என் மலர்
நீங்கள் தேடியது "Transport"
- தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ், லாரிகள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
- தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டது.
நெல்லை:
நெல்லை-தென்காசி சாலையில் பழைய பேட்டை கண்டியபேரி அருகே சாலை வளைவில் அமைந்துள்ள பழமையான தரைப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.
இதனையொட்டி அந்த வழியாக நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் பஸ், லாரிகளும், இதே போல் மறு மார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ் மற்றும் லாரிகள் செல்வ தற்கும் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதற்கான முன்னோட்டம் இன்று நடைபெற்றது. அதே நேரத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கண்டியப்பேரி வழியாக செல்வதற்கு தற்காலிகமாக மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில் தென்காசிக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், பேட்டை, திருப்பணி கரிசல் குளம் வழியாக அபிஷேகப்பட்டிக்கு செல்லாமல் காட்சி மண்டபத்தில் இருந்து வழுக்கோடை வழியாக கண்டியப்பேரி பகுதிக்கு சென்று விட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.
தகவல் அறிந்த போக்கு வரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்கு வரத்து நெருக்கடியை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டு, புதுப் பேட்டை ரொட்டி கடை பஸ் நிறுத்தம் வழியாக கோடீஸ்வரன் நகருக்கு சென்று மீண்டும் வழுக்கோ டை வந்து தொண்டர் சன்னதி வழியாக மாநருக்குள் இயக்கப்பட்டது.
இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் புதுப்பேட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
காலையில் தென் காசியில் இருந்து வரும் பஸ்கள் எளிதாக நெல்லை க்கு வந்து விடும் நிலையில் நெல்லை யிலிருந்து தென்காசி செல்வதற்கு பெரும் பாலான பகுதி களை பஸ் சுற்றி செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்ப தாக பயணி கள் புகார் கூறினர்.
- ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக்கொள்ளலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறும் ஆண் டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக குற்றத்த–டுப்பு நடவடிக்கையாக தேர் பவனி வரும் பாதையான 4 ரதவீதிகள், கோவில் உட்பு–றம், வெளிப்பிரகாரம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள்,
உயர் கட்டிடங்களில் பைனாக்குலர், நவீன கேம–ராக்கள் பொருத்தியும், உயர் கண்காணிப்பு கோபு–ரங்கள் அமைத்தும், காவல் துறையி–னர் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டும் அதன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
தேரோட்டத்தை முன் னிட்டு மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் நாளை (22-ந்தேதி) காலை 5 மணி முதல் கிருஷ்ணன்கோவில், பாட் டக்குளம் விலக்கில் இருந்து மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க் கமாக வந்து திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையம் செல்வதற்கும்,
ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே.–புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சாபுரம், கம்மாப் பட்டி, ஆத்துக்கடை ஜங் ஷன், ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழியாக மதுரை செல்லவும், சிவகாசியில் இருந்து ராஜ–பாளையம் செல்லும் வாக–னங்கள் மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க்கமாக வந்து திருப் பாற்கடல் வழியாக ராஜபா–ளையம் செல்லவேண்டும்.
மேலும் மதுரையில் இருந்து வரும் அரசு பயணியர் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பு, பஸ் நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழியாக ராமகிருஷ் ணாபுரம், சர்ச் சந்திப்பு, செங்குளம் விலக்கு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, திருப்பாற் கடல் வழியாக ராஜபாளைம் செல்லவேண்டும்.
ராஜபாளைத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்து–கள் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சா–புரம், கம்மாப்பட்டி, ஆத் துக்கடை ஜங்ஷன், பேருந்து நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழி–யாக ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழி–யாக மதுரை செல்லவேண் டும்.
வாகன நிறுத்துமிடங்கள்
மேலும் தேரோட்டத்திற்கு மதுரையில் இருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூ–ரில் உள்ள மங்காபுரம் பள்ளி மைதானம், கான் வென்ட் பள்ளி மைதானம், ஜி.கே.பர்னிச்சர் வடக்கே உள் மைதானம், ராஜபாளை–யத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரியகு–ளம் கண்மாள் சுற்றியுள்ள காலி–யிடங்களிலும், சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
+2
- தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
- வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன.
