என் மலர்
நீங்கள் தேடியது "wall"
- 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.
- ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெருமாநல்லூர்:
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேற்கூரையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங் சீட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டிங், டெய்லரிங், அயர்னிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாலை வேளையில் டீ அருந்துவதற்கான இடைவேளையில் அனைவரும் வெளியே உள்ள கடைக்கு சென்று உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணியை செய்து வந்தனர்.
அப்போது கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை, காற்றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக் காற்றின் வேகம் தாங்காமல் பனியன் நிறுவனத்தின் ஹரலோ பிளாக் சுவர்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
திடீரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர் .இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தனமணி (வயது 55).
கூலி தொழிலாளி சம்பவத்தன்று இவர், அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென்று அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைகாக அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சாரல் மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்தது.
- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்மா என்ற பெண் காயம் அடைந்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் செம்மங்குடி மேலத் தெருவில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்புவீடுகள் உள்ளன. சாரல் மழை விட்டு விட்டு கடந்த சிலநாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பத்மா (வயது50) என்பவருடைய தொகுப்பு வீட்டின் சுவர்திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பத்மா காயம் அடைந்தார்.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இல்லாத தொகுப்பு வீடுகளை இடித்து, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.
- இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலை ச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.
மேலும், சில ஆண்டுகளாக அந்த சுவர் சரிசெய்ய ப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயின் பரிந்துரையின் பேரில் உடனடியாக காவேரி படுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.
- யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டது
- வனஅதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் ஊரு க்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரு கின்றன. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள காய்கறிகளை ருசித்து தின்று சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.
இந்த நிலையில் தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு சம்ப வத்தன்று 11 காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வந்தன. பின்னர் அவை விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த தென்னை, வாழை, தக்காளி, வெண்டை, முட்டைக்கோஸ், மஞ்சள் ஆகியவற்றை தின்றன. பின்னர் விளை பொருட்களை மிதித்து நாசமாக்கி விட்டு சென்றன.
தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக விளை ந்து அறுவடைக்கு தயாரானநிலையில் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானைகள் மேற்கண்ட பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவலின்பேரில் கோவை மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் மற்றும் பயிர்ச்சேத தீர்வுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான சு.பழனிச்சாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஒருவார காலத்துக்குள் உரிய சேத இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதற்கிடையே தொண்டாமுத்தூர் பகுதி யில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் தடுப்புச்சுவரை அமைப்பது என வனத்துறை அதிகாரிகள் முடிவுசெய்து உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் 4 தனிப்படை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் மலைஅடிவாரத்தில் திரியும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு யானைகள் மலைஅடிவார புதர்களுக்குள் மறைந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
எனவே தொண்டா முத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு பகுதியாக அய்யாசாமி மலைஅடிவாரத்தில் இருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவுக்கு ரூ.3 கோடி செலவில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் வேலியுடன் ஒருங்கிணைந்த தடுப்புச்சுவரை ஏற்படுத்துவது என வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு உள் ளது.
இது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பவுன்ஸ் பேக் முறையில் அமைக்கப்படும். எனவே மலைஅடிவாரத்துக்கு வரும் காட்டு யானைகள் மேற்கண்ட தடுப்புச்சுவரை தாண்டி ஊருக்குள் வர முடியாது. மேலும் யானை உயிருக்கும் பாதிப்பு ஏற்படாது.
தொண்டாமுத்தூர் பகுதியில் பவுன்ஸ்பேக் முறையிலான ஸ்பிரிங் தடுப்புச்சுவர் அமைப்பது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்ப டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆறுச்சாமி, சதாசிவம், லோக நாதன், ஈஸ்வரன், ரவி, வடிவேல், பாலு, வேணு கோபால், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- வேலூரில் 2 பேர் பலி எதிரொலி
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காட்பாடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரத்தமிழர் முன்னணி செயலாளர் விஜய் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-
மோட்டூர் சர்க்கரை ஆலை பஸ் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பத்தை நட்டோம்.
