என் மலர்
நீங்கள் தேடியது "waste"
- கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
- கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழி வுகள் சேகரம் செய்யப்ப டுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திர த்தில் அரைத்து தொட்டி களில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவ ற்றை குறைந்த விலைக்கு விவசாயி களுக்கு வழங்க ப்படுகிறது. 3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொ ண்டு இயந்திரங்கள் இயக்க ப்படுகிறது. மக்காத மறுசுழ ற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகி ன்றனர்.
மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மா ற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்படுகிறது. தற்போது 12 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3 ஆயிரத்து 250 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.
- வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.
- கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 12 பொலி காளைகள், வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவ ணித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கர்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 16-ந்தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதே போல் நடுவர் கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 56 கால்நடைகள் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஏலமிடப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்வைப்புத்தொகையாக ரூ.20 ஆயிரத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர், கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் பண்ணையின் வங்கி கணக்குவைத்து இருக்கும் ஒரத்தநாடு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் பெறப்படும் வங்கி வரைவோலை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏலத்தொகை செலுத்து பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள்.
மற்றயாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், கால்நடைகளை ஏலம் எடுத்தவர் முழு ஏலத்தொகையினை செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்ப டுவர்.
ஏலம் முடிந்தவுடன் முழுத்தொகையையும் உடனே செலுத்தி கால்ந டைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.
தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களல் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.
மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக் டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள், பொதுகால்வாயில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது.
- இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
- சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
- விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.
கடவுளின் தேசமாக கூறப்படும் கேரளா மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் காலங்காலமாக மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் மலைப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் விவகாரங்களில் கேரள அரசு அதிகாரிகளும் மிகக் கடுமையாக பின்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்றில்லாமல், கேரளாவில் லஞ்சப் புழக்கம் மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் காசு கொடுத்தாலும் விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.

இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழவுகள் அதன் அண்டை மாநிலங்களாக இருக்கும் தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் பலமுறை இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தும், புகார்களை தெரிவித்தும் இதுநாள் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

கேரளா போன்றில்லாமல் தமிழ் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் இதுபோன்ற வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கலாம் என்ற நிலையை, கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிரமாங்களில் கேரள கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக அறப்போர் இயக்கமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவுகளில் தமிழகத்தில் கொட்டப்பட்டு வரும் கேரள கழிவுகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. பலரும் இதனை அதிகம் பகிரத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவல்துறை, சுங்கச் சாவடி அதிகாரிகள் அனுமதியின்றி தமிழ்நாடு எல்லைக்குள் கேரள கனரக வாகனங்கள் வரமுடியாது. அதையும் மீறி வாகனங்கள் வருகின்றன, கழிவுகள் கொட்டப்படுகின்றன என்றால் தமிழ்நாடு அதிகாரிகள் உதவியின்றி இது நடைபெற வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. வாகனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை அனுமதிப்பதால்தான் தமிழ்நாட்டில் கேரளா கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளா பதிவெண் கொண்ட கனரக வாகனங்களால் தமிழகம் வரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் தென் மாவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இது தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது செவி சாய்ப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்..!
ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம், பஞ்சாயத்து பகுதியில் கேரளாவில் இருந்து மாட்டு கழிவுகளை ஒரு லாரியில் ஏற்றி வந்து கொட்டி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை போலீசாருக்கு கூறினார். உடனடியாக ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் அங்கு விரைந்து சென்று அந்த லாரியை மடக்கினார். இதனால் கழிவுகள் மேலும் கொட்டப்படாமல் தடுக்கப்பட்டதோடு, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் லாரியில் ஏற்றி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் அங்கு கழிவுகளை கொட்டியதற்காக லாரிக்கு பஞ்சாயத்து சார்பாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
- மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் போடிப்பட்டி ,மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
- திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் குளிர் மற்றும் கோடை பருவத்தில் இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கியதும், ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. அதற்கு பிறகு பருவமழை ஏமாற்றிவிட்டது. கடந்த சில நாட்களாக திடீரென கருமேகம் திரண்டு, மழைக்கான அறிகுறி தென்படுவதும், பலத்த காற்று காரணமாக மழை பொய்த்து போவதுமாக சென்று கொண்டிருக்கிறது.
