search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wartime basis"

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • பொது மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவ மழை மற்றும் அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு துரிதமாக செயல்பட வேண்டும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

     இது ஏதோ வழக்கமான சம்பிரதாய கூட்டமாக அமைந்துள்ளதாகவே கருத வேண்டி உள்ளது. இந்த கூட்டத்தினால் மழையினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை.

    வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் உப்பனார் வாய்க்கால் மற்றும் செஞ்சி சாலை வாய்க்கால், சின்ன வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை நீக்கி மழை நீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு நாள் மழை வெள்ளத்துக்கு புதுவை மாநிலம் வெள்ளக் காடாக மாறியது புதுவை அரசின் செயலற்ற தன்மையை தெளிவாக காட்டுகின்றது. இதில் புதுவை மாநிலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ளது என்றும் அதற்காக பல கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்பது புதுவை மக்களை ஏமாற்றும் திட்டம் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.

    எனவே புதுவை அரசு இனியும் காலம் கடத்தாமல் கடும் மழையை எதிர்கொள்ள அனைத்து இடங்களிலும் தூர்வாரி வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வில்லியனூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.
    • வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.

    மேலும் சாலைகளும் சேதமானது. அதுபோல் இந்த ஆண்டு மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றார்.

    இந்த நிலையில் அப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில்நடை பெற்றது.கூட்டத்திற்குசிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன் (தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு), சுந்தர்ராஜன் (பொது சுகாதாரக் கோட்டம்), ராதாகிருஷ்ணன் (நீர்பாசனக் கோட்டம்), உதவிப் பொறியாளர்கள் மீனாராணி, வாசு, சீனுவாசன், கோபி, மதி, சேகர், இளநிலைப் பொறியாளர்கள் திருவேங்கடம், சித்தார்த்தன், நடராஜன், சங்கர் மற்றும் வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, முத்து, அருள், வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லியனூர் தொகுதி வழியாக செல்லும் கருப்பட்டி வாய்க்கால், ஆத்து வாய்க்கால், ஒதியம்பட்டு வாய்க்கால், மேட்டு வாய்க்கால், சன்னதி வாய்க்கால் உள்ளிட்ட நீர்பாசன வடிக்கால் வாய்க்கால்கள் மழைக்கு முன் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    அரும்பார்த்தபுரம் முதல் முத்துப்பிள்ளை ப்பாளையம் வரை செல்லும் சாலையை செப்பனிடுதல், ஜி.என். பாளையம், மணவெளி, ஒதியம்பட்டு ஆகிய கிராமங்களில் புதிய போர்வெல் அமைக்க வேண்டும். வில்லியனூர், சுல்தான்பேட், கொம்பாக்கம்பேட், ஒட்டாம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வில்லியனூர் பிருந்தாவனம் நகர் விரிவாக்கம், எஸ்.எம்.வி.புரம், கொம்பாக்கம் பிரியதர்ஷினி நகர், சிவசக்தி நகர், மணக்குள விநாயகர் நகர் பகுதிகளில் புதிய குடிநீர் பைப்–லைன் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    ×