என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welcome"

    • விழாவில் 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா ஆகியோர் கலந்துகொண்டு 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள். விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவர் ராஜராஜன், சிறப்பாசிரியர்கள் அனிதா, மேரி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் சுதாகர் நன்றி கூறினார்.

    • மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தி.மு.க. செயலாளர் பேசினார்.
    • மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டினம்காத்தான் தனியார் மகாலில் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் அவைத்த லைவர் சத்தியமூர்த்தி தலைமையில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வருகிற 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் பேசிய தாவது:-

    முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை மாவட்ட எல்லையான பார்த்தி பனூரில் எழுச்சியோடு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தபட்சம் 25 ஆயிரம் தொண்டர்கள் வருகை தர வேண்டும்.

    நாம் அளிக்கும் சிறப்பான வரவேற்பு எட்டு திக்கும் பரவ வேண்டும். மன கசப்புகளை தள்ளி விட்டு அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்பதற்கு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.-மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட துணைச்செயலாளர் ஆதித்தன், மாநில இலக்கிய அணி பெருநாழி போஸ், ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மண்டபம் பேரூர் செயலாளர் ரகுமான் மரைக்காயர், கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர் சுகைபு உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். அனைவருக்கும் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து வரவேற்றார்,

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன் நன்றி கூறினார்.

    • மதுரை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    • மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    அவனியாபுரம்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும், வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, மாமன்னர் மருது சகோதரர்களின் ஜெயந்தி விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    இந்த சிறப்பு மிக்க விழாக்களில் பங்கேற்க வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இருவண்ண கொடியினை கையில் ஏந்தி வரவேற்பு கொடுக்கும் வகையில் மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழகத்தி னர் என பெரும்பாலானோர் பங்கேற்று வரவேற்பு நிகழ்ச்சியினை சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் பிரவீன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி ஏராளமான கட்சி நிர்வாகிகள் காரில் சென்று உற்சாக வரவேற்பளித்தனர்.

    முன்னதாக அகஸ்தியர் கூட்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட கவுன்சி லர்கள் கவிதா கதிரேசன், ரவிச்சந்திர ராமவன்னி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபானி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி, கிளை செயலாளர்கள் கிருஷ்ணா, ராக்கு, மகேசுவரன், சங்கர், சாமி, சுகுன சீலன், சோமசுந்தரம், கோட்டைசாமி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா தேசிய பொது செயலாளர் அருண்சிங் எம்.பி. 2 நாட்கள் பயணமாக புதுவை வந்திருந்தார்.
    • இந்த நிலையில் அவர் தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்திற்கு சென்றார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா தேசிய பொது செயலாளர் அருண்சிங் எம்.பி. 2 நாட்கள் பயணமாக புதுவை வந்திருந்தார். இந்த நிலையில் அவர் தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்திற்கு சென்றார். அங்கு அருண்சிங் எம்.பி.யை குருகுல நிறுவனர் ஜோதி செந்தில் கண்ணன் கர்லாகட்டை வழங்கி வரேவற்றார்.மேலும் அவரிடம் கர்லாகட்டை தினத்தை முன்னிட்டு 100 பேர் கர்லாகட்டை சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சாய்.ஜெ.சரவணன், பாஜனதா மாநில தலைவர் சாமிநாதன், கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி நிர்வாகிகள், கர்லாகட்டை பயிற்சியாளர்கள் பெரியசாமி, ஆனந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
    • பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வேதாரண்யம்:

    பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

    அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.

    • முதல்வருக்கு பேரளி, குன்னத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
    • பெரம்பலூருக்கு வருகை தந்த

