என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "worker home entry car"
மேலசொக்கநாதபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சிபிசோன் (வயது50). இவர் தனது குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார். அப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு நேற்று கேரளாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12 மணி அளவில் போடி அருகே கார் சென்று கொண்டிருந்தது. முந்தல் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதன்பின்பும் அருகே இருந்த தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் வீட்டுக்குள் புகுந்தது.
இதில் மின் கம்பம் முற்றிலுமாக முறிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. ராஜேந்திரன் குடும்பத்துடன் வீட்டுக்குள் தூங்கி உள்ளார். மின் கம்பத்தில் மோதி வீட்டுக்குள் புகுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. சுவர் சேதம் அடைந்தது. மின் ஊழியர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்