search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அன்னையை போன்ற பெண்ணிற்காக காத்திருக்கும் சித்தி புத்தி விநாயகர்
    X

    அன்னையை போன்ற பெண்ணிற்காக காத்திருக்கும் சித்தி புத்தி விநாயகர்

    • விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.
    • தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

    விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.

    தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

    தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர்.

    அந்த பண்புகளையே தன் இரு மனைவியராக கொண்டு சித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.

    சகோதர ஒற்றுமை உண்டாகும்

    சிறு வயதாக இருக்கும் போது தனது சகோதரன், சகோதரி மீது இருக்கும் பாசம், பெரியவர்களான பிறகு மாறிவிடுகிறது.

    நாரதர் கொடுத்த பழத்திற்காக, உலகைச் சுற்றி வரக் கூறிய போது, பெற்றோரை சுற்றி வந்து அவர்கள் தான் உலகம் என்பதை உணர்த்தியவர் விநாயகர்.

    இவரே சகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதர விநாயகராகவும் அருள்பாலிக்கிறார்.

    Next Story
    ×