search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இந்துக்களின் வேதமாக திகழும் பகவத்கீதை
    X

    இந்துக்களின் வேதமாக திகழும் பகவத்கீதை

    • பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது.
    • இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது.

    ஸ்ரீகிருஷ்ணர் இப்பூவுலகில் தனது அவதார நோக்கத்துக்காகப் பல அற்புதங்களை புரிந்தார்.

    தேரோட்டிய சாரதி : பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்சபாண்டவர்களைக் காத்தார். தனது விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனுக்குக் காட்டி அருளினார்.

    பகவத் கீதை :

    பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது.

    இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது.

    பகவத் கீதையின் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது.

    பகவத் கீதையில் கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று விதமான யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

    இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.

    Next Story
    ×