search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths"

    • தூத்துக்குடி முறப்பநாடு வசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்தை தாக்கி அவரிடமிருந்து செல்போன், செல்போன் பவர் பேங்க்,ஏ.டி. எம்.கார்டு, ரூ. 650-ஐ பறித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முறப்பநாடு வசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    வழிப்பறி

    இவர் கடந்த 25-ந் தேதி மடத்தூர் எடைநிலையம் அருகில் சர்வீஸ் ரோட்டில் தனது லாரியை சரிபார்த்து ஓட்டிச்செல்வதற்கு தயாராக நின்றிருந்த போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்தை தாக்கி அவரிடமிருந்து செல்போன், செல்போன் பவர் பேங்க்,ஏ.டி. எம்.கார்டு, ரூ. 650-ஐ பறித்து சென்றனர்.

    வாலிபர்கள் கற்களால் தாக்கியதில் காயமடைந்த லாரி டிரைவர் சண்முகசுந்தரம் தூத்துக்குடி அரசு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    2 பேர் கைது

    இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலை யில் இன்று காலை மடத்தூர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்

    அதில் அவர்கள் தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் பண்டுகரைசேர்ந்த சதீஷ் (20), கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்பதும் இவர்கள் 25-ந்தேதி லாரி டிரைவர் சண்முகசுந்தரத்தை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வாலிபர்கள் வந்த இரு சக்கர வாகனத்துடன் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரையில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த வாலிபர், மகபூப்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.

    திருமண ஆசை காட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தெற்கு அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

    மதுரை மேல பனங்காடி-குலமங்கலம் மெயின் ரோடு கருப்பையா புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 19).இவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

    • ஆன்லைன் முதலீடு செயலி மூலம் இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி நடைபெறுகிறது.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    திருச்சி:

    திருச்சியில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் செய்து ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகிறது. வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி அதில் வேலை தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் செயலி மூலம் பணத்தை இளைஞர்கள் இழந்து தவிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இதுபற்றி திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் கூறும் போது, இந்த மோசடிகள் ஆன்லைன் செயலி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. கல்லூரி பேராசிரியராக இருக்கும் ஒருவரே தனது அறியாமையால் ரூ.4.75 லட்சம் இழந்துள்ளார்.

    இந்த செயலியில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து கிளிக் செய்தால், மோசடி பேர்வழிகள் கொடுக்கும் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய அடுத்த நொடி பொருள் விற்கப்பட்டதாக டிஸ்ப்ளேயில் காண்பிக்கும். மேலும் அதற்கான கமிஷன் தொகையும் டிஸ்ப்ளேயில் தெரியும்.

    உதாரணமாக ரூ.500 செலுத்தி ஒரு பொருளை வாங்கினால், உங்களுக்கு ரூ.600 கணக்கில் சேர்ந்ததாக காண்பிக்கும். ஆனால் ரீபண்ட் மட்டும் உடனே தர மாட்டார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றால் மேலும் கூடுதல் கமிஷன் தொகை கிடைக்கும் என கவர்ந்திழுக்கும் தகவல் கொடுப்பார்கள். அந்த அடிப்படையில் மேற்கண்ட பேராசிரியர் ரூ.4.75 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.ஆனால் ரீபண்ட் அவருக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தற்போது புகார் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று 20-க்கும் மேற்பட்ட பி.இ., எம்.இ., படித்த பட்டதாரி இளைஞர்கள் ரூ.5000 முதல் ரூ.5 லட்சம் வரை செலுத்தி ஏமாந்துள்ளார்கள். ஒரு இளைஞர் வங்கியில் கடன் பெற்று அந்த தொகையை போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் செயலி மூலம் முதலீடு செய்து தவித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த டிஜிட்டல் எம்.எல்.எம். மோசடியில் அதிகம் படித்த இளைஞர்களே சிக்கிக் கொள்கிறார்கள். மோசடி கும்பல் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்துவதில்லை.

    சாட்டிங் மட்டுமே நடக்கும். இதனால் நம்மை ஏமாற்றுபவர் யார் என்பதை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் இந்த மோசடி நடந்துள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் இதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறது.

    ரூ.5000, ரூ.6000 செலுத்தி விட்டு சுதாரித்து மேலும் பணம் செலுத்தாமல் தப்பித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் போட்ட தொகையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாக தொடர்ச்சியாக பணத்தை முதலீடு செய்தவர்கள் தவித்து வருகின்றனர்.

    ஒரு பொருளை ஆர்டர் செய்தால் நம் கைக்கு அந்த பொருளும் வருவதில்லை. கமிஷன் தொகையும் உடனடியாக நம் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்வது கிடையாது. செயலி டிஸ்ப்ளேயில் வரும் தகவலை மட்டும் நம்பி படித்த இளைஞர்கள் ஏமாந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. முதலீடு செய்யும் போது இது சாத்தியமா? என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    ஆன்லைன் மோசடியை பொருத்தமட்டில் உடனடியாக புகார் அளித்தால் மட்டுமே வங்கி கணக்கை முடக்க முடியும். மோசடி பேர்வழிகள் பணத்தை எடுத்து விட்டால் மீட்பது கடினமானது. எனவே இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

    • மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராய பண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். இவரது வீட்டுக்குள் கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பினர்.

    இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ் குமார் மேற்பார்வையில் கொங்கு நகர் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த வழக்கில் கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருகல் குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    • குண்டாறு நீர்த்தேக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • இப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவது பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்காசி மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்பிய இந்த நீர்த்தேக்கத்திற்கு விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    அழகிய ரம்மியமான இயற்கை அழகு மற்றும் நெய்யருவி உள்ளிட்ட பல்வேறு தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு நீர்த்தேக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில்சுவர்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், நீச்சல் அடித்தும் உற்சாகமாக நீராடி வருகின்றனர்.

    இதனால் ஆபத்து நேரிடும் அபாயம் ஏற்படுகிறது.

    அணையின் மதில் சுவற்றில் அமர்ந்து நீச்சல் அடித்து குளிக்கும் வாலிபர்களை தடுக்கவோ, தடுத்து நிறுத்தவோ துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ, அலுவலர்களோ இல்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க இப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவது பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. இங்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி நிறுத்திடவும், அணைக்கட்டியின் மேல் குளிக்கும் வாலிபர்களை தடுத்து நிறுத்துவதுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    அஞ்செட்டி அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.

    2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.

    மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

    அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமியை நான்குபேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #UPGirlMolested
    பிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் ஆட்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது முன்னால் வந்து ஆடுவது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு களத்தில் முன்னால் வந்து ஆடி சிக்சர் அடிக்க வேண்டும்.



    விவசாயிகளும், இளைஞர்களும் எந்தவித பயமுமின்றி முன்வர வேண்டும். களத்தில் அவர்கள் முன்னால் வந்து ஆடவேண்டும்.
    கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி தடுப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடி வந்துள்ளார்.
     
    சமீபத்தில் நடைபெற்ற மூன்று  மாநில சட்டசபை தேர்தல்களில் விவசாயிகள் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதன்மூலம் உலகுக்கு நமது பலத்தையும் வெளிப்படுத்தி உள்ளோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 தினங்களில் செய்துகாட்டி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழி கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

    ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

    மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் அரசு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவிதொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    சென்னை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கத்தில் திருநங்கைகளை உல்லாசத்துக்கு அழைத்த 25 இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதியில் திருநங்கைகளுடன் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் கூடுவது வழக்கம்.

    போதையில் மிதக்கும் இளைஞர்கள் பலர் நள்ளிரவு நேரத்தில் உற்சாக மிகுதியில் சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதிக்கு செல்வதுண்டு. அங்கு எப்போதும் சாலையில் திருநங்கைகள் அணி வகுத்து நிற்பார்கள். அவர்கள் காரில் வரும் வாலிபர்களிடம் சென்று அருகில் உள்ள இருட்டான பகுதிக்கு செல்லலாம் என்று கூறுவார்கள். இதில் மயங்கும் இளைஞர்களுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் வாங்கிக் கொள்வார்கள்.

    இது தொடர்பாக திருநங்கைகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த குமார், கோயம்பேட்டை சேர்ந்த வருண்குமார், பாலா, ஆறுமுகம், ஆவடி சிவகுமார், சபரிநாதன், கொடுங்கையூர் ராஜேஷ்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில் மேலும் 18 பேர் சிக்கினர். இவர்கள் 25 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இரவு நேரங்களில், இளைஞர்கள் யாரும், நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிக்கு திருநங்கைகளை தேடி வரவேண்டாம் என்றும் இதை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். கைதான இளைஞர்கள் அனைவரும் 20 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    திருநங்கைகளின் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்து வேல்பாண்டி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    தட்டாஞ்சாவடியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்கள் 2 வாலிபர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஜாக்கி என்ற சரவணன். இவரை கடந்த 23.3.2018 அன்று தட்டாஞ்சாவடி மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் உள்ளிட்ட கும்பல் ஓட, ஓட வெட்டி கொலை செய்தது.

    இந்த கொலை தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து ஹானஸ்ட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜீவானந்தபுரத்தை சேர்ந்த தர்மன், தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த், குண்டுபாளையத்தை சேர்ந்த ராம்குமார் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தர்மன், பிரசாந்த், ராம்குமார் ஆகிய 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் காரைக்காலில் தங்கி தினமும் கையெழுத்திட்டு வந்தனர். பின்னர் நிபந்தனை தளர்த்தப்பட்டு புதுவையில் இருந்து வந்தனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜாக்கி என்ற சரவணனின் நண்பர்களான தட்டாஞ்சாவடியை சேர்ந்த விக்கி மற்றும் இம்தியா சுக்கும், ஜாமீனில் வெளியே வந்த தர்மனுக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது தர்மனை இம்தியாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு விக்கியும், இம்தியாசும் தட்டாஞ்சாவடி மெயின் ரோட்டில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது தர்மன், பிரசாந்த், ராம்குமார், மற்றொரு ராம்குமார் ஆகிய 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த விக்கி மற்றும் இம்தியாசிடம் கொலை செய்து விட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ள எங்களிடமே தகராறு செய் கிறீர்களா? என கூறி மறைத்து வைத்திருந்த வீச்சரிவாள்களை எடுத்து அவர்களை சரமாரியாக வெட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த விக்கி மற்றும் இந்தியாசை அந்த பகுதி மக்கள் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் விக்கி மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ் பெக்டர் வடிவழகன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய தர்மன், பிரசாந்த், ராம்குமார், மற்றொரு ராம்குமார் ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ×