search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முருகப் பெருமானை தாங்க மயிலாக உருமாறிய இந்திரன்
    X

    முருகப் பெருமானை தாங்க மயிலாக உருமாறிய இந்திரன்

    • போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
    • இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.

    சுப்பிரமணியப் பெருமான் சூரனுடன் போர்புரிந்த சமயத்தில், இந்திரன் மயிலாக உருமாறிப் பெருமானைத் தாங்கினான்.

    இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கோவில் விழாக்காலத்தில் மயில்வாகனத்தில் பெருமானை எழுந்தருளச் செய்வார்கள்.

    அதில் மயிலின் தலைபாகம் முருகனது இடப்பக்கத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.

    போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.

    இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.

    இதனை உணர்த்தும்வண்ணம், உற்சவ காலத்தில் சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் மயில்வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.

    அப்போது, மயிலின் தலை, முருகனது வலப்பாகத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.

    அடுத்து மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பெற்ற சிற்பங்களுடன் கூடிய பதினாறுகால் மண்டபம் காட்சி தருகின்றது.

    Next Story
    ×