search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.
    • பிரதமர் மோடி-சீன அதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.

    சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், தற்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர். என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அரசின் அனைத்து துறையின் கவனமும் தற்போது மாமல்லபுரம் பக்கம் திரும்பி உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் என்றாலே சவுக்கு காடுகளும், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாததே நினைவுக்கு வரும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு இருட்டுவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள். இந்தநிலை தற்போது படிப்படியாக குறைந்து, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்து வசதி, நகரில் ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டது.

    மேலும் தொல்லியல்துறை சார்பில் புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

    கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தலைவர்கள் இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில அமர்ந்து ரசித்தனர். அங்குள்ள அனைத்து சின்னங்களையும் பார்வையிட்டு அதன் சிறப்புகளை பிரதமர் மோடி, சீன அதிபரிடம் விளக்கி கூறினார்.

    இதன் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் பல மடங்கு அதிகரித்தது. அதன் தொன்மை மற்றும் புராதன சின்னங்களின் வரலாறு குறித்த தேடுதல்கள் அதிகரித்தன.

    பிரமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர் மாமல்லபுரம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், புராதன சின்னங்களுக்கு இரவில் லேசர் ஒளி, கருங்கல் நடைபாதை, டிஜிட்டல் பலகைகள், நவீன தெரு விளக்குகள் என மேம்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு "சர்வதேச செஸ் ஒலிம்பியாட்" போட்டி இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை தமிழகத்தில் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றார். இந்த போட்டியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மாமல்லபுரத்தில் நடத்தியது கூடுதல் சிறப்பு ஆகும். இதன் பின்னர் மாமல்லபுரத்தின் பெயர் மற்றும் அங்குள்ள கற்சிற்பங்களின் மதிப்பு உலக அளவில் மேலும் உயர்ந்தது. இதனால் தற்போது மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.

    கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகையின் கணக்கெடுப்பில் உலக அதிசயமான டெல்லியில் உள்ள தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிவிட்டு மாமல்லபுரம் முதல் இடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மாமல்லபுரம் துணை நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் அழகிய முகம் மேலும் வளர்ச்சி அடைந்து மாறி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கைவசம் உள்ள ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் கூடுதலாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சென்னை நகரருக்கு இணையாக மாமல்லபுரம் மாறும் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து மால்லபுரம் பகுதி மக்கள் கூறும்போது, மாமல்லபுரம் துணை நகரமாவதால் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் உள்ளிட்ட நவீன வசதிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாமல்லபுரம் சுற்றுலா தலமாக இருந்தாலும் இதற்கு முன்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி-சீனஅதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்திய அளவிலும், உலக அளவிலும் மாமல்லபுரம் உச்சத்தில் உள்ளது. மாறி வரும் மாமல்லபுரத்தை நினைத்தால் இங்கு வசிப்பது பெருமையாக இருக்கிறது என்றனர்.

    • சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
    • 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.

    இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
    • பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும்.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறை தினத்தையொட்டி பொழுதை கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மாமல்லபுரம் வந்ததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

    புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.

    குடும்பம், குடும்பமாக வந்த பல பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை போன்ற சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் பயணித்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும். அரையாண்டு விடுமுறை தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
    • பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.

    சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.

    பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது
    • புயலில் பாதிப்படைந்த மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.

    பின்னர் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.
    • மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்.

    வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' தீவிர புயல் இன்று வலுவிழந்து புயலாக மாறி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த புயலின் மைய பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசு பல்வேறு அறிவுரைகளையும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

    புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளார்.

    அவர் இன்று காலையில் நீலாங்கரை, கானாத்தூர், நெம்மேலி, கோவளம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பருவ மழைக்கான சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் ஐ.ஏ.எஸ். மற்றும் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகள், மீட்பு படை அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.

    மாமல்லபுரம் மற்றும் அதையொட்டிய கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் புயல் மீட்பு மையங்களையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார்.

