search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth died"

    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மகன் நாகராஜ் (வயது37). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் முதுகுளத்தூருக்கு புறப்பட்டார்.

    முதுகுளத்தூர் மின் வாரிய அலுவலக ரோட்டின் வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தஞ்சை அருகே உடல் துண்டாகி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த குடிகாடு என்ற பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபர், தலை துண்டாக உடல் துண்டாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தான் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபரின் சட்ட பையில் தஞ்சை - பூண்டிவரையிலும் செல்வதற்கான ரெயில் டிக்கெட் ஒன்று இருந்தது. எனவே இவர் பூண்டிக்கு ரெயிலில் சென்ற போது தான் இறந்திருக்கிறார். மேலும் தலை தனியாக, உடல் தனியாக கிடந்தது. இதனால் ரெயிலில் அடிப்பட்டு அந்த வாலிபர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் ஒரு மெமரிகார்டு இருந்தது. அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அந்த புகைப்படங்களில் உள்ளவர் தான் தற்போது இறந்தவரா? என்பதும் தெரியவில்லை. எனவே ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×