என் மலர்
நீங்கள் தேடியது "voter"
- வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்.
- புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு உற்சாகப்ப டுத்தினார்.
வாக்குச்சாவடி சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதை யும் கேட்டறிந்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியி னரை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
- அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆபிரகாம் பேசியதாவது:-
வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும் 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பி க்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்கு ச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சைமாவ ட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெ ற்றது.
அதே போல் வருகிற 26, 27-ந்தேதிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
- அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சேலம்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,
சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
- வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவம் 6B-இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்கா–ளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 20,29,246 வாக்காளர்களில் 13,46,249 (66.34 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்று கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடாத பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது வருகிற மார்ச் 31-க்குள் நிறைவடைய உள்ளதால் பொது மக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ தங்களது ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6B-இல் பூர்த்தி செய்து வழங்கிடலாம்.
வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் வாக்காளர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை e- EPIC ஆக தங்களது மொபைலிலேயே டவுன்லோடு செய்திடலாம் . தேர்தல் நடைபெறும் சமயம் வாக்காளர் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்களும் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் மற்றும் அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். மேற்கூறியவாறு அனைத்து வகையான விண்ணப்பங்களையும் Voters Helpline மொபைல் ஆப் மூலமாகவும் NVSP Portal மூலமாகவும் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
- கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கோவை,
கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 3,069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் ஜனவரி 5-ந் தேதியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 98 ஆயிரத்து 721 ஆண்களும், 15 லட்சத்து 51 ஆயிரத்து 421 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 558 பேரும் என மொத்தம் 30 லட்சத்து 50 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரையிலான காலத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3,069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியினை புதிய செயலி மூலமாக பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களை முழுமையாக சரிபார்த்திடவும், திருத்தங்கள் இருப்பின் மாற்றம் செய்திடவும் புதிய செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிதாக வாக்காளர்களின் விவரங்களை புதிய செயலி மூலமாக விண்ணப்பம் செய்திடவும், இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கள சரிபார்ப்பு செய்து, அங்கீகரிக்கவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் வீட்டிற்குக் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
- விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 1-1-2024 -ஐ தகுதி நாளாகக் கொண்டு தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, அனைத்து திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன் வாக்குச்சாவடிகளை பிரிப்பது, இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.
முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.
இப்பணியினை சிறப்பாகவும் விரைவாகவும் முடித்து தூய வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு பொது மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 5-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
- திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள வாக்குச் சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணைய அறிவு றுத்தலின்படி, நாளை (27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் ஒரு மாதத் திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள் ளன. 2024-ம் ஆண்டு ஜன வரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறம்பிய தங்களது பெயரை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் தாலுகா அலுவல கங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்க லாம்.
தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலியின் மூல மாகவும் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க லாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற் றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணி களையும் மேற்கொள்ளலாம்.
பணிக்கு செல்வோரின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத் தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.
- 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவர்களை புதிதாக சேர்க்கும் பணி நடந்தது.
- மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் பகுதியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கொந்தகை, ஓலைப்பாடி, துரும்பூர், ஆதனூர், திரு வைகாவூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், மேலகபிஸ்தலம், சத்தியமங்கலம், கபிஸ்தலம் சருக்கை, உம்பளப்பாடி, உள்ளிக்கடை, கோவிந்தநாட்டு சேரி, உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவ- மாணவிகளை புதிதாக சேர்த்தலும், மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடைபெற்றது.
இந்த சேர்த்தல் நீக்கல் முகாம் பணிகளை அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் லட்சுமணன், தலைவர் மலர்மன்னன், துணைத் தலைவர் முகமது கனி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத் குமார், ஆகியோரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கபிஸ்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் குணசேகரன், கிளைச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் கரிகாலன், இளைஞர் அணி விஜயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.
- வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பு வனம், இளையான்குடி ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஏராள மான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைத்தனர்.
மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் இளையான்குடி ஒன்றி யத்தில் அமைக்கப்பட்டி ருந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.
இதில் முன்னாள்
எம்.எல்.ஏ. சுப மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகீம், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
- டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதனை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே. முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்க மீரான்மைதீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கல்லூர் பாலா, ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் நவநீதன், தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மான், வட்ட செயலாளர் வேல்முருகன், ஆறுமுகம், மலை கண்ணன், தொப்பி காஜா, செல்வகுமார், ஜாய் மரகதம், சாலி மவுலானா, மைதீன் பிள்ளை, சாகுல் ஹமீது, அலி, முத்துச்சாமி, வேல்சாமி பாண்டியன், தர்வேஸ் மைதீன், காதர் ஒளி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.
- வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.
பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116-வது வார்டு அயோத்திக் குப்பம் பகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த சுறா சுமன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு முகாம் நடத்தினார்கள்.
மேஜை அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க. வட்ட செயலாளர் தலைமையிலான கும்பல் திடீரென்று வந்து அங்கு இருந்த பா.ஜனதாவினர் மீது தாக்கு தல் நடத்தினார்கள்.
அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து மெரினா போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.