search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Poojai"

    • உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.
    • எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.

    எல்லா ஜீவராசிகளுக்கும் உதடுகள் வெளியே தெரியும்.

    யானைக்கு மட்டும் தான் தும்பிக்கை உதட்டை மூடியிருக்கிறது.

    உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.

    எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.

    மற்ற நேரங்களில் வாயை மூடிக் கொண்டு அமைதி காப்பது தான் உண்மையான ஞானியின் அடையாளமாகும்.

    இதைக் காட்டவே வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜமுக ரூபத்தில் விநாயகர் இருக்கிறார்.

    எல்லாவிதமான அறிவுக்கும் முடிவு மவுனம்தான். இது விநாயகர் முகம் உணர்த்தும் தத்துவம்

    • விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர்.
    • விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    * விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

    * புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

    * பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

    * ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

    * விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    * தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    * கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

    * சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

    • நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.
    • விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும்.

    பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.

    விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.

    விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் எத்தனை நாட்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

    அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.

    ×