search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women jewel"

    மதுரை அருகே 3 பெண்களிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனா (வயது 20). நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வடமாநில வாலிபர்கள் பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். அந்த நேரத்தில் 2 பேரும் மீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட் டார் சைக்கிளில் தப்பினர்.

    தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சிவநாகஜோதி (36). நேற்று குறிஞ்சி நகரில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சிவநாகஜோதியை வழிமறித்து அவரது கழுத் தில் இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    2 நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வருகின்றனர்.

    மதுரை அருகே உள்ள கொடிமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன். இவரது மனைவி மூக்கம்மாள் (92). இவர் நேற்று மாலை தனது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மூக்கம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துத் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (22), ஜெய்ஹிந்துபுரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இந்த நகை பறிப்பு சம்பவங்களில் இவர்கள் 2 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ×