என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » yaba
நீங்கள் தேடியது "yaba"
வங்காள தேசத்தில் அதிகரித்து வரும் போதை மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையில் இதுவரை 105 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Bangladesh #Drugencounter
டாக்கா:
வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அண்டை நாடான மியான்மரில் இருந்து இந்த போதை மருந்துகள் கடத்தப்பட்டு, விற்கப்படுகிறது. போதை மருந்து விற்பனையாளர்கள் அதிகம் இளைஞர்களையே குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த போதை மாபியாவை ஒடுக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 14 நாட்களில் போதை மருந்து வியாபாரிகள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாள் இரவில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் 12 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், போதை மருந்துகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
இந்த என்கவுண்டர்களுக்கு வங்காள தேச மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladesh #Drugencounter
வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அண்டை நாடான மியான்மரில் இருந்து இந்த போதை மருந்துகள் கடத்தப்பட்டு, விற்கப்படுகிறது. போதை மருந்து விற்பனையாளர்கள் அதிகம் இளைஞர்களையே குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த போதை மாபியாவை ஒடுக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 14 நாட்களில் போதை மருந்து வியாபாரிகள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாள் இரவில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் 12 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், போதை மருந்துகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
இந்த என்கவுண்டர்களுக்கு வங்காள தேச மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladesh #Drugencounter
வங்காளதேசத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்யும் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய என்கவுண்டரில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். #Bangladeshdrugwar
தாகா:
வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வங்காளதேச போலீசார் போதை மருந்து வியாபாரிகள் 11 பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதை மருந்து வியாபாரிகள் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் போதை மருந்துகளுக்கு எதிரான போர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிஜ்வி அகமது, ‘போலீசார் நடத்திய இந்த என்கவுண்டரில் எங்கள் கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த அஜ்மத் உசைன் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
போதை மருந்துக்கு எதிரான போரை வரவேற்பதாகவும், ஆனால் இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களை கொல்ல பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதை மருந்து விற்பனை மிகப்பெரிய குற்றமாகும், ஆனால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் நூர்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதங்களில் 9 மில்லியன் யாபா போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladeshdrugwar
வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வங்காளதேச போலீசார் போதை மருந்து வியாபாரிகள் 11 பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதை மருந்து வியாபாரிகள் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் போதை மருந்துகளுக்கு எதிரான போர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிஜ்வி அகமது, ‘போலீசார் நடத்திய இந்த என்கவுண்டரில் எங்கள் கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த அஜ்மத் உசைன் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
போதை மருந்துக்கு எதிரான போரை வரவேற்பதாகவும், ஆனால் இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களை கொல்ல பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதை மருந்து விற்பனை மிகப்பெரிய குற்றமாகும், ஆனால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் நூர்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதங்களில் 9 மில்லியன் யாபா போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladeshdrugwar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X