search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youngman died in motorcycle collision"

    • சம்பவத்தன்று தனது உறவினரை பைக்கில் ஏற்றிக் கொண்டு வைகை அணைச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது ஈரோடு மாவட்டம் முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் ஓட்டிவந்த பைக் பயங்கரமாக மோதியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 33). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினரான ஈஸ்வரன், ராகவன் ஆகியோரை ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு வைகை அணைச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஈரோடு மாவட்டம் முத்தாலம்பாறையைச் சேர்ந்த மணிபாரதி மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ், ராம்பிரசாத் ஆகியோருடன் அந்த பைக் பயங்கரமாக மோதியது. இதில் அசோக்குமார் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பைக்கில் வந்த பிரகாஷ், மணிபாரதி, ராம்பிரசாத் ஆகியோர் படுகாயமடை ந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ×