search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கண்ணன் ஆடிய கூத்து மூன்று!
    X

    கண்ணன் ஆடிய கூத்து மூன்று!

    • ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பர்கள்.
    • எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம்.

    சொர்க்க துவாரம்! மோட்ச துவாரம்!

    வைணவ திருத்தலங்களில்,பெருமாள் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தைத் தரிசித்திருக்கிறோம்.

    அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம் துவாரகை.

    இந்த தலத்தில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம்.

    ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பர்கள்.

    எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம். இதையும் தாண்டிச் சென்றால் கண்ணனின் திவ்விய தரிசனம் கிடைக்கும்.

    கண்ணன் ஆடிய கூத்து !

    கண்ணன் ஆடிய கூத்துக்கள் மூன்று. மதம் பிடித்த யானையின் தந்தத்தை ஒடித்தபோது ஆடியது அல்லியக் கூத்து.

    பேரன் அநிருத்தனை அசுரன் ஒருவன் சிறைப்பிடித்து வைத்த போது பஞ்சலோகத்தால் ஆன குடத்தைத்தலையில் வைத்தபடி ஆடியது குடக்கூத்து.

    வாணன் எனும் அசுரனைப் போரிட்டு அழித்த போது ஆடியது மல்லாடல் கூத்து!

    Next Story
    ×