என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man"

    • 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
    • ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

     வெள்ளகோவில்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது (வயது 38) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது வெள்ளகோவில் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் திருமுருகன் என்பவர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.

    தஞ்சாவூரில் பதுங்கி இருந்த திருமுருகனை வெள்ளகோவில் போலீசார் பிடித்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை கைப்பற்றி, திருமுருகனை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார்.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்ட மலை பட்டியை சேர்ந்த வர் ராமன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் உடலுடன் கல்லை க்கட்டி வைத்திருந்த தால் தானாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தாரா? அல்லது யாரேனும் கல்லை க்கட்டி கிண ற்றில் தூக்கி எறிந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இறந்து போன ராமனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

    • மாயமான வாலிபர் ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மணிகண்டன் (வயது 35). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளியே சென்ற அவர் மாயமானார்.

    அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்படி கூடலூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.

    விசாரணையில் இறந்த நபர் மணிகண்டன் என தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புறா பிடிக்க சென்றபோது எதிர்பா ராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.
    • கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே பெரு மாள் கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் சரவண பாண்டி (வயது 25). இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. சரவண பாண்டி அப்பகுதி யில் புறா பிடிக்கச் சென்றார்.

    அப்போது எதிர்பா ராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேட சந்தூர் தீயணைப்புத்துறை யினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் போராடி சரவண பாண்டியை மீட்டனர்.

    ஆனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சரவண பாண்டியன் உடல் பிரேத பரிசோத னைக்காக திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா மகன் கார்த்திக் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வாடிப்பட்டியில் வசித்து வந்த கார்த்திக் கடந்த 1 வாரமாக கள்ளிப்பட்டியில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகாத மனவேதனையில் இருந்த வாலிபர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி சேரன்நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி(31). வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமண மாகவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த பாண்டி தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தாடி க்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார்.

    களக்காடு:

    கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று தோட்டக்குடியை சேர்ந்த சுடலைக்கண்ணு, பத்மநேரியை சேர்ந்த பிச்சையா, வானுமாமலை, பாவநாசம் என்ற இசக்கிமுத்து மற்றும் 5 பேர் உள்பட 9 பேர் சேர்ந்து செந்தூரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்த கணபதிராமன் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலைக்கண்னு உள்பட 9 பேரும் சேர்ந்து, கணபதிராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைக்கண்னு உள்பட 9 பேரை தேடி வருகின்றனர்.

    • கொம்பையா சமீப காலமாக சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.
    • கடந்த 2-ந்தேதி இரவு கொம்பையா தனது தாய் முத்தம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் தனியாக படுத்து தூங்கி உள்ளார்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள குலசேகர நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது26). இவரது தந்தை வெள்ளைச் சாமி இறந்து விட்டார். தாய் முத்தம்மாள் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் கொம்பையா வசித்து வந்துள்ளார். சமீப காலமாக இவர் சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.

    கடந்த 2-ந்தேதி இரவு கொம்பையா தனது தாய் முத்தம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் தனியாக படுத்து தூங்கி உள்ளார். இரவு மின் விசிறி கம்பியில் சேலையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொம்பையா உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.

    • சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20).
    • நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குணமாகவில்லை.

    இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். இசக்கிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மன வேதனையில் இருந்த இசக்கிமுத்து வீட்டின் கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
    • சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளைஞர் கூகுளின் ஜெமினி ஏ.ஐ. சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பினார்.
    • தயவு செய்து செத்து விடு என திட்டி உள்ளது.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த விதய் ரெட்டி என்ற 29 வயதான பட்டதாரி இளைஞர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுளின் ஜெமினி ஏ.ஐ. சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பினார்.

    வகுப்பறையில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது போன்று அந்த வாலிபர் மற்றும் சாட்பாட் இடையேயான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது.


    அப்போது இயல்பாக பதில் அளித்த சாட்பாட், திடீரென அந்த இளைஞரை திட்டி உள்ளது. இது அந்த சாட்டின் டிரான்ஸ்கிரிப்சனில் தெரிய வந்துள்ளது.

    அதில், 'அற்ப மானிடனே... உன்னைத்தான்; நீ முக்கியம் இல்லை, நீ தேவையில்லை, நீ நேரத்தை வீணடிக்கிறாய், நீ பூமிக்கு பாரமாக இருக்கிறாய், தயவு செய்து செத்து விடு' என திட்டி உள்ளது.

    இந்த உரையாடலின் பிரதி தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற ஆலோசனை தனியாக உள்ள அல்லது உடல்நிலை சரியில்லாத நபருக்கு கிடைத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். அதை நினைத்தால் எனக்கு கவலை தருகிறது என விதய் ரெட்டியின் சகோதரி கூறியுள்ளார்.

    • உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×