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரியலூரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் பேரளி மற்றும் குன்னம் கிராமத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அதன் ஒன்றிய செயலாளரும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேலமாத்தூரில் சிறப்பான வரவேற்பு முதல்வருக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • சாயல்குடியில் தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன்- தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் பெருநாழி போஸ், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர்கள் இதம்பாடல் மங்கள சாமி, காணிக்கூர் தென்னரசி, செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ராஜேந்திரன், செஞ்சடைநாதபுரம் லிங்கராஜ், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். வாகைக்குளம் ஜெயலட்சுமி, வடமலை மூக்கையூர் தொம்மை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எஸ்.வாகைகுளம் பால கிருஷ்ணன், டி.கிருஷ்ணாபுரம் இளங்கோவன், வாலிநோக்கம் வகிதாசகர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சாயல்குடி ராஜேந்திரன், நரிப்பையூர் ராஜபாண்டியன், நரிப்பையூர் கோகுலம் மொபைல்ஸ் மருதுபாண்டியன், தி.மு.க. கிளைச் செயலாளர் குருவாடி சேதுராமன், மேலக் கிடாரம் குமாரராஜா, காலாகுளம் முருகேசன், ஆர்.சி.புரம் பிரான்சிஸ், பிரதிநிதி பழனிச்சாமி. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நாகரத்தினம், இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், பிரமுகர் காலாகுளம் சேகர் உள்ளிட்ட தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் சரவண குமார், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலாளர் பொன் செந்தில்குமார், கவுன்சிலர்கள், பெரி யாண்டவர், பாலமுருகன், தங்க ரத்தினராஜ், நெல் கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி யராஜா, கவுன்சிலர்கள், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா கணேசன், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் பொறுப்பு சண்முகையா, கவுன்சிலர்கள், வாசுதேவநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகனா மாரியம்மாள் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள், சிவகிரி ஆயில் ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், மாரித்துரை, சி.எஸ்.மணி, வார்டு உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், முத்துலட்சுமி தங்கராஜ், பாலகுரு, அவைத்தலைவர் துரைராஜ், புல்லட் கணேசன், ராமச்சந்திரன், இளையராஜா, உரக்கடை சக்திவேல், முத்துராஜ், மணிகண்டன், விக்கி, முனியராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திருவேங்கடம், குருவிகுளம், சங்கரன்கோவில் வடக்கு தெற்கு அனைத்து பகுதியி லிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி நீதிமன்றம் அருகே மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் மருதப்பன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் முத்துவேலன், வேலாயுதம், வன்னிராஜா, பேட்ரிக்பாபு, சின்னத்துரை, மாலாதேவி, முருகேசன், குமஸ்தாக்கள் கருப்பையா, ராமராஜ், செல்வகுமார், தங்கப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே எஸ்.டி.குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமையில், சேர்மன் எஸ்.டி.முருகேசன் முன்னிலையில் முதல்-அமைச்சருக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இதில் ஒருங்கி ணைப்பாளர் அகஸ்டின், ஆசிரி யர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் .
    • நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் . நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். நகராட்சி சேர்மன் முதல்-அமைச்சருக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, முன்னாள் நகர பொறுப்பாளர் ராஜ்காந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ரெஜிகலா, பீர்பாத் சாகுல்ஹமீது , சித்ரா செல்வக்குமார், செந்தாமரை, மைதீன் அப்துல்காதர், சங்கர நாராயணன், முகமது நைனார், சேக் காதர்மைதீன், நைனார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிச்சையா, குகன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நகர் முழுவதும் சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார்.
    • கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி வழியாக மதுரை சென்றார். அப்போது இடைகால் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் செண்டை மேளம், கரகாட்டம் உட்பட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக இடைகால், கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி வழியாக மதுரை சென்றார். அப்போது இடைகால் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் செண்டை மேளம், கரகாட்டம் உட்பட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான தொண்டர்கள் சாலை நெடுகிலும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடையநல்லூர் ,அட்டைக்குளம் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் வேனில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் எங்கு படிக்கிறாய் என கேட்டு தெரிந்து கொண்டார்.

    கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகர செயலாளர் அப்பாஸ் தலைமையில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் முன்னிலையில் இருபுறமும் தொண்டர்கள், குழந்தைகள் மலர் தூவி வரவேற்றனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன், அக்பர் அலி, வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலையில் செண்டை மேளம், இன்னிசை கச்சேரி, ராஜமேளம் முழங்க இரு புறமும் வாழை மரங்கள் தோரணம் கட்டி கேரள பெண்கள் அணிவகுத்து மலர் தூவி வரவேற்றனர். அதன்பின் அவர் பூரண கும்பம் மரியாதை பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் முகமது அலி, சேகனா, யாத்ரா பழனி, நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் முன்னிலையில் ஏராளமானோர் வரவேற்றனர். 

    • மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது.
    • பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    கேரளாவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 -வது மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது. இந்த நிலையில் பல்லடம் வந்த தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்,பல்லடம் கடைவீதியில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச் செயலாளர் கிருஷ்ண பிரசாத், மாநில பொருளாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×