என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transport"

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை.

    தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்தில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அண்ணாபூங்கா அருகே உள்ள 2 திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து கழக ஓய்வு ஊதியர்களுக்கு 7 ஆண்டுகளாக எந்த பலனும் கிடைக்காதால் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை எனில் விரைவில் குடும்பத்துடன் டெப்போ முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எந்த அரசு வந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    • அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
    • கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோ ட்டம் நாளை மறுநா ள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.இதில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் பெட்டத்தாபுரம், திம்ம ம்பாளையம், மங்களக்கரை புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக காந்திநகர் செல்ல வேண்டும்.

    அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் வழியாக தொட்டிபாளையம் பெள்ளாதி, கண்ணார்பா ளையம் வழியாக மத்தம்பா ளையம் செல்லும்.

    தேர் திருவிழா நடைபெறும் 6 மற்றும் பந்த சேவை நிகழ்வு நடைபெறும் 7-ந் தேதி ஆகிய இரு தினங்களிலம் இந்த போக்குவரத்து மாற்றமானது இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவை-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்-கோவை செல்லும் வாக னங்கள் இதனை பின்பற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை
    • வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பஸ்கள் வருவதே கிடையாது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நெல்லையின் புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் சென்று வருகிறது. செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பஸ்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்றும் பிற்பகலில் இந்த பஸ்கள் வரவில்லை. இதனால் அந்த பஸ்சுக்காக காத்திருந்த ஏராளமான பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆத்தூர் பயணிகள் கூறியதாவது:-

    நாங்கள் ஆத்தூரில் இருந்து பல்வேறு காரணங்களுக்கு நெல்லைக்கு காலையில் வருவோம். பின்னர் எங்கள் பணிகள் முடிந்த பின்னர் மதியம் மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு செல்லும் பஸ்சில் புறப்பட்டு செல்வோம். அந்த பஸ்சை விட்டால் அதன்பின்னர் 1.15 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஆத்தூர் செல்வோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த 2 பஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை.

    குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் வருவதே கிடையாது. இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை. மதியம் 12 மணிக்கு புதிய பஸ் நிலையம் வந்தால் இந்த 2 பஸ்களும் வராததால் அங்கேயே கால்கடுக்க காத்திருந்து அடுத்து 2.30 மணிக்கு ஆத்தூர் செல்லும் பஸ்சில்தான் செல்ல வேண்டி உள்ளது.

    சில நேரங்களில் அந்த பஸ்சும் வராது. இதனால் மாலை 4 மணிக்கு செல்லும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு செல்வோம். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, முன்பு போல 12.30 மற்றும் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை சீரான முறையில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம்
    • மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டமானது வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதேபோல திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் 14-ந்தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. சித்திரைத் தேர்த் திருவிழாவிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அரசு துறை அலுவலர்களுடனான, ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் போக்குவரத்து மாற்றம் குறித்து கூறும்போது, சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கனரக சரக்கு வாகனங்கள் கீழ்காணும் வகையில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 18-ந்தேதி மதுரை மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வளநாடு கைகாட்டியில் இருந்து மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.துறையூரிலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி ரவுண்டானா, முசிறி பெரியார் பாலம், குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.முசிறி மற்றும் சேலத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி பெரியார் பாலம், குளித்தலை, பெட்டவா ய்த்தலை, ஜீயபுரம், குடமுருட்டிபாலம், வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.சென்னை மார்க்கத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், வழியாக சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (என்.எச்.-38) சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும்.சிதம்பரம், அரியலூர் மார்க்கத்திலிருந்து (என்.எச்.-81) வரும் கனரக சரக்கு வாகனங்கள் பெருவளநல்லூரிலிருந்து குமுளுர், தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று பெரம்பலூர் மார்க்கமாக சென்னை செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ஜனகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் பஞ்சாயத்து மயிலோடை பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளநீர் இந்த பாலத்தை மூழ்கடித்து செல்வதால் இதில் உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து மயிலோடையில் புதிய பாலம் கட்ட ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த பாலம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தொடக்கி வைத்தார்.

    இதில் யூனியன் சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், என்ஜினீயர் வெள்ளப்பாண்டியன், பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள், கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிப்பு
    • திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவிப்பு

    திருச்சி,

    திருச்சி மாநகரில் பிரதான வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும், மற்றங்களையும் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில், மாற்று பக்க வாகன நிறுத்தும் திட்டத்தை மாநகர போக்குவரத்து போலீசார் அமல்படுத்தினர்.அதன்படி சாலை ரோடு மற்றும் மெயின் கார்டு கேட் (வலது) ஆகிய இடங்களில் சாலையோரம் வாகனங்கள் ஒருபுறம் 15 நாட்களுக்கும், மறுபுறம் அடுத்த 15 நாட்களுக்கும் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. மதுரை ரோட்டில் ஒரு நாள் இடது பக்கமும், மறுநாள் வலது புறமும் பார்க்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த விதிமுறைகளை வாகன ஓட்டிகள் தொடர்ந்து மீறுகின்றனர்.கடந்த சில வாரங்களாக சாலையோரத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. குறிப்பாக சாலை ரோடு மற்றும் மெயின் காடு கேட் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இரு பக்கத்திலும் வாகனம் நிறுத்தும் போது வேகமாக செல்லும் வாகனங்களால் பயணிகளும் அப்பகுதியை கடப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.மரக்கடை பகுதியில் ஒரு நாள் மற்றும் மறுநாள் பார்க்கிங் விதிகளை ஏற்க வாகன ஓட்டிகள் மறுக்கிறார்கள். மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி பலனளிக்காமல் உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்டபோது,நாங்கள் அவ்வப்போது கண்காணித்து போக்குவரத்து பாதையை சரி செய்து வருகிறோம். ஆனால் சில வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு,
    • 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.

    தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சங்ககிரி ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். 4 மற்றும் 5-ந் தேதிகளில், சங்ககிரி ரவுண்டானாவில் இருந்து வேலூர் மற்றும் ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேலம் ரோடு, மலை சுத்தி ரோடு, வாலரைகேட் வழியாக செல்ல வேண்டும். வாலரை கேட்டிலிருந்து நாமக்கல், சேலம், சங்ககிரி செல்லும் வானங்கள் மலைசுத்திரோடு வழியாக செல்ல வேண்டும்.

    தேர் திருவிழாவின் போது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பழமை வாய்ந்த திருத்தேரின் நன்மையைக் கருதி, பக்தர்கள் தேரின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியவில்லை.

    எனவே பக்தர்கள் அனைத்து பூஜைகளையும், திருத்தேரின் முன்பாக செய்து, சாமி தரிசனம் செய்து அருள்பெருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மனைவியுடன் துணி எடுக்க ஈரோடு சென்றார்.
    • நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    பெருந்துறை, 

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் பெருந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று அவரது மனைவியுடன் துணி எடுக்க ஈரோடு சென்றார். பின்னர் மீண்டும் மாலை 4 மணியளிவில் வீடு திரும்பினார்.

    அப்போது அவர்களது வீட்டின் கதவு திறந்து இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாதேஸ்வ ரன் காஞ்சிக்கோ வில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
    • பள்ளத்தில் சிக்கிய லாரியால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் சாலியர் தெருவில் கடந்த சில மாதங்க ளாக மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாய் அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சாலியார் தெரு வழியாக சென்ற மினி லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாலை போட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது கடந்த சில மாதங்களாக குழாய் பதிப்பதாகக்கூறி இருந்த சாலையையும் உடைத்து மண் சாலையாக மாற்றி விட்டார்கள். எனவே பணிகளை விரைந்து முடித்து தார்ச்சாலை போட வேண்டும் என்றனர்.

    • கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகை.
    • முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    • தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ், லாரிகள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி சாலையில் பழைய பேட்டை கண்டியபேரி அருகே சாலை வளைவில் அமைந்துள்ள பழமையான தரைப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

    இதனையொட்டி அந்த வழியாக நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் பஸ், லாரிகளும், இதே போல் மறு மார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ் மற்றும் லாரிகள் செல்வ தற்கும் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதற்கான முன்னோட்டம் இன்று நடைபெற்றது. அதே நேரத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கண்டியப்பேரி வழியாக செல்வதற்கு தற்காலிகமாக மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில் தென்காசிக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், பேட்டை, திருப்பணி கரிசல் குளம் வழியாக அபிஷேகப்பட்டிக்கு செல்லாமல் காட்சி மண்டபத்தில் இருந்து வழுக்கோடை வழியாக கண்டியப்பேரி பகுதிக்கு சென்று விட்டது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.

    தகவல் அறிந்த போக்கு வரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்கு வரத்து நெருக்கடியை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டு, புதுப் பேட்டை ரொட்டி கடை பஸ் நிறுத்தம் வழியாக கோடீஸ்வரன் நகருக்கு சென்று மீண்டும் வழுக்கோ டை வந்து தொண்டர் சன்னதி வழியாக மாநருக்குள் இயக்கப்பட்டது.

    இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் புதுப்பேட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

    காலையில் தென் காசியில் இருந்து வரும் பஸ்கள் எளிதாக நெல்லை க்கு வந்து விடும் நிலையில் நெல்லை யிலிருந்து தென்காசி செல்வதற்கு பெரும் பாலான பகுதி களை பஸ் சுற்றி செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்ப தாக பயணி கள் புகார் கூறினர்.

    ×