search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நினைத்ததை நிறைவேற்றுவார் இந்த ஆஞ்சநேயர்
    X

    நினைத்ததை நிறைவேற்றுவார் இந்த ஆஞ்சநேயர்

    • திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.
    • இதற்கான ஆதாரங்களை, கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    தியாகராஜ சுவாமி சன்னதி முன் மண்டபத்து தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல்.

    நாம் நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்.

    கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழி பெயர்த்து எழுத சோழ நாட்டில் இருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார். கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர்.

    இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்களை, கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12&ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டை சேர்ந்தவர்.

    பல கலைகளையும் பயின்றவர். இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    Next Story
    ×