடர்கிறது.

    உயிரை பொருட்படுத்தாமல் சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் இது போன்ற சம்பவத்தால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பும் நேர்ந்து விடுகிறது. பஸ், ரெயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய செயல்களை போலீசார் கண்காணித்த போதும் திடீரென பயணத்தின் போது பஸ், ரெயில்கள் மீது ஏறி தொங்கி ஆட்டம் போடுகிற சம்பவம் சென்னையில் தொடர் கதையாக நடக்கிறது.

    அந்த வகையில் தற்போது பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பொது மக்களை பதற வைத்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயிலில் மயிலாப்பூரில் இருந்து ஏறிய பள்ளி மாணவன் ஒருவன் திடீரென பதறவைக்கும் வகையில் ஜன்னலில் தொங்கிய படி பயணம் செய்தார்.

    100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்ற அந்த ரெயிலில் மாணவன் தன் உயிரை பொருட்படுத்தாமல் ஜன்னல் மீது நின்றும் தொங்கியும் பயணம் செய்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை ஒரு பயணி செல்போனில் படம் எடுத்து அதை வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பல ரெயில்களை கடந்து மாணவன் தொங்கிய படி சாகச செயலில் ஈடுபட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. சாகச செயலில் ஈடுபட்ட மாணவன் சீருடையில் இருந்துள்ளான். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    விபத்தை உணராமல் சிறிதும் அச்சமின்றி சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவனின் செயல் சிறிது நேரம் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ? ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தையும், பீதியையும் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியது.

    மாணவர்களின் சாகச நிகழ்ச்சியை படம் பிடித்து வெளியிட்ட பயணி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ரெயில் பயணத்தில் நடப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதனை தொடர்ந்து ரெயில் பாதுகாப்பு படை போலீசார் அந்த ரெயில் எண், பயண நேரம், நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து கிடக்கின்றன
    • இடிபாடுகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரம்

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட் டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பெய்த கனமழைக்கு ஆடர்லி, ஹில்கு ரோவ் இடையே 5க்கு மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறை கள், மரங்கள் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலை ெரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ெரயில்வே பணி மனை ஊழியர்கள் தண்ட வாளங்களில் பராமரிப்பு பணியை முடித்ததால் 8-ந் தேதி மலை ெரயில் இயக்கப்பட்டது.ஆனால் அன்றைய தினம் இரவு பெய்த கன மழையால் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்வாளத்தில் மரம், பாறைகள் சரிந்து விழுந்தன.

    இதனால் கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ெரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்ேவ நிர்வாகம் அறிவித்தது.

    இந்நிலையில் மேட்டுப் பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் மேலும் சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த மரம், பாறைகளை அகற்றப்படாததால் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மலை ெரயில் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் மலை ெரயிலில் பயணம் செய்ய காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • இந்த ரெயில்கள் இன்று முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.
    • கோவை- திண்டுக்கல் சிறப்பு ரெயில் (06077)கோவையில் இருந்து இன்று காலை 9.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.13 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

    கோவை,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த ரெயில்கள் இன்று முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன. கோவை- திண்டுக்கல் சிறப்பு ரெயில் (06077)கோவையில் இருந்து இன்று காலை 9.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.13 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். அங்கிருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு உடுமலைப் பேட்டை சென்றடையும். அங்கிருந்து 11.01 மணிக்கு புறப்பட்டு 11.38 மணிக்கு பழனியை சென்றடையும். அங்கிருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.

    திண்டுக்கல்- கோவை சிறப்பு ரெயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு 2.55 மணிக்கு பழனியை சென்றடையும்.

    அங்கிருந்து 3 மணிக்கு புறப்பட்டு 3.33 மணிக்கு உடுமலைப்பேட்டையை சென்றடையும்.

    அங்கிருந்து 3.34 மணிக்கு புறப்பட்டு 4.18 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடையும். அங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கோவைக்கு வந்து சேரும்.

    • அந்தியோதயா ரெயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் ஜெக.சண்முகம் தலைமையில் சீர்காழியில் நடந்தது.

    மாவட்ட தலைவர் சுந்தரராசன், சிறப்பு தலைவர் ஜெயசந்திரன், வட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.

    வட்ட பொருளர் தவகுமார் வரவேற்றார் .

    வாழ்வியலை நோக்கி என்ற தலைப்பில் தியாகராஜன், திருக்குறளும் மனித வாழ்வும் என்ற தலைப்பில் சக்ரபாணியும், சிந்திக்க சில நிமிடங்கள் என்ற தலைப்பில் வீரபாண்டியும், குண்டலகேசி என்ற தலைப்பில் சாமிதுரையும் சொற்பொழிவாற்றினர்.

    வைத்தினாசாமி, சக்கரவர்த்தி, மணிவாசகம், சிவபெருமான், ராஜா,ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் உரிய காலத்தில் டி.ஏ நிலுவையுடன் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

    மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் நகரில் அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்திட நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, அந்தியோதயா ரயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் செயலர் சாம்சன் கில்பர்ட் நன்றி கூறினார்.

    • ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
    • கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.

    அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

    பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.

    மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.

    இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.

    மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

    இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

    காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

    இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவிப்பு
    • கல்லிடைக்குறிச்சிக்கு இரவு 7.31 மணிக்கு வந்து, அங்கிருந்து இரவு 7.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்

    கோவை,

    திருநெல்வேலி-மேட்டுப் பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில்(எண்:06030) ஞாயிற்றுக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    இதேபோல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்(எண்:06029) திங்கட்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    இந்த நிலையில் சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதவாது:-

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான சிறப்புரெயில் தற்போது செல்லும் வழியில் உள்ள நிறுத்தங்களுடன் கூடுதலாக கல்லிடைக்குறிச்சியில் நிலையத்துக்கு இரவு 7.31 மணிக்கு சென்றடைந்து, அங்கிருந்து இரவு 7.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    இதேபோல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 5.51 மணிக்கு கல்லிடைக்குறிச்சி ரெயில்நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து 5.52 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×