search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vadapalani murugan temple"

    • ‘சக்தி கொலு’ என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 5-ந்தேதி ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    சென்னை

    சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது.

    நவராத்திரி திருவிழாவையொட்டி 'சக்தி கொலு' என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலுவை பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அருணின் இசை கச்சேரி நடந்தது. முதல் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொலுவை கண்டு ரசித்தனர்.

    நவராத்திரி திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 108 பேர் கொண்ட குழுவால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வேத பாராயணம் நடக்கிறது.

    காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு இசை கச்சேரி நடைபெறுகிறது.

    நவராத்திரி திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக மீனாட்சி அம்மனுக்கு அக்டோபர் 2-ந் தேதி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.

    நவராத்திரி விழாவின் நிறைவு பகுதியாக அக்டோபர் 5-ந் தேதியன்று 2½ வயது முதல் 3½ வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கி வைக்கும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    • மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்
    • இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது.

    நண்பகல் 12 மணி வரை, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் முருகனை தரிசிக்க வந்திருந்தனர். பால்குடம் நேர்த்திக்கடன் ஊர்வலமும் நடந்தது. இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடி நீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டன.

    அலகு குத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர். பக்தர்களுக்காக `கார் பார்க்கிங்' வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம், அகண்ட பஜன் நடைபெற உள்ளது.

    சென்னை, வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடக்கிறது.

    ஆடி முதல் வெள்ளிக் கிழமையான நாளை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புடவை சாத்தி மஞ்சக்காப்பு அலங்காரம் நடக்கிறது. பின்னர் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஞ்சக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், 6.30மணிக்கு சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 7 மணிக்கு கலைமாமணி பாரதி திருமகன் குழுவினர் வழங்கும் வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கிறது.

    3-வது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 5-ந் தேதி மாலை, உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் மற்றும் பூஜை முடிந்ததும் சுமங்கலி பெண்களுக்கு அம்மன் பிரசாதமாக மாங்கல்யம் வழங்கப்படுகிறது.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம், அகண்ட பஜன் நடைபெற உள்ளது.

    • 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது.
    • 12-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    வடபழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    கோவிலில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பழனி ஆண்டவர் கோவில் தெரு, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, நூறடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று பின்னர் மீண்டும் வடபழனி கோவிலை வந்தடைந்தது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். செண்டை மேளம், சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இன்று இரவு 7மணிக்கு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது, 12-ந் தேதி காலை 9மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதி உலாவும், 10மணிக்கு தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகன புறப்பாடு நடைபெறுகிறது.

    வருகிற 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் மாலை 6.30மணிக்கு பரதநாட்டியம், இசைகச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தேரோட்ட விழாவையொட்டி வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நடந்தது. ‘அரோகரா... அரோகரா...’, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
    சென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கோவிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    காலை 9.50 மணியளவில், வடபழனி முருகன் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். தேரை பக்தர்களே வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...’ என்று பக்தி கோஷம் எழுப்பி மனமுருக வழிபட்டனர்.

    கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி தேர் பவனி வந்தது. பின்னர் வடபழனி கோவில் அருகே உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேர் சென்ற வழியெல்லாம் பக்தர்களும் உடன் சென்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் உடன் சென்றனர். தேருக்கு முன்பாக வழிகாட்டும் நாயகனாக விநாயகர் சிலையும், தேருக்கு பின்னால் கோவில் பாதுகாவலரான சண்டிகேஸ்வரர் சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    தேரோட்டம் முடிந்த பிறகு, நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே ஒய்யாளி உற்சவம் நடத்தப்பட்டது. தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த களைப்பில் அசதி கொண்ட முருகன், நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடி தனது களைப்பை போக்கிக்கொள்ளும் நிகழ்வாக ‘ஒய்யாளி உற்சவம்’ கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கோவில் வளாகத்திலேயே முருகனை ஆடிப்பாடி உலா வர செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இந்த நாட்களில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டியமும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ல.ஆதிமூலம், உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா வருகிற 18-ந் தேதி முதல் ஜூன் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    முருகக் கடவுளுக்கு உகந்த விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாக விழா ஆகும். இந்த விழா, உலகில் உள்ள பெரும்பான்மையான முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா வருகிற 18-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    முதல் நாளான 18-ந் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. 2-வது நாளான 19-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 25-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி முருகன் உற்சவர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய தினமான வைகாசி விசாக நாளான 28-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகர் வீதி உலா நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 29-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து 30-ந் தேதி(புதன்கிழமை) முதல் ஜூன் 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை இரவு 7 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகளாக, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு, நாட்டுப்புற பாடல்கள், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வடபழனி முருகன் கோவிலின் இணை ஆணையர் இரா.வான்மதி தலைமையில், கோவில் பணியாளர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர். 
    ×