என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribute"

    • தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.
    • உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் நேற்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா (வயது 83) உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உபயதுல்லாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலமாக சென்று அஞ்சலி

    முன்னதாக தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் இன்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ , தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகர பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், அருளானந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பின்னர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    டி.ஆர்.பாலு எம்.பி

    இதேபோல் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எஸ்.எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உபயதுல்லாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்க ணக்கானோர் முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

    இரங்கல் பேரணி

    முன்னாள் தி.மு.க. அமைச்சர் உபயதுல்லா மறைவையொட்டி தஞ்சையில் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில் இரங்கல் பேரணி இன்று நடைபெற்றது.

    இதில் வெற்றி தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் செழியன், மாவட்ட பொறுப்பாளர் ஆசிப் அலி, முனைவர் இளமுருகு, வெற்றி தமிழர் பேரவையின் நிர்வாகிகள் கவிஞர் இனியன், புலவர் சிவனேசன், ராகவ மகேஷ், மணிபாலா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர்
    • 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம் :

    கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகியோர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத அந்த தம்பதியருக்கு, காரணம்பே ட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை ,திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிசாமி,விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மகிழ்வனம் அமைப்பின் செயலர் சோமு என்ற பாலசுப்பிர மணியம், தாவரவியல் அறிஞர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 11-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கேர் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
    • சென்னையில் அவரது உருவ படத்திற்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

    திருச்சி,

    தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு , திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள ராமஜெயம் உருவ சிலைக்கு சகோதரர் ரவிச்சந்திரன், அமைச்சர் கே.என். நேருவின் மகனும், தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஒன்றிய சேர்மன் துரைராஜ், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜன், கமால் முஸ்தபா, மாமான்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜய், வெ.ராமதாஸ், தில்லைநகர் கண்ணன், டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா, டோல்கேட் சுப்பிரமணி, வக்கீல் மணிவண்ண பாரதி, பி.ஆர்.பால சுப்பிரமணியன், தென்னர் ராஜா, பூபதி,மாமான்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ராமஜெயம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னையில் தனது இல்லத்தில், ராமஜெயம் உருவ படத்திற்கு தமிழக அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்திரபாண்டியன், தியாகராஜன், ஸ்டாலின், பழனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • திருச்சி வரகனேரியில் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
    • நினைவு இல்லத்தை பார்வையிட்டார்

    திருச்சி, 

    தமிழ்நாடு அரசின் உத் தரவிற்கிணங்க திருச்சி வரகனேரி அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யர் நினைவு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மரியாதைபின்னர் அந்த நினைவு இல்லத்தில் வைக்கப்பட் டுள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யரின் வாழ்க்கை வர–லாறு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் கிளை நூலகத்தின் செயல்பாடுகளையும் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன், மண்டலத் தலைவர் மதிவாணன், மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், வருவாய் வட்டாட்சியர் (கிழக்கு) கலைவாணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வ.வே.சுப்பிரமணிய அய்யரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய அய்யர் என் கிற வ.வே.சு.அய்யர் 02.04.1881 அன்று பிறந்தார். இவர் வரகனேரி சிங்கம் என்றழைக்கப்பட்டார். இவர் தனது 12-வது வய–தில் தனது மாமன் மகள் பாக்கியலெட்சுமியை திரு–மணம் செய்து கொண்டார். 12 வயதில் மெட்ரிக்குலேசன் தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்றார். 16 வயதில் பி.ஏ. பட்டம் பெற் றார். 1901 ஆம் ஆண்டு சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார்.திருவள்ளுவர் இயற்றிய 1330 குறள்களையும், கம்பராமாயணக் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1917ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் புதுச்சேரி வருகையின்போது காந்தியடிகளின் சக்தியால் பயங்கரவாதி என்ற போர்வையைக் களைத்து எரிந்துவிட்டு அகிம்சா வாதியாக மாறியவர்.

    1921-ல் தேசபக்தர் என்னும் தமிழ் தினசரியில் ஆசிரியராக இருந்தபோது வேறொருவர் எழுதிய தலையங்கத்துக்காக ராஜதுரோகம் குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் ஒன்பது மாதங்கள் அடைக்கப்பட்டார். 1923-ல் சேரன்மாதேவியில் குருகுலம் துவங்கி குருகுலக் கல்வியை புகட்டினார்.

    1925 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 3 ஆம் நாள் தமது குருகுல மாணவர்களை உல்லாசப் பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச்சென்ற போது தனது மகள் சுபத்திரை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்த போது காப் பாற்றச் சென்ற வ.வே.சு.அய்யர் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.இவர் வாழ்க்கை முழுவதும் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார். வ.வே.சு.அய்யர் நாட்டின் விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து போராடி தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர் ஆவார். திருச்சியில் வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு உள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்
    • உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பெரம்பலூர்:

    நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாஷா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வார விழா "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் கடைபிடிக்கப்படவுள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.

    • திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பின் போது மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணத்திற்கு கட்சியினர்-முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • இன்று மாலை நல்லடக்கம் நடக்கிறது.

    சிவகாசி

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்க ஆசாரி (வயது93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி யின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    • ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
    • வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    செங்கோட்டை:

    கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதி களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர்.

    இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் கவுரவத்தலைவர் மணி மற்றும் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் அவரது நினைவத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போது அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் உடன் இருந்தனர்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.49½ லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
    • கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் மார்ச் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்படவில்லை.

    இந்தநிலையில், நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலின் உதவி ஆணையர் ஹரிகர சுப்பிரமணியன் தலைமையில், மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர் தீபாதேவி ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள மொத்தம் 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

    இதில், ரூ.49 லட்சத்து 63 ஆயிரத்து 77-ம், 261 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 167 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த டிசம்பர் மாதம் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
    • செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடம் முழுவதும் மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும்.இதில் பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த நிலையில் இக்கோயில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்தி 92 ஆயிரத்தி 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் அருள்முருகன், மாதவன்,கோயில் மகளிர் குழுக்கள், மற்றும் கோகிலா கலைக்கல்லூரி மாணவர்கள், விளக்குபூஜை மகளிர் குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×