தற்போது கம்பம் பழையதாக உள்ளது. இதனால் பெயிண்ட் அடிப்பதற்காக பிடுங்கி புதுப்பித்த பின்பு திரும்பவும் அதே பகுதியில் நட்டோம்.
ஆனால் காட்பாடி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொடிக்கம்பத்தை அகத்திவிட்டனர். எனவே கொடிக்கம்பத்தை மீண்டும் நடுவதற்கு ஆணையிட வேண்டும் என கூறியிருந்தார்.
தொரப்பாடியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் மதியழகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;-
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது மண்டலம் தொரப்பாடி நேதாஜி தெரு, பலராம முதலி தெரு, அண்ணாமலை கவுண்டர் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, எம்.சி ரோடு, கஸ்பா இப்ராஹிம் சாஹெப்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தருவதில்லை.
குப்பைகள் சரிவர வாரவில்லை. கொசு தொல்லைகள் மற்றும் தெருநாய்களின் தொல்லைகள் மிக அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கஸ்பா ஆரன்பாளையம் வசந்தபுரம் பகுதி பொதுமக்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் கஸ்பா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இதனை கஸ்பா, வசந்தபுரம், ஆர்.என். பாளையம், சதுப்பேரி, சிறுங்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று தீபாவளி பண்டிகை தினத்தன்று தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்தனர். 40 அடி உயரமுள்ள பாலத்தின் மீது விழுந்ததில் கொடூரமாக தலை சிதறி உயிழந்தனர்.
எனவே பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
- வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.
வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
- செல்போன்களை திரும்ப வழங்கக்கோரி திருச்சி மத்திய சிறை முகாமில் கைதிகள் சுவரில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- நாங்கள் முகாம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு எங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் இப்போது முடிவுற்ற நிலையில் வரும் 12-ந்தேதி 23 பேர் இலங்கை செல்ல இருக்கிறோம் என்றனர்
திருச்சி:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான முகாம் சிறை உள்ளது. இங்கு150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 155 ெசல்போன், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் அனைத்தும் திரும்ப வழங்க வேண்டும் என்று முகாம் சிறைவாசிகள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சி
ல நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் அங்குள்ள மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல்கள் விடுத்தனர். அத்துடன் அதிக மாத்திைரகளை உட்கொண்டு மயக்கமும் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் முகாம் சிறை வாசல் பகுதி சுவற்றில் 23 கைதிகள் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் முகாம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு எங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் இப்போது முடிவுற்ற நிலையில் வரும் 12-ந்தேதி 23 பேர் இலங்கை செல்ல இருக்கிறோம்.
எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் அனை்தையும் நாங்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும் போது ஒப்படைக்க வேண்டும்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த போது ஒப்படைக்க முடியாது என்று கூறுகின்றனர். நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய செல்போனை எங்களிடம் மீண்டும் ஒப்படைப்பதில் போலீசார்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது.
சட்ட விதிப்படி எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் இலங்கை செல்லும் போது அங்கு விமான நிலையத்தில் எங்களை அந்நாட்டு போலீசார் கைது செய்வார்கள்.
அப்போது எங்களை ஜாமீனில் எடுக்க எங்களது குடும்பத்தினர்கக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக தான் நாங்கள் அனைவரும் போராடுகின்றோம் என்றனர்.
இதை கேட்டதும் அங்கு பாதுகாப் பணியில் இருந்த உதவி கமிஷனர் காமராஜ் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தார்.
இந்த சம்பவத்தால் மத்திய சிறை வளாகத்தில் நேற்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
- 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது.
மங்கலம் :
திருப்பூர் - மங்கலம் ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும். வளைவு, விபத்து ஏற்படக்கூடிய இடங்கள், நான்கு, மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் விதிமீறி முந்தி செல்வதை தடுக்க மையத்தடுப்புச்சுவர் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஒரு மாதம் முன் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் 2021 - 22ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது. லாரிகளில் கொண்டு வந்த மையத்தடுப்புக்கற்களை கிரேன் உதவியுடன் நிறுவும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மங்கலம் - திருப்பூர் ரோட்டில் அதிக நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட பாரப்பாளையம், பெரியாண்டிபாளையம் சந்திப்பில் முதல்கட்டமாக மையத்தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விதிமீறி முன்னேறி செல்லக்கூடாது.தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடதுபுறத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு மேலும் சில சந்திப்புகளில் மையத்தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படும் என்றனர்.
- மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- மேலும் இப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மேட்டுப்பாளையம், சிக்கதாசம்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் விளையாட்டு மைதானமும் உள்ளது. ஆனால் அந்த மைதானம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
மேலும் பள்ளியில் மாணவர்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உணவு இடைவெளி நேரத்திலும், மற்ற நேரங்களிலும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுமட்டுமல்லாமல் சுமார் 6 ஏக்கர் பரபப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பான முறையில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் பள்ளியின் வளாகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி நிர்வாக அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டன.
சுற்றுச்சுவர்கள் 5-க்கு மேற்பட்ட இடங்களில் இடிந்த நிலையில் உள்ளது. இதனால் விடுமுறை தினங்களில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சமுக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
- உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
- லாரி பின்னோக்கி வந்த போது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பூதலூர்:
கல்லணையில்உள்ள கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை -திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.1052 மீட்டர் நீளம்கொண்ட இந்த பாலம் 12.90 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்த பாலத்தின் வழியாக திருச்சி -தஞ்சை மாவட்டங்களுக்கு கனரக வாகனங்கள, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திருச்சி தஞ்சை இடையே ஏராளமான வாகன போக்குவரத்து இந்த பாலத்தின் வழியே நடைபெற்று வருகிறது.
லாரிகள், வேன்கள், சுற்றுலா பஸ்கள், கார்கள், சென்று வந்தாலும் இன்னமும் பொது போக்குவரத்து இந்த சாலை இந்த பாலத்தின் வழியாக செயல்படுத்தப்படவில்லை.
விரைவில் திருச்சி தஞ்சை போக்குவரத்து கழகங்களில் வழியாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துவங்கும் என்றுஎதிர்பா ர்க்கப்படுகிறது.இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த பாலத்தின் வழியாக மணல் லாரிகள் அதிக அளவில் சென்று கொண்டிருந்தபோது மோதியதாக கூறுகின்றனர். இடையிலுள்ள நடை மேடையில் எந்த பழுதும் இல்லாமல் கைப்பிடி சுவர் தூண்கள் மட்டும் இடிந்த நிலையில்உள்ளதால் இதுபோன்று நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர். ஏதாவது லாரி பின்னோக்கி வந்த பொழுது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இடிந்த பகுதியில் சீர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது இந்த பகுதி வழியாக செல்வோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எதுவும் இரவு நேரங்களில் எரிவதில்லை என்றும் இதனால் பாலத்தின் நடைமேடைமது அருந்தும் இடமாக உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கல்லணை கொள்ளிடம் பாலத்தில் இடிந்த கைப் பிடிச் சுவரை சீரமைத்து, மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- அங்காடி முதல் 8ம் வகுப்பு வரை அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- மேல்நிலைத் தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரன் மூலம் இடித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு குப்பாண்டம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது .இங்கு அங்காடி முதல் 8ம் வகுப்பு வரை அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள்.இந்த நிலையில் 7மாதங்களுக்கு முன் பள்ளியின் அருகே பயன்படாமல் இருந்த மேல்நிலைத் தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரன் மூலம் இடித்துள்ளனர்.அப்பொழுது பள்ளியின் சுவர் மீது விழுந்து சுவர் முழுவதும் சேதமடைந்தது.
மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி சுவரை கட்டித் தருவதாக உறுதியளித்தார்கள். ஆனால் இதுவரைக்கும் சுவர் கட்டித்தரவில்லை.தற்பொழுது பள்ளி சுவர் உடைக்கப்பட்டு இருப்பதால் அதனை பயன்படுத்தி பலரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உள்ளே உடைத்துவிட்டு செல்கின்றார்கள்.இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.மேலும் இதுகுறித்து பள்ளி சார்பாகவும் மாவட்ட நிர்வாகித்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் தற்பொழுது பள்ளி தொடங்கப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டும் பள்ளியின் பாதுகாப்பு சுவரை உடனடியாக கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.