என் மலர்
நீங்கள் தேடியது "Yield"
- அதலைக்காய் கசப்பு தன்மையுடைய, மருத்துவ குணம் உடைய அரிதில் கிடைக்காத ஒரு காய் ஆகும்.
- வழக்கமாக நவம்பர் மாதம் புதியம்புத்தூர் சந்தைக்கு அதலைக்காய் விற்பனைக்கு வரும்.
புதியம்புத்தூர்:
பாகற்காய் போல் ருசி உடைய ஆனால் பாகற்காயை விட சிறிதாக உள்ள அதலைக்காய் கசப்பு தன்மையுடைய, மருத்துவ குணம் உடைய அரிதில் கிடைக்காத ஒரு காய்கறி ஆகும்.
மழை காலங்களில்
மற்ற காய்கறிகள் விளைநிலங்களில் விவசாயியால் விளைவித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஆனால் அதலைக்காய் விதைப்பு செய்யாத தரிசு நிலங்களில் மழை காலங்களில் முளைத்து பாகற்காய் போன்று கொடிகளாக வளர்ந்து நிலங்களில் படர்ந்து நின்று பயன் தரும்.
அதலைக்காய்க்கு மிகுந்த மருத்துவ குணம் உண்டு. இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். குடல்புழு அழிந்து போகும். கல்லீரல் வலுப்படும். மனித உடல் நலத்திற்கு பெரிதும் பயன்படும் என்கிறார்கள். இக்காய்கறி மழை காலங்களில் மட்டும் தான் விளையும்.
சென்னைக்கு ஏற்றுமதி
சாலையின் பக்கவாட்டில் கூட இக்கொடி படர்ந்து வளரும். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது அதலைக்காய் புதியம்புத்தூர், தட்டாப்பாறை, கைலாசபுரம், உமரிக்கோட்டை, சிலுக்கன்பட்டி, மடத்துப்பட்டி, சாமிநத்தம், சில்லானத்தம், நயினார்புரம் ஆகிய கிராமங்களில அதிகமாக விளைந்துள்ளது.
நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அதலைக்காய் விளைந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும். வழக்கமாக நவம்பர் மாதம் கிராமங்களில் இருந்து புதியம்புத்தூர் சந்தைக்கு அதலைக்காய் விற்பனைக்கு வரும். அளவிற்கு அதிகமாக அதலக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும் போது புதியம்புத்தூரில் இருந்து ஆம்னி பஸ்களில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதலைக்காய் கொண்டு செல்லப்படும்.
- நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.
- குருத்து பூச்சி தாக்குதலால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நெற்பயிர்கள் வளர்ந்து தூர்கட்டும் பருவத்திலும், சில பகுதிகளில் இளம் பயிராகவும் உள்ளது.
தற்போது சம்பா,தாளடி நெல் பயிர்களை குருத்துப்பூச்சி, இலை சுருட்டு பூச்சி மற்றும் தோகை பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது.
மேலும் நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
அவற்றுள் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மட்டும் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய பாதுகாப்பு முறையினை பின்பற்றி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதிக மகசூல் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும்.
- 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற கடைபிடிக்க வேண்டியது முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்பதற்கு டி.ஏ.பி உரம் ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் உரம் 500 கிராம், போராக்ஸ் 200 கிலோ ஆகியவற்றை சிறிதளவு நீரில் தனித்தனியே ஊறவைத்து, கரைத்து வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய கரைசலில் 140 மில்லி பிளானோ-பிக்ஸ் பயிர் ஊக்கியை கலந்து கொண்டு அக்கலவையை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து கரை சலை நிலக்கடலை பயிரில் தெளிப்பதால் இலை துவாரங்களின் வழி யாக ஊட்டச்சத்துகள் நேரடி யாக பயிருக்கு சென்று அடைகின்றன. இதனால் நிலக்கடலை பயிர் சீராக வளர்ச்சி அடைந்து பூக்கள், பிஞ்சுகள் அதிகள
வில் பிடிப்பதற்கு உதவி புரிகின்றது.
எனவே நிலக்கடலை விதைப்பண்ணை விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக விதை நிலக்கடலையினை அறுவடை செய்து அதிக வருமானம் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
- முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தமிழகத்தின் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டுவரப்படும்.
இதே போல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பூக்களின் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் கடும் பனியால் செடியிலேயே கருகி உள்ளது. பூக்களின் விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.
இது குறித்து வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, தற்போது கடும் பனி நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது . இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்றார்.
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
- பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீராணம்,
வலசையூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி, காடை யாம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடைக்கு செய்யப்படும் பூக்கள் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக
ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
- ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா.
- மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோ முதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை வட்டாரம், சூழியக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் டிரோன் மூலமாக நானோ யூரியா தெளிப்பு செயல்முறை விளக்கம் மற்றும் வயல்வெளி தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை உதவி வேளாண் இயக்குனர் மோகன், இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன விற்பனை துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் வயல்வெளி செயல்முறை விளக்கம் தந்து இப்கோ நிறுவன அதிகாரி சுரேஷ், டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து கூறியதாவது,
விவசாயிகள் உரசெலவை குறைக்கும் வகையில் 500 மில்லி நானோ யூரியா, ஒரு மூட்டை யூரியாவுக்கு சமமானது ஆகும். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ் பயன்படுத்தப்படுகிறது.
