search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vigorous vigilance"

    • கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.
    • கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்பட நீலகிரி வனக்கோட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.

    ஆய்வில், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பன்றிகள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் நடைபெற்ற ஆய்வில், வளா்ப்பு பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என உறுதியானது.

    எனினும், கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா, தாளூா், சேரங்கோடு, நாடுகாணி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழு மூலம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிப் பன்றிகளை நீலகிரிக்கு கொண்டுவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங், கூடலூா் கோட்டாட்சியா் முகமது ஆகியோா் தலைமையில், மசினகுடி, கூடலூா், தொரப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள வளா்ப்பு பன்றிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வளா்ப்பு பன்றிக்கூடங்களில் உள்ள பன்றிகளை விற்க கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் வனவிலங்குகள், கால்நடைகள், மனிதா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங் தெரிவித்துள்ளாா்.

    ×