என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
    • உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத்.

    இதற்கிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.

    ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.

    விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
    • அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.

    தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பாத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது

    • ராபின்வுட் படத்தில் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்
    • ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் ஐதராபாத் வந்தடைந்தார்.

    தெலுங்கில் ராபின்வுட் என்ற படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.

    இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்

    இந்நிலையில், ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் இன்று ஐதராபாத் வந்தடைந்தார்.

    இதனிடையே விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில், விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்? என காட்டமாக தெரிவித்திருந்தார்.

    மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாக வார்னரின் குற்றசாட்டிக்கரு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

    • பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது.
    • பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம் பட்டியில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இருந்த நிலையில், பள்ளியில் போக்குவரத்து பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாம் என்று பறப்போமோ என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளார்.

    அது மட்டுமல்லாமல் சொந்த ஊர் அருகே ரெயில்வே நிலையம் இருக்கிறது. ஆனால் ரெயிலில் கூட பயணித்ததில்லை எனக் கூறிய மாணவ-மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் பொன்ராஜ்.

    மாணவர்களிடம் தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 3 மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து அதன்படி இன்று காலை 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சென்னையில் வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரெயில் பூண்டவட்டில் அழைத்துச் சென்று பார்வையிட உள்ளனர். நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கின்றனர்.

    மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் எங்களால் விமானத்தில் பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர் அவரது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயிரியல் பூங்காக்களை பார்வையிட வைப்பது ரெயிலில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்கள் தங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதாகவும் நல்லாசிரியர் பொன்ராஜ்க்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக மாணவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறுகையில், 2014-ம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை எனது சொந்த செலவில் அழைத்துச் செல்வது வழக்கம், பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    அது எனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 17 மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள், தான் உட்பட 20 பேர் செல்கிறோம். இதற்கு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஆகிறது என்றார். மேலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.

    • கராச்சியில் இருந்து உள்நாட்டு விமானம் புறப்பட்டு லாகூர் சென்றடைந்தது.
    • லாகூரில் தரையிறங்கும்போது லேண்டிங் கியரின் பின்புற சக்கரம் காணாமல் போனது தெரியவந்தது.

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்ளாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாத நிலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்றபோதிலும் பயணிகளுக்கு எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்நாட்டு விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச் சென்றது.

    பயணிகளுடன் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர்தான் லேண்டிங் கியரில் உள்ள 6 சச்கரங்கில் பின்புறம் இருக்கும் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. விமானம் காராச்சியில் இருந்து புறப்படும்போது கழன்று விழுந்ததா? அல்லது லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கழன்று விழுந்ததா? எனத் தெரியவில்லை.

    இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் கராச்சியில் இருந்து புறப்படும்போது ஒரு சக்கரம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • தமாரா கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.
    • தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்டர்டாம் :

    ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தமாரா என்கிற கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.

    இந்தநிலையில் விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரை நெருங்கி கொண்டிருந்தபோது தமாராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியில் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியானோ என்கிற பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார். அதேபோல் விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 டாக்டர்கள் மற்றும் ஒரு நர்சும் உதவிக்கு சென்றனர்.

    தனக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா பரிதவித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமானதையே அறியாமல் குழந்தை பெற்றெடுத்ததை எண்ணி தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

    தமாரா குழந்தை பெற்றெடுத்த விஷயம் அறிந்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே பிரசவத்தின்போது தனக்கு பெரிதும் உதவிய சக பயணியான மாக்சிமிலியானோவின் பெயரை தனது குழந்தைக்கு தமாரா சூட்டினார்.

    • பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.
    • ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    ஆலந்தூர்:

    சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.

    மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதேபோல் மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், 2 பெங்களூர் விமானங்கள் கொல்கத்தா, கோவை, ஐதராபாத் ஆகிய 7 விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு தாமதமாக தரையிறங்கின.

    அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், செயின் டென்னிஸ், கொல்கத்தா, புனே, பெங்களூர் ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மொத்தம் 14 விமானங்கள் வருவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    • சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.
    • குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.

    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து பயணிகள் விமானம், தினமும் இரவு 11:05 மணிக்கு புறப்பட்டு, காலை 6:55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது சரி செய்யப்பட்டு தாமதமாக, நள்ளிரவு 11:51 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.

    இதனால் குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். குவைத் விமானம் தாமதமாக வரும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் எப்போது வரும் என்ற முறையான தகவல் எதுவும், விமான நிலையத்தில் அறிவிக்கவில்லை என்று பயணிகளை வரவேற்க வந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

    • தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன்..?
    • நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார்.

    அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு சம்பவத்தன்று ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் பிசினஸ் வகுப்பில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சங்கர் மிஸ்ரா இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென சிறுநீர் கழித்தார்.

    இதனால் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரின் உடை மற்றும் அவரது பையில் சிறுநீர்பட்டு நனைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.

    ஆனால் அவர்கள் பெண் பயணியை தொட மறுத்தனர். அவரது காலணி மற்றும் பை மீது கிருமி நாசினி தெளித்தனர்.மேலும் பைஜாமா மற்றும் கையுறையும் கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனக்கு இருக்கையை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் வேறு இருக்கை இல்லை எனக்கூறி அவருக்கு மாற்று இருக்கை கொடுக்க விமான பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

    விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் பயணி தன் மீது சிறுநீர் கழித்த தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிறிது நேரம் கழித்ததும் அந்த பெண், தொழில் அதிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார். இதனால் இருவரும் சமாதானமாகி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பவம் நடந்த அன்று சங்கர் மிஸ்ராவிடம் நடந்த விவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அந்த சமயம் அங்கு இருந்த பெண் பயணியை பார்த்த அவருக்கு கண்களில் இருந்து பொலபொல வென கண்ணீர் வடிந்தது. நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடுங்கள் என அவர் அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறினார்.

    நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார். ஆனாலும் என்னை பற்றி கேள்விபட்டால் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

    அதனால் தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். அந்த பெண் அவர் மீது மேலும் குற்றம் சுமத்தினால் கடினமாக இருக்கும் என நினைத்து நடந்ததை கெட்ட கனவாக எண்ணி புகார் கொடுக்காமால் சமாதான மாக சென்று விட்டார். இதனால் தொழில் அதிபர் தண்டணையில் இருந்து தப்பிவிட்டார்.

    • பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது.

    மதுரை

    மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது.

    மதுரை விமான நிலை யத்தில் 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது.

    இங்கு 3 சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், மதுரை விமான நிலையம் அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது. கோவை, ஷீரடி, விஜய வாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாளுகின்றன.

    அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை விமான நிலையம் மட்டும் இன்னும் சுங்க விமான நிலையமாகவே உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

    மத்திய அரசு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பயணியர் சேவை உதவியாளர்களாக, மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்த உள்ளது. இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் மதுரை-மலேசியா வழித்தடத்தில் நேரடி விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க உள்ளது. இது வியாபாரிகள் மற்றும் விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக மதுரை வருகின்றனர். சர்வதேச அந்தஸ்து கிடைத்தால் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் எளிதில் மதுரைக்கு வர முடியும்.

    வேளாண் விளை பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிட்டும். பிற நாடு களுடனான விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமான நிலையம் ஒரு ''பாயின்ட் ஆப் கால்'' ஆக சேர்க்கப்பட வேண்டும்.

    சர்வதேசவிமான பயணத்தில் தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை விமான நிலையம் திகழ்கிறது. மலேசியா, சிங்கப்பூர், குவைத், இதர ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்த்து, பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (வயது 34) என்பவர் குடிபோதையில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை டெல்லி தனிப்படை போலீ சார் கைது செய்தனர். அவரை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    சங்கர் மிஸ்ரா சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர். அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×