search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth molestation"

    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த 2 பெண்டாட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 39). பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வின்சென்ட் சென்றார். அப்போது அந்த வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். மற்றவர்கள் வெளியே சென்றிருந்தனர். 

    டி.வி. பார்க்க வேண்டும் என கூறி டி.வி.யை ஆன் செய்ய சொன்னார். அந்த பெண் டி.வி.யை ஆன் செய்து விட்டு மற்றொரு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த அறைக்கு சென்று வின்சென்ட் இளம்பெண்ணை வலுக்கட்டாய மாக கற்பழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    ஒதியஞ்சாலை போலீசில் இதுபற்றி புகார் செய்யப்பட்டது. கற்பழிப்பு வழக்குபதிவு செய்து வின்சென்டை போலீசார் கைது செய்தனர்.
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தூக்கத்தில் இருந்த 100 வயது மூதாட்டியை மூர்க்கத்தனமாக கற்பழித்த 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Youthrapes #100yearoldraped
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கங்கா பிரசாத்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி கடந்த திங்கட்கிழமை பின்னிரவு வேளையில் தனது அறைக்குள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த அறைக்குள் நுழைந்த அபிஜித் பிஸ்வாஸ்(20) என்பவன் அவரை மூர்க்கத்தனமாக கற்பழித்தான். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த அபிஜித் பிஸ்வாஸை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவன்மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சக்டா காவல் நிலைய போலீசார், இன்று கல்யானி கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். #Youthrapes #100yearoldraped 
    ×