search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கடவுள் வழிபாட்டில் குங்குமம் சந்தனம் திருநீறு உணர்த்தும் தத்துவம்
    X

    கடவுள் வழிபாட்டில் குங்குமம் சந்தனம் திருநீறு உணர்த்தும் தத்துவம்

    • தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.
    • சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.

    சமயச் சடங்குகளில் குங்குமம், சந்தனம், திருநீறும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியபடி உள்ளன.

    திருநீறு பூசுவது என்பது நம் வாழ்க்கை நிலை இல்லாதது, சாம்பலாகி விடுவோம் என்பதை காட்டுகிறது.

    யார் ஒருவர் நெற்றியில் 3 விரல்களால் திருநீறு பூசிக் கொள்கிறாரோ அவரிடம் இருந்து ஆணவம், கன்மம், மாயை மூன்றும் விலகி விடும் என்பது ஐதீகம்.

    குங்குமம் என்பது சக்தியின் அடையாளம். பராசக்தி துணை இல்லாமல் இந்த உலகில் நாம் எதுவும் செய்ய முடியாது.

    இதனால்தான் பூஜைகளில் குங்குமம் தவறாமல் இடம் பெறுகிறது.

    தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.

    சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.

    இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், நாட்டில் நில வளமும், நீர் வளமும் பெருகும் என்பதை காட்டுகிறது.

    இறைமூர்த்தங்களை அலங்காரம் செய்வது என்பது, அவன் படைக்கின்ற பொருட்களை காத்து நிலை பெறச் செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.

    Next Story
    ×