நெல்லை:
நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அகலப்படுத்த கோரிக்கை
மாநகர பகுதியில் தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பாளை மத்திய சிறையில் இருந்து ரெட்டியார்பட்டி விலக்கு வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 22 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் அகலப்படுத்த பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன. இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரா வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இருந்து ரெயில்வே மேம்பாலத்தை கடந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் கடக்கும் பகுதியில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சாலைகள் அளவுக்கு ஏற்ப இந்த பாலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் இருபுறத்தில் இருந்தும் பஸ்கள் வேகமாக வரும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது. இதனால் இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், விபத்தை தடுக்க சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கால்வாயை விரிவாக்கம் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் மண் பரிசோதனை செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்வதற்கு ஆகும் செலவு குறித்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றி நடுவில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.80 கோடி திட்ட மதிப்பீடாக வழங்கப்பட்டது.
பணிகள் தொடக்கம்
அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் தற்போது சாலைகள் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாளையங்கல்வாயை இருபுறமும் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
பைபாஸ் சாலை சுமார் 20 மீட்டர் அகலத்திலும், நடுவில் சென்டர் மீடியன் அமைக்க கூடுதல் இடமும் ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் பேட்டி
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-
வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலையில் விபத்தை குறைப்பதற்காக சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி இருந்தோம். அதன்படி முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சிறிய பாலங்கள் மற்றும் பாளையங்கால்வாயை அகலப்படுத்தும் பணிகளும் அடங்கும். முதல் கட்டமாக வடக்கு பைபாசில் ரெயில்வே மேம்பாலத்திற்கு அடுத்ததாக இந்த அகலமான நான்கு வழிச்சாலை ஆரம்பித்து புதிய பஸ் நிலையம் வரையிலும் நான்கு வழிச்சாலையாகவே அமைக்கப்படுகிறது.
நடுவில் 1.2 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இருபுறமும் தலா 9 மீட்டர் அகலத்தில் சாலைகள் இருக்கும். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சிக்னல் பகுதியில் ரவுண்டானா ஏதும் அமைக்கப்படவில்லை. அங்கும் நான்கு வழிச்சாலை தான் அமைக்கப்படுகிறது. அங்கு நவீன தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.
ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி
இந்த பணிகள் முடிந்த பின்னரே தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் மற்றும் வண்ணார்பேட்டை பாளையங்கால்வாய் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆகியவை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இந்த 2 பாலங்களையும் அகலப்படுத்துவதற்காக ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
ரெயில்வே சார்பில் ஒப்புதல் கிடைத்ததும் அந்த 2 பாலங்களையும் அகலப்படுத்தும் பணி தொடங்கும். தற்போது கணக்கீட்டின்படி 5.8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. செல்லப் பாண்டியன் மேம்பாலம் அதே நிலையிலேயே நான்கு வழி சாலை மேம்பாலமாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இது தவிர சாலைகளின் நடுவில் அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் தச்சநல்லூர் ஆற்று பாலத்துக்கு அருகே வடபகுதியில் புதிதாக ஒரு ஆற்றுப் பாலம் கட்டப்பட உள்ளது. அவை இரண்டும் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை போலவே ஒரு வழிப்பாதைகளாக செயல்படும்.
இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி விபத்துகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
- பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தனர்.
இதனையடுத்து நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்.
இதில் மானூர் யூனியன் கவுன்சிலர் முபின் முகமது இஸ்மாயில், பாளை யூனியன் கவுன்சிலர் ராஜாராம், திருவேங்க டநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கும ரேசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் கவிதா, நிர்வாகிகள் சந்தி ரசேகர், ஆவுடையப்பன், தி.மு.க. கிளை செயலாளர் குன்னத்தூர் ராஜகோபால், வேலாயுதம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக இருந்த மதிவாணன், சேலத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் இன்று காலை கோவை மாநகர அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
- திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து
திருச்செங்கோட வட்டார
போக்குவரத்து அலுவலர்
(பொறுப்பு) சரவணன்
ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
- சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
- போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கும் படி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டார்.
அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், டவுன் உதவி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.
அப்போது டவுன் ரத வீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று சாலை களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.
அப்போது மவுண்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.
