என் மலர்
நீங்கள் தேடியது "youtuber"
- கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
- அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேரளாவில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்து நின்ற யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து கேரள யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் தனது காரை நிறுத்தியுள்ளார்.
அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்படி வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
மேலும் அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
- பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
உலகளவில் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். பல மில்லியன் ஃபாளோயர்களை கொண்டிருக்கும் மிஸ்டர் பீஸ்ட் தான் உருவாக்கும் வீடியோக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். யூடியூப் மட்டுமின்றி பல்வேறு செயல்களில் ஆர்வம் கொண்டவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற ஜிம்மி டொனால்டுசன்.
அந்த வரிசையில், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது அறிவித்து இருக்கும் திட்டம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதன்படி ஆப்பிரிக்கா பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குவதாக மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கோகோ தோட்டங்களில் பணியாற்ற வைக்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
கோகோ தோட்டங்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைத்தால் அவர்கள் பள்ளுக்கு செல்வர் என்று டொனால்டுசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் ஆப்பிரிக்க சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தென் கொரிய யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும்.
தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்.
அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். மியோச்சி அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார். இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவரை முத்தமிட முயன்றார்.
இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள். அவள் எனது வீடு பக்கத்தில்தான் என்று சொன்னபோதும் கேட்கவில்லை.
இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில் தென் கொரிய யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி கூறியதாவது:- மும்பையில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
இந்த விவகாரம் தூதரக ரீதியிலான பிரச்சினையாக மாறினால், கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும் என்று கூறினார்.
- ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் அவரை காப்பாற்றினர்.
- அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
மும்பை :
தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹயோஜியோt இரவு 11.30 மணி அளவில் கார் பகுதியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் (லைவ்) நேரலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். அப்பெண் அவர்களிடம் இருந்து நைசாக நழுவ தொடங்கினார். இருப்பினும் வாலிபர்கள் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது, முகமது நக்யூப் அன்சாரி ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண், தனது கையை பிடித்து தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து இந்திய இளைஞர்கள் ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் தன்னை காப்பாற்றியதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். தன்னை காப்பற்றிய அவர்களை கவுரவிக்க ஓட்டலுக்கு வரவழைத்து மதிய விருந்து கொடுத்தார். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
- யூ-டியூபர் மீதான வழக்கு மதுரை கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
- பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
மதுரை
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இது வடமாநில தொழிலாளர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சட்டம்- ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இதுகுறித்து பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த யூ-டியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிபதி டீலாபானு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மனீஷ் காஷ்ய ப்பை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்து 3-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
யூ-டியூபர் மனீஷ்காஷ்யப் பின் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. இன்று விடுமுறை என்பதால் தாமரை தொட்டி பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில் மனீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப் பட்டார்.
அப்போது அவரை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனீஷ் காஷ்யப் விசா ரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு சில கேள்வி களுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரை பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டி யுள்ளது. மனீஷை மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கோர்ட்டு விடுமுறை என்பதால் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலையில் வருகிற புதன்கிழமைக்கு (5-ந் தேதி) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
- இவரது குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
- விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, 'நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்' எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டிரெவர் ஜேக்கப் தன்பக்க விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார். வரும் வாரங்களில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று விடும். அதன்பின் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கருதிய ப்ரெண்ட் ரிவேரா தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.
- வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.
அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருக்கும் ப்ரெண்ட் ரிவேரா வளர்த்து வந்த பேக்கர் என்ற நாய் இறந்து போனது. இதனால் வேதனையில் இருந்த அவர் அடுத்ததாக சார்லி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார்.
இந்நிலையில் சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கருதிய அவர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி நாய் சார்லிக்கு ஒரு சொகுசு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டார். தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டை கட்டினார். அந்த வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் டி.வி., சோபா, மெத்தை, பிரிட்ஜ், தலையணைகள் என அனைத்தும் உள்ளன. வீட்டிற்கு வெளியே இது சார்லியின் வீடு என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.
- ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையில் யூடியூப் மூலம் பழகி முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக, விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்த ஹேமலதா (வயது 38) என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹேமலதா கடந்த 2020-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அப்போது அவர் முதலில் பொழுது போக்கு அம்சங்களை மையமாக கொண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதற்கு பார்வையாளர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்து வந்தது.
இந்நிலையில் ஹேமலதாவை ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் தொடர்பு கொண்டு, தங்களின் உற்பத்தி பொருட்களை யூடியூப் சேனல் மூலம் பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டது. எனவே அவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆகா ஓகோவென புகழ்ந்து, அதனை சமூகவலை தளத்தில் வீடியோவாக பதிவு செய்தார். இதற்காக அவருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்கியது.
இது ஹேமலதாவிடம் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டது. எனவே அவர் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அங்கு உள்ள பொருட்களை யூடியூப் மூலம் பிரபலப்படுத்தினார். இதில் அவருக்கு பணம் கொட்டியது.
யூடியூப் மூலம் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையே, ஹேமலதாவை இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளி உள்ளது. ஹேமலதா சமீபத்தில் யூடியூபில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எனது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களின் பணத்துக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலத்துக்கு பிறகும் ரொக்கத்தொகை வந்து சேரவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா என்பவர் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா கணவர் ரமேஷ் மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து யூடியூப் மூலம் போலி வாக்குறுதி கொடுத்து பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யூடியூபர் ஹேமலதா, கணவர் ரமேஷ் மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமிரா மற்றும் 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கோவை குற்றப்புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஹேமலதா தலைமையிலான கும்பல் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக, வாடிக்கையாளர்கள் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.1½ கோடி வரை மோசடி செய்திரு க்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
எனவே ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹேமலதா தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார்.
- ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம்.
கோவை,
கோவையில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக, மாடர்ன் மம்மி யூடியூப் சேனல் நிர்வாகி ஹேமலதா, கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாச்சலம் ஆகிய 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர இல்லத்தரசிகளிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனால் அவரது சேனலை ஆயிரக்கணக்கானோர் பார்க்கத் தொடங்கினர். மாடர்ன் மம்மி சேனலுக்ககான அளப்பரிய வரவேற்பு, ஒருசில வணிக நிறுவனங்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனவே அவர்கள் தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டனர். அதன்படி ஹேமலதாவும் வீடியோ பதிவிட்டார். ஹேமலதா போட்ட விற்பனை பதிவுகள், வாடிக்கையாளரை மிகவும் கவர்ந்தது.
ஹேமலதாவின் யூடியூப் சேனலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பார்த்து வருகின்றனர். எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யூடியூப் சேனலில் சுய லாபத்துடன் கூடிய வர்த்தக விளம்பரங்களை பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.
அப்போதுதான் அவருக்கு ஆன்லைன் மூலம் முதலீட்டு விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. இதன்படி அவர் தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார். இது வாடிக்கையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
எனவே அவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அப்போது அவர்களுக்கு முதிர்வு தேதியில் ஏற்கெனவே சொன்னபடி ஹேமலதா பணத்தை அனுப்பி வைத்து உள்ளார். இது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் ஆர்வத்தை தூண்டியது. எனவே சின்ன மண்புழுவை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று ஹேமலதா முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் மாடர்ன் மம்மியில், எங்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1500 வழங்கப்படும் என்று வீடியோ பதிவு செய்தார். ஹேமலதா ஏற்கனவே முந்தைஅறிவுப்புகளுக்கு பேசியபடி பணம் கொடுத்து உள்ளதால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து கொண்டு பணம் கட்டினர்.
இந்த வகையில் ஹேமலதாவுக்கு லட்சக்கணக்கில் பணம் சேர்ந்து உள்ளது. இந்த நிலையில் பணமுதிர்வு காலம் வந்தது. அந்த நேரத்தில் ஹேமலதா செல்போனை சுவிட்ச்ஆப் செய்து தலைமறைவானார். இது வாடிக்கையார்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
எனவே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த விவரம் தெரிய வந்து உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், யூடியூபர் ஹேமலதா கிட்டத்தட்ட 595 வீடியோக்களை சேனலில் பதிவிட்டு உள்ளார். இவருக்கு 1.59 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். ஹேமா பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 371 பேர் பார்த்து உள்ளனர்.
எனவே ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மாடர்ன் மம்மி சேனல் மூலம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தரவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர முடியும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் கைதான யூடியூ பர் ஹேமலதா, அவரது கணவர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
- கலால் விதிகளின்படி பார்கள் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை.
- முகேஷ் நாயர் மீது கொல்லம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கலால் விதிகளின்படி பார்கள் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் கேரளாவின் பிரபல யூ-டியூபரான முகேஷ் நாயர் பார்களில் மது விற்பனையை ஊக்குவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் இடம் பெற்றிருந்த அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது குறித்து முகேஷ் நாயர் மீது கொல்லம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.
இந்நிலையில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் மற்றும் கொட்டாரக்கரா போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பல் ஆகின. இந்த தீ விபத்திற்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்றும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சிலருடன் பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், யூடியூபருக்கு எதிரான சிலர் அவருக்கு சொந்தமான படகு ஒன்றில் தீ வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படகு தீப்பிடித்து எரிவதை பார்த்த உள்ளூர் வாசிகள், அதன் நங்கூர கயிறை அறுத்து நீரில் தள்ளினர்.

எனினும், பலத்து காற்று வீசியதால் தீப்பிடித்த படகு மற்ற படகுகளுடன் உரசியதால் கிட்டத்தட்ட 40-க்கும் அதிக படகுகள் சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட படகுகள் அனைத்திலும் டீசல் முழுமையாக நிரப்பப்பட்டும், கடலில் சமைக்க பயன்படுத்துவதற்காக கியாஸ் சிலிண்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக தீ மளமளவென பரவியது.
தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பிறகு பேசிய அமைச்சர், "துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும். இது முதலமைச்சரின் முடிவு."
"இந்த துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ. 150 கோடியை ஒதுக்கீடு செய்தோம், இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது வரை எந்த அரசாங்கமும் இந்த துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது அரசாங்கம் தான் இதனை நவீன வசதிகளுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கி இருக்கிறது," என்று தெரிவித்தார்.
- எக்ஸ் தளத்தில் பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்.
- மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.
உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.
ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் வீடியோக்களை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை என கேள்வி கேட்டிறிந்தார்.
அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், "என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுடன் அவரது பதிவில், எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.

அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் தனது பதிவை மறு பகிர்வு செய்து, மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது என கூறியிருந்தார்.
அவரது மிஸ்டர் பீஸ்ட்டின் வீடியோ மிகவும் வேடிக்கையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்ததாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது முதல் வீடியோவை 2.7 கோடி