search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTF Vasan"

    • யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் டி.டி.எப் வாசன்.
    • இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், யூடியூபர் டி.டி.எப் வாசன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி டி.டி.எப்.வாசன் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, டி.டி.எப் வாசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25).

    இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் டி.டி.எப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர் மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சில வழக்குகளில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் இவரது யூடியூப் பக்கத்தை பாலோ செய்வதால் அவரை மாதிரியே தாங்களும் வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

    மேலும், இதுவரை தனது யூடியூப் பக்கத்தில் தனக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களுக்கு எதிராக வசனம் பேசி வீடியோ வெளியிட்டு வந்த அவர், தற்போது தனியார் யூடியூப்பை சேர்ந்த ஒருவரை மிரட்டுகிறார். எனவே அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாகனங்களை அப்புறப்படுத்தாததால் டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
    • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரசிகர்களின் வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அவர்களது இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியதாலும், வாகனத்தை தாறுமாறாக நிறுத்தியதாலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீசார் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வாகனங்களை அப்புறப்படுத்துமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர். இருப்பினும் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தாததால் அங்கு வந்திருந்த டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

    அதன்பிறகு டிடிஎஃப் மீண்டும் புறப்படும்போது அதேபோல் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியபடி அந்த பகுதியில் சென்றனர். அப்போது புதுபாளையம் ஆற்றங்கரை பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது அந்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளனது.

    அதன் பிறகு போலீசார் அந்த பகுதியில் இதுபோன்ற அதிகப்படியான ஒலிஎழுப்பிய வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் என 200க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை கைப்பற்றி அவர்கள் மீது வழங்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள வாகனங்களின் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டன.

    தற்போது யூடியூபர் டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில் செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டுதல், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×