என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
தென்கயிலாயம்-புதுவை காளத்தீஸ்வரர்
- பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும்.
- பக்தர்களால் “அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி” என்று போற்றி வணங்கிய திருத்தலம்.
புதுவை நகரின் இதயமாக விளங்கக்கூடிய மைய பகுதியில், கிழக்கில் மாதா கோவில் தெரு என்று அழைக்கப்படும் முற்கால நெசவாளர் தெருவுக்கும், மேற்கில் அம்பலத்தாடும் ஐயன் திருமடத்துக்கும், வடக்கே கோவில் பெயர் விளங்கும் காளத்தீஸ்வரன் கோவில் தெருவுக்கும், தெற்கே கொசக்கடை தெரு என்று கூறப்படும் அம்பலத்தடையார் மடம் தெருவுக்கும் இடையில் மிஷன் வீதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காளத்தீசுவரர் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.
இப்பூவுலகம் "நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று" ஆகிய பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே.
பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும்.
அவற்றுள் தென்கயிலாயம் என்றும், வாயுதலம் (காற்றுத்தலம்) என்றும் "ராகு-கேது தலம்" என்றும் அழைக்கப்படுவது செட்டிக்கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில்.
இது பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றதும், 'கயிலை பாதி காளத்தி பாதி" என்று நக்கீரரால் போற்றி துதிக்கப்பட்ட திருத்தலமும் ஆகும்.
மூவர் பாடல் பெற்ற திருத்தலம்.
பக்தர்களால் "அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி" என்று போற்றி வணங்கிய திருத்தலம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்