இதன் செலவு ரூ.1000 வரை செலவாகிறது. அதற்கு பதிலாக அரை லிட்டர் நானா யூரியா மற்றும் அரை லிட்டர் சாகரியா இரண்டையும் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் உர செலவு பாதியாக குறைகிறது.
மேலும் நானா யூரியா இலை வழியாக உறிஞ்சப்பட்டு பயிரிநுல் ஊடூருவி செல்கிறது.
இதன் மூலம் மண் வளம் காக்கப்படுவதோடு, மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோமுதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது. நானோ யூரியா பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உர செலவு பாதியாக குறையும் என்றார்.
இதில் முன்னோடி விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள், வேளாண் களப்பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
- நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா வழங்கல்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற்பயிரில் அதிக மகசூல் பெற ஆதிதிராவிட விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தார்.
வேளாண்மை கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் வரவேற்று பேசினார்.
முகாமில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுந்தரம், வேளாண் கல்லூரி பேராசிரியர் மோகன், வேளாண்மை கல்லூரி பூச்சிகள் துறை பேராசிரியர் கான்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து ஒன்றிய குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜ் ஆகியோர் 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா, பாஸ்போர்ட், யூரியா, அசோஸ்பைரில்லம், ஜிங் சல்பேட் கொண்ட தொகுப்பினை வழங்கினர்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண் அலுவலர்கள் தமிழரசன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் கல்லூரி பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
- நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
- மண், நீர் மற்றும் காற்று மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
தரங்கம்பாடி:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் அகரகீரங்குடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்கு சுபவீரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.
அனைத்து வகையான உதவி பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.
பின்னர் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி அலுவலர் சுகுமார், அட்மா திட்ட உதவி மேலாளர்கள் விஜய் மற்றும் மதுமனா ஆகியோர் நிகழ்ச்சி செயல் விளக்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
- புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர்.
- தற்சமயம் இந்த காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு 25 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிகள் 200-க்கு குறையாமல் விற்பனைக்கு வருகின்றன.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர். அது தற்சமயம் விளைச்சலுக்கு வந்துள்ளது.
புதியம்புத்தூரில் காய்கறி களை விற்பனை செய்து தர 5 கமிஷன்மண்டிகள் உள்ளன. இந்த கமிஷன் மண்டிகளில் சுற்றுவட்டார விவசாயிகள் தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
தினமும் இரவு 8 மணிக்கு அவை ஏலம் விட்டு விற்பனை செய்வது வழக்கம். தூத்துக்குடி மார்க்கெட்டி ற்கு விற்பனை செய்வோரும் புதியம்புத்தூரில் சில்லறை கடை விற்பனையாளர்களும் இந்த காய்கறி ஏலத்தில் கலந்து கொண்டு காய்களை வாங்கி செல்வார்கள்.
காய்கறி தரத்தை பொறுத்து அவை ஏலம் போகும். தற்சமயம் இந்த காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு 25 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிகள் 200-க்கு குறையாமல் விற்பனைக்கு வருகின்றன. நேற்று இரவு நடந்த காய்கறி ஏலத்தில் தக்காளி கிலோ ரூ.28-க்கு விலை போனது.
இந்த விலை கட்டுபடி யாகுமா என தக்காளி சாகுபடியாளர்களிடம் கேட்டபோது, இந்த விலைக்கு ஏலம் போனால் விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என்றனர். மேலும் புதியம்புத்தூரில் விளையும் தக்காளி பெங்களூர் தக்காளி போல் அல்லாமல் நாட்டு தக்காளி போல் சமையலுக்கு ருசியை தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்
- 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள்.
- ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், வடமழை மணக்காடு, கரியாபட்டினம், பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் எந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அறுவடை எந்திரம் போதுமானதமாக வராததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 100 கூலி கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.
ஆனால், இந்த ஆண்டு அறுவடை எந்திரம் கூடுதலாக வந்துள்ளதால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,800 மட்டும் கூலியாக பெறுகின்றனர்.
இந்த ஆண்டு நெல் விளைச்சல நன்றாக இருப்பதாகவும், ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், அரசு நெல் மூட்டைகளை காலதாமதம் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
- 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-
தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14000 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும்.
நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி நெல்லுக்கு ப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யபடுகிறது.
இவ்வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் விபரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். உளுந்து -ஆடுதுறை 3, ஆடுதுறை 5, ஆடுதுறை 6, வம்பன் 6, வம்பன் 8
பாசிபயிறு - ஆடுதுறை 3. கோ8 ஆகும்.
சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது.
எனவே பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி உயிர்ப் பூஞ்சாணம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும்,
சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும்.
நெல் தரிசு பயிறுவகைப்பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது நெல் தரிசுப்பயிரில் விதைத்த 18-20 ஆம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர மற்றும் அறுவடையின் போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் கிடைக்கப்படுகிறது.
ஏக்கருக்கு 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.
பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
பூக்கும் தருணத்தில்(விதைத்த 25ம் நாள்) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் விதைத்த 40ம் நாள் மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும் மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
- கனமழை காரணத்–தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பூண்டி.கே.கலைவாணன் எம்எல்ஏ தெரிவித்ததாவது, இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தினால் காவிரி படுகை அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
எதிர்பாராத விதமாக கடும்மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இருபது நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.
இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு வழங்கங்கிட தமிழக முதலவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை த்துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரை தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.