search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welcome voters"

    உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #WelcomeVoters
    லக்னோ:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல்  நடைபெறும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் சில சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர். வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர். மாணவர்களின் இந்த செயல் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



    வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.  குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #WelcomeVoters

    ×