    அப்போது கோவளத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மாமல்லபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடற்கரை ஓரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    குறிப்பாக மாவட்டம் முழுவதும் 206 இடங்களில் பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு தங்கும் மக்களுக்காக 3 வேளை உணவு வழங்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    புயல் கரையை கடக்கும் போது மின் கம்பங்கள் சாய்ந்ததால் அதனை சரி செய்ய 600 மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் வாரிய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

    மரம் விழுந்ததால் அதை அப்புறப்படுத்த அதற்கான ஆட்கள் மரம் அறுக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    எனவே எந்த வகையிலும் எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.

    அதனால் அனைத்து முக்கிய அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.

    ஏதாவது பாதிப்பு வந்தால் மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு படையினர் 120 பேர் 3 குழுவாக தயாராக உள்ளனர்.

    தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் எந்த வகையிலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் பணியாற்றி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

    அப்போது கலெக்டர் ராகுல்நாத், சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் உடன் இருந்தனர்.

    • அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர்.
    • தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, அர்ச்சுனன்தபசு, புலிக்குகை போன்ற பகுதிகளை ஐ.நா. சபையின் கலாச்சார பிரிவு (யுனஸ்கோ) சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரித்து உலகளவில் விளம்பரமும் செய்து வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் குவிகின்றனர். இவர்களிடம் மத்திய தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக ரூ.600 வசூலிக்கின்றனர்.

    இந்த நினைவு சின்னங்களில் உள்நாட்டு பயணிகள், காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது பெயர்களை கரியால் எழுதுவதும், கற்கலால் கிறுக்குவது, அதன்மேல் அமர்ந்து மது அருந்துவது என சிற்பங்களை சேதப்படுத்தி வந்தனர். இதை தடுக்கும் வகையில் தொல்லியல்துறை நிர்வாகம் கூடுதலாக நிதி ஒதுக்கி, துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு போட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.

    இந்நிலையில் அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர். இதில் அர்ச்சுனன்தபசு யானை சிலை மீது ஒரு பட்டாசு விழுந்து வெடித்துள்ளது. இதனால் அதில் லேசான சேதமும், கருமை நிறமும் படர்ந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலகத்தில் கேட்டபோது புராதன சின்னம் அருகில் வெடி வெடிக்க தடைகள் இருந்தும் அத்துமீறி வெடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து எங்கள் டிக்கெட் கவுண்டர், பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். இனி இதுபோல் நடப்பதை தடுக்க பண்டிகை நாட்களில் அப்பகுதியில் கூடுதல் காவலர்களை நிறுத்துவோம் என்றனர்.

    • மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பது பெருமை அடைய செய்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அடங்கிய "யுனஸ்கோ" நகரமாக விளங்குகிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் வரலாற்று சிறப்பு பெற்றவை.

    தற்போது சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி, வெளிநாட்டவர் அதிகளவில் வரும் நகரமாக மாமல்லபுரம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட், காற்றாடி திருவிழா போன்ற சர்வதேச விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகள் இங்கு நடந்ததால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் சுற்றுலா திட்டத்தில் மாமல்லபுரம் தான் முதல் பார்வை இடமாக திகழ்கி றது. இதனால் வெளி மாநி லத்தவர்களின் வருகையும் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் பல மொழி பேசும் சுற்றுலா வழி காட்டிகளுக்கு மாமல்ல புரத்தில் மவுசு அதிகரித்து உள்ளது.

    உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மாமல்லபுரத்தில் வழிகாட்டி யார்? அவருக்கு பல மொழிகள் பேச தெரியுமா? அரசு பதிவு பெற்றவரா? என்பதை உறுதி செய்து முன் கூட்டியே பதிவு செய்து வருகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் பல மொழிகள் தெரிந்த சுற்றுலா வழிகாட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த பல மொழி பேசும் வழிகாட்டி வரதன் என்பவரிடம் இதை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாமல்லபுரத்தை ஒரு ஆன்மீகம் மற்றும் வரலாற்று தளமாக பார்க்கிறார்கள். சிற்பங்களை தொட்டு கும்பிடுகிறார்கள். இதை பார்க்கும்போது நம் மாமல்லபுரம் இவ்வளவு புனித பூமியா? என புல்லரிக்கிறது.

    தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பது பெருமை அடைய செய்து உள்ளது. புராதன சின்னங்களின் வளாகங்களில் மழை, வெயிலுக்கு பயணிகள் ஒதுங்கும் வகையில் நிழல் குடைகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    • கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40யை தொல்லியல்துறை கட்டணமாக வசூலித்து வருகிறது.

    நுழைவு சீட்டை ஆன்-லைன் வழியாகவும், கவுண்டரில் பணம் செலுத்தி வாங்கும் விதிமுறை இருந்து வந்தது.

    இந்த நிலையில் புராதன சின்னங்களில் உள்ள நுழைவு டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் அச்சிடும் 'பேப்பர் ரோல்' இல்லை என்று கூறு தொல்லியல்துறை ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை திடீரென்று மூடிவிட்டனர்.

    இதனால் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆன் லைன் டிக்கெட் மொபைல் போனில் எடுக்க தெரியாத கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

    வெளிநாட்டு பயணிகள் கையில் இந்திய ரூபாய் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாமல் தினறினர். அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் அவர்கள் நாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி ஆன்-லைன் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் ரோட்டில் காத்திருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் பயணிகளிடம் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றனர்.

    எனவே புராத சின்னங்களில் பூட்டப்பட்ட டிக்கெட் கவுண்டரை மீன்டும் திறந்து நுழைவு சீட்டு கொடுக்க வேண்டும் என சுற்றுலா வழிகாட்டிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்., பேப்பர் ரோல் தட்டுப்பாடு காரனமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    • ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாடு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. பலர் புராதன சின்னங்கள் குடும்பம், குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    அதேபோல் மாமல்லபுரம் கடற்கரையிலும் இதமான சூழல், ரம்மியமான காற்று வீசியதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் நேற்று திரண்டு வந்து பொழுதை கழித்தனர். கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜ வீதி போன்ற முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர். பிறகு நகருக்குள் சுற்றுலா பயணிகளுடன் வந்த கார், வேன், பஸ் போன்ற 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்று மாமல்லபுரம் நகரை விட்டு வெளியே சென்றன.

    • மாமல்லபுரம் சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம்.
    • புராதன சின்னங்கள் மீது வேதியியல் பிரிவு என்ஜினியர்கள் முன்னிலையில் காகிதம், மரத்தூள், ரசாயனம் கலந்த கூழ்மம் சிற்பங்களில் தடவப்படும்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது.

    இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம் உள்ளிட்ட மாசு படிந்து காணப்படுகிறது.

    சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சிற்பங்கள் தூய்மை பராமரிப்பு பணிகள் செய்யாமல் பொலிவிழந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகு தற்போது மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தற்போது பணிகளை தொடங்கி உள்ளது.

    முதற்கட்டமாக புராதன சின்னங்களில் சாரம் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து வேதியியல் பிரிவு என்ஜினியர்கள் முன்னிலையில் காகிதம், மரத்தூள், ரசாயனம் கலந்த கூழ்மம் சிற்பங்களில் தடவப்படும்.

    ஒரு வாரத்துக்கு பின்னர் அவை அகற்றப்படும் என்று தெரிகிறது. இதனால் புராதன சின்னங்கள் எப்போதும் போல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
    • மழை தொடர்ந்து பெய்ததால் பயணிகள் இல்லாமல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால், மாலை வேளையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்த நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் பயணிகள் இல்லாமல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர், பாசிமனி விற்போர் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டனர். இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் இன்னும் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டது.

    ×