search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths"

    உத்தரபிரதேசத்தில் போனில் பேச வற்புறுத்தியதை தந்தையிடம் கூறிய மாணவியை வாலிபர்கள் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சர்தானா நகரம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தினமும் மாலையில் வீட்டில் இருந்து கோச்சிங் சென்டருக்கு டியூசன் செல்வது வழக்கம்.

    அப்போது வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அந்த மாணவிக்கு தினமும் தொல்லை கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் டியூசனுக்கு சென்று வீடு திரும்பிய அந்த மாணவியை இடைமறித்த வாலிபர்கள் கையில் ஒரு செல்போனை திணித்தனர்.

    இந்த போனில் நள்ளிரவு நேரத்தில் தங்களுடன் பேசும்படி அவர்கள் கூறினார்கள். பின்னர் மாணவி அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள். தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அந்த வாலிபர்கள் கொடுத்த செல்போனையும் தந்தையிடம் கொடுத்தாள்.

    உடனே மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் போனை கொடுத்த வாலிபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அந்த வாலிபரின் பெற்றோரிடம் புகார் செய்தனர். மேலும் கடுமையான எச்சரிக்கையும் செய்துவிட்டு வந்தனர்.

    இது, அந்த வாலிபருக்கும், அவது நண்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் 6 பேர் மாணவியின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் சென்று எப்படி எங்களை பற்றி புகார் செய்யலாம்? என கூறி தகராறு செய்தனர்.

    திடீரென அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்தனர். இதில், அவளது உடல் பற்றி எரிந்தது. வீட்டிலும் தீப்பற்றி கொண்டது. பின்னர் வாலிபர்கள் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

    மாணவி மீது தீ வைத்தவர்கள் ராஜ்வன்ஸ் பக்டி, தேவேந்திர பக்டி, ரோகித் சைனி, கச்சிராலா சைனி, அமன், தீபக் என்று தெரிய வந்தது.

    போலீசார் அவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    2004-ம் ஆண்டு இந்த ஊரில் இதே போல் பாலியல் தொல்லை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. 2 பேர் கொல்லப்பட்டனர். பல நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    சர்தானா நகரில் பெண்களை கேலி செய்வது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக அந்த ஊர் மக்கள் புகார் கூறி உள்ளனர்.
    ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். #NIA #Arrest
    ஐதராபாத்:

    இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளை கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இருவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 3-வது நபரான அட்னான் ஹசன் என்பவருக்கு எதிரான விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த பயங்கரவாதியிடம் விசாரணை நடத்திய போது, ஐதராபாத்தை சேர்ந்த அப்துல்லா பாசித் (வயது 24), அப்துல் காதிர் (19) ஆகிய இருவர் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். முன்னதாக ஐதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், பல்வேறு சட்ட விரோத பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர்.  #NIA #Arrest #Tamilnews 
    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள மத்திய பெண் மந்திரியின் காரை வழிமறித்து ‘ஈவ்டீசிங்’ செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அனுபிரியா பட்டேல் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியாக உள்ள அப்னாதளம் கட்சியை சேர்ந்தவர்.

    அவர் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இரவு காரில் வாரணாசிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவரது காரை பின்தொடர்ந்து 3 வாலிபர்கள் மற்றொரு காரில் வந்தனர். அந்த காரில் நம்பர் பிளேட் இல்லை. காரில் வந்தவர்கள் மத்திய மந்திரியின் காரை முந்தி சென்று வழிமறித்தனர். அப்போது மந்திரியின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

    அதை கண்டு கொள்ளாத அந்த வாலிபர்கள் மத்திய மந்திரியை கேலி- கிண்டல் செய்து அவமதித்தனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசினார்கள்.

    தொடர்ந்து பாதுகாவலர்கள் எச்சரித்ததால் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்த அவர்கள் மந்திரி அனுபிரியாவை கிண்டல் செய்தார்கள்.

    நிலைமை மோசமானதை அறிந்ததும் வாரணாசி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்த வாலிபர்களை பிடிப்பதற்காக போலீசார் தயாரானார்கள். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தயாராக இருந்தனர்.

    அப்போது அந்த வாலிபர்களின் கார் வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×