பின்னர் அந்த மாடுகளை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
அதன் உரிமையாளர்க ளுக்கு, உரிய அபராதம் செலுத்தி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அபராதம் இன்று மாலை வரை உரிமையாளர்களால் செலுத்தப் படவில்லை எனில் அந்த மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பதற்கு சுகாதார அலுவலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
- போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் பஸ் நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மாநகர நல அலுவலர் சரோஜா ஆலோசனையின் பேரில் உதவி ஆணையர் காளி முத்து தலைமையில் சுகா தார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உதவி பொறியாளர் முருகன் மேற்பார்வையில் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அது மட்டுமின்றிமேலும் 100-க்கும் மேற்பட்ட கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
- மகாளாய அமாவாசையையொட்டி ராமேசுவரம், சமயபுரம் செல்ல 2 நாட்களுக்கு 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மகாளாய அமாவாசை யையொட்டி ராமேஸ்வரம், திருவையாறு, பூம்புகார், கோடியக்கரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு 270 சிறப்பு பஸ்கள் நாளை முதல் 2 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) மே லாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம்( கும்ப கோணம்) சார்பில் மகாளாய அமாவா சையையொட்டி நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) ஆகிய 2 நாட்களில் பொது மக்களின் வசதிக்காக ராமேசுவரத்திற்கு இரவு பகலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, புதுக்கோட் டை, திருத்துறைப் பூண்டி, வேதாரணியம், மயிலாடு துறை, திருவாரூர், நாகதப் பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய பகுதி களில் இருந்து இயக்கப்படு கிறது.
மேலும் தஞ்சாவூர், கும்ப கோணம், திருக்காட்டுப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய இடங் களில் இருந்து திருவை யாருக்கும் அதே போல திருவையாற்றில் இருந்து மேற்படி அனைத்து ஊர்க ளுக்கும் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களில் இருந்து பூம்புகாருக்கும் அதே போல பூம்புகாரில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதார ணியம் ஆகிய இடங்களி லிருந்து கோடியகரைக்கு 25 சிறப்பு பஸ்களும், திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்தி ரம் பஸ் நிலையங்களில் இருந்தும், பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களில் இருந்தும் சமயபுரத்திற்கும், ஸ்ரீரங்கத் துக்கும் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அனைத்து வழித்தடங்களிலும் மொத்தமாக 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
ராமேசுவரம் செல்லும் பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பஸ்களில் பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமின்றி பயணம் செய்வதுடன் போக்கு வரத்து கழகங்களும் அதற்கு ஏற்ப பஸ் வசதிகளை செய்ய ஏதுவாகும்.
எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் மேலும் முக்கிய பேருந்து நிலையங் களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோத கர்கள் பணியாளர்கள் பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அடுத்த 2 மாத காலத்திற்கு தமிழகத்தில் இயக்கிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- 2 மாத காலத்திற்குள் வெளி மாநில பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்றிட உத்தரவு.
பர்மிட் பிரச்சினை, விதிமுறைகள் மீறல், கூடுதல் கடட்ண வசூல் உள்ளிட்ட புகாரில் 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.
வரி கட்டிய பேருந்துகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும் என போக்குவரத்துத் தறை ஆணையர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக போக்குவரத்து துறையால் சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அடுத்த 2 மாத காலத்திற்கு தமிழகத்தில் இயக்கிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 28ம் தேதி வரை வெளி மாநில பேருந்துகள் தமிழகத்தில் இயங்கிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
2 மாத காலத்திற்குள் வெளி மாநில பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற போக்குவரத்துத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
50 பேருந்துகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பேருந்துகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இன்று மாலைக்குள் விடுவிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
- போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
- மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,
மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.
- 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.
- விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி விமான நிலையம் உள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இதில் 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.
அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.
விமான நிலைய நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும் மத்தியப்படைகளுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி. கே.சிங் கூறியதாவது:-
உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலைய பணிகள் நிறை வடைந்துள்ளன. விமான நிலையத்திற்கு உரிமை வழங்கும் பணி நடந்து வருகிறது.
அது தயாரான பிறகு 9 இருக்கைகள் கொண்ட விமானங்கள் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது.
இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என கூறினார்.
வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு இதன் மூலம் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
வேலூருக்கு மருத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய பயன்பாடாக இருக்கும். விரைவில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.