என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TREE CALVES"
- பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும்
- தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.
ஆலங்குடி,
பிரதமர் மோடியின் 73 -வது பிறந்தநாள் விழாவை ஓராண்டு காலத்திற்கு கொண்டாட பா.ஜ.க. கட்சியினர் திட்டமிட்டு ள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோ ட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
வடகாடு முக்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜெகதீசன் கலந்து கொண்டு தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.
பொது மக்களுக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை அக்கறையோடு வளர்க்குமாறு அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஓட்டுனர் அணி குமார், முத்துவேல் வாண்டையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பட்டுக்கோட்டை சாலை மற்றும் திருச்சி சாலையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.விழாவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன், உதவிப் பொறியாளர் கோட்டை ராவுத்தர் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்