search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தலை ஆடியில் புதுமணப்பெண் தாய் வீட்டில் தங்குவது ஏன்?
    X

    தலை ஆடியில் புதுமணப்பெண் தாய் வீட்டில் தங்குவது ஏன்?

    • ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.
    • புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர்.

    ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.

    புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர். அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படும்.

    சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது.

    பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள்.

    தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.

    மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.

    சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசவுகரியத்தைக் கொடுக்கும்.

    எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள்.

    Next Story
    ×