மானாவாரி சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.திருப்பூரின் நிலை இப்படியிருந்தாலும் கோவை மாவட்ட பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3நாட்களுக்கு முன் சித்திரைச்சாவடி பகுதிகளை உற்சாகத்துடன் கடந்து வந்த புது வெள்ளம், திருப்பூரை வந்தடைந்தது.திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைந்த மழைநீர்கழிவுநீருடன் கலந்து, கருப்புநிறமாக ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. நொய்யல் வெள்ளத்தால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, திருப்பூர் அணைமேடு, அணைக்காடு தடுப்பணைகளில், வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகருக்குள் நுழைந்த மழை வெள்ளத்தை பார்க்க ஆர்வமாக சென்று பொதுமக்கள் பார்வையிட்டனர். ஆனால் கருப்பு நிறத்தில் தண்ணீர் பாய்ந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியில்லாமல் பார்த்து திரும்பினர்.மதியத்திற்கு பின் நொய்யலில் பாய்ந்தோடிய வெள்ளம் தெளிந்த நிலையில் இருந்தது. கருப்பு நிறம் மாறி மழை வெள்ளமாக பாய்ந்தோடியது.இருப்பினும், நொய்யல் ஆற்றில் தேங்கிய சாக்கடை கழிவுகள் அடித்துச்செல்லப்படுகிறது. அடுத்து புது வெள்ளம் பாய்ந்து வந்தால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நொய்யல் ஆறு மாவட்டத்தில் நுழையும், சாமளாபுரம் பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகம் படர்ந்துள்ளது. ஆற்றின் ஒரு அங்குலம் கூட கண்ணில் தெரியாதபடி ஆகாயத்தாமரை அடர்த்தியாக ஆக்கிரமித்துள்ளது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை, தண்ணீரில் அடித்துவரப்பட்டது. அவ்வாறு, அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை அக்ரஹாரப்புதூர் பாலத்தை முழுமையாக அடைத்துவிட்டது.
தண்ணீர் செல்லும் குழாய்கள் முழுமையாக அடைத்ததால், தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. சூலூர் மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை அகற்றாவிட்டால், அந்த ரோட்டை யாருமே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் குறைந்ததும், பொக்லைன் மூலமாக ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், புது வெள்ளம் பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது.மழை வெள்ளப்பெருக்கால், அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீரில் வெண்ணிற நுரை ஏற்பட்டது. தண்ணீரின் வேகத்துக்கு ஏற்ப நுரை பொங்கி பரவியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாவட்ட கிழக்கு பகுதியில், சூலூர் தாலுகா பகுதிகளில் ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதால் இத்தகைய சீர்கேடு ஏற்படுகிறது.ஆற்றில் ஆபத்தான கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் பசுமை ஆர்வலர்களின் முயற்சியால், மாசுபட்டிருந்த நொய்யல் ஆறு மீட்டெடுக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர் முயற்சியால், ஆண்டு தோறும் ஆற்றை தூர்வாரி பருவமழைக்கு முன்னதாக, 'பளிச்'சென மாற்றிவிடுவார்கள்.இந்தாண்டு பருவமழையும் வந்துவிட்டது.கோடை மழையே போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வழங்கி சென்றுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
திருப்பூரை சுற்றிலும் உள்ள குளம், குட்டைகளை நிரப்பிவிடலாம்.இருப்பினும் இந்தாண்டு திருப்பூர் நகரப்பகுதியில் நொய்யல் ஆறு தூர்வாரி சுத்தப்படுத்தாமல், புதர்மண்டி காணப்படுகிறது. சில இடங்கள்நொய்யல் ஆறா, சோலையா என்று கேட்கும் அளவுக்கு புதர்மண்டி காணப்படுகிறது.மழை வெள்ளம் தடையின்றி செல்ல ஏதுவாக, நகரப்பகுதியில் நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.சில பண்ணைகளில் இடநெருக்கடி மற்றும் நோயின் காரணமாக அடிக்கடி கறிக்கோழிகள் இறப்பது வாடிக்கையாக உள்ளன. இவ்வாறு இறக்கும் கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் சிலர் அருகில் உள்ள சிறு தடுப்பணைகள், பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் மற்றும் ரோட்டோரங்களில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கொட்டி செல்கின்றனர்.
இது குறித்து வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து அதன் மீது பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இதனை விடுத்து இறந்த கோழிகளை ரோட்டோரம் கொட்டுவது, குடியிருப்பு பகுதிகளில் வீசி எறிவது, ஓட்டல், தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது போன்றவை சட்ட விரோதமான செயல். இதனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
- கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.
மதுரை
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் என்ஜினீயரிங் டெக்னாலஜி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து "பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான மாற்று வழிகள்" என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்நகை நடத்தியது.
கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி ராஜ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ராமராஜ், பாண்டியராஜன், உஷாராணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன உதவி இயக்குநர் ஜெயசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீராதாரங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டப்படுவது வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகமாகும்.
- நீராதாரங்களைப் பாதுகாக்க ஆண்டுதோறும் அரசு பெருமளவு நிதி ஒதுக்கி வருகிறது.
குடிமங்கலம்:
திருப்பூர் மாவட்டம் போடிப்பட்டி, குடிமங்கலம் பகுதியில் நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் கழிவுகளால் நீராதாரங்கள் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீராதாரங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டப்படுவது வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகமாகும். நமது சந்ததியருக்கு நாம் காசு பணத்தை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், வளமான மண் போன்றவற்றை விட்டுச் செல்வது மிகவும் அவசியமாகும்.
ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளத்தை படிப்படியாக இழந்து வருகிறோம். அதனை மீட்டெடுக்க மீண்டும் நமது பாரம்பரிய முறையில் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசும், இயற்கை ஆர்வலர்களும் முன்னெடுத்து வருகிறார்கள்.
அதுபோல குப்பைகளைக் கொளுத்துவது, பராமரிப்பில்லாத வாகனங்களைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைப் புகை என பல வழிகளில் காற்றை மாசுபடுத்தி வருகிறோம்.காற்றைக் காப்பதற்கான வழிகளை உருவாக்குவதில் அரசும், பொதுமக்களும் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை.
நீராதாரங்களைப் பாதுகாக்க ஆண்டுதோறும் அரசு பெருமளவு நிதி ஒதுக்கி வருகிறது. ஆனாலும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பெருமளவு நிதி வீணாகி வருகிறது.ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளுக்கு தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் நீர் வழித்தடங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் பராமரிப்பில்லாமல் புதர் மண்டி, மண் மூடிக் கிடக்கிறது. மழைக் காலங்களில் பெயரளவுக்கு பராமரிக்கப்படும். இந்த நீர் வழித்தடங்களின் மூலம் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது.பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் மழை நீர் வீணாகி வருகிறது.
மேலும் நீர் வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் விவசாயக் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்படுகிறது.மேலும் மழைநீருடன் கலந்து நோய்த்தொற்றுகளுக்குக் காரணமாகிறது.எனவே மழை நீர் வடிகால்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுப்பது சம்பந்தமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நகராட்சிகள் சுகாதாரத்துறையுடன் சேர்ந்து டெங்கு பரப்பக்கூடிய கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கடந்த ஆண்டு டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களை முதன்மையாக எடுத்து கொண்டு கொசு உற்பத்தியை தடுக்க நகராட்சிகள் பலவித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் குப்பைகள் அதிகம் சேரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி வாயக்கால்களை சுத்தம் செய்து கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடரும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பராமரிப்பின்றி இருக்கும் காலிமனைகளில் புதர்கள் மண்டியும், குப்பை மற்றும் தண்ணீர் தேங்கியும் உள்ளதால் கொசு உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக புதுவை நகராட்சிகள் சட்டத்தின்படி புதுவை மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் உள்ள புதர்கள், குப்பைகள் மற்றும் மழை கழிவுநீர் முதலியவற்றை 15 நாட்களுக்குள் அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்த ஆணையை மீறுவது அல்லது புறக்கணிப்பது என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்ககூடிய செயல் என்பதால் இது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்ககூடிய குற்றமாகும்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள ஆணைப்படி காலிமனை உரிமையாளர்கள் தங்களது காலிமனையை சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் அனைவரும் சுகதாரத்தோடும் வாழவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களும் தாமாக முன்வந்து தங்கள் விட்டை சுற்றியுள்ள இடங்களில் நீர்தேங்கும் ஆதாரங்களை நீக்கி நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அந்த வகையில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.