என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yanam MLA"
- புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி. சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து, ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் அவரது மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளோம். சபாநாயகரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்படும்.
கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் சட்டசபைக்கு வரும் போதும் நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.
மேலும் அவருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கதிர், சங்கர், பொன்.சுகுமார், தேவா, மணிகண்டன், உறுவையாறு அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்