search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கல்ப மூலிகை-அத்தி
    X

    கல்ப மூலிகை-அத்தி

    • அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம்.
    • துவர்ப்பும் இனிப்பும் உடைய அத்திப் பழம் ரத்த விருத்திக்கு உறுதுணையாகும்.

    அத்தி கல்ப மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது.

    அத்தி மரத்தின் அடி பாகத்திலும் மற்றும் கிளைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.

    துவர்ப்பும் இனிப்பும் உடைய அத்திப் பழம் ரத்த விருத்திக்கு உறுதுணையாகும்.

    தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் அத்தி மரம் வளர்கிறது.

    அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும்,

    பழம் ஜீரணியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் ஆற்றல் கொண்டது.

    சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும்.

    இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை அத்தி பழ பயன்பாட்டால் நீங்கும்.

    அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

    முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த

    பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க

    அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

    அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சம அளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி.

    கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, ரத்தபேதி ஆகியவை தீரும்.

    அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமஅளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து

    சுண்டைக் காய் அளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு,

    மூலவாயு, ரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

    அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம்.

    காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம்.

    பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம்.

    உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம்.

    தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

    அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.

    அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும்.

    இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும்.

    தெளிந்த இந்த நீரை நாளும் 300 முதல் 400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும்.

    நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் அழகு பெறும்.

    Next Story
    ×