search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck on fire"

    • கபிலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). தேங்காய் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
    • வலசுப்பாளையம் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பியில் உரசியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). இவர் அதே பகுதியில் தேங்காய் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை, இவரது தொழிற்சாலைக்காக இருக்கூர் பகுதியில் இருந்து தேங்காய் நார்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கபிலக்குறிச்சி அருகே வலசுப்பாளையம் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பியில் உரசியது.

    இதில் திடீரென லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) பெரியசாமி தலையிலான தீயணைப்புத் வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் ஏற்றி வரப்பட்ட தேங்காய் நார் மற்றும் லாரியின் உள்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 

    ×