மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 புரட்டாசி மாத ராசிபலன்

Published On 2024-09-17 08:32 GMT   |   Update On 2024-09-17 08:33 GMT

பொறுமையாக செயல்பட்டு பெருமை காணும் மகர ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் புதன் இருக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்பார்கள்.

எனவே பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும். ராசிநாதன் சனி வக்ரம்பெற்று இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிர்பந்தமும் உருவாகும். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். ஆதாயம் தரும் தகவல்கள் குறைவாகவே கிடைக்கும். திட்டமிடும் எந்த காரியத்தையும் செயல் படுத்த முடியாது.

உடலில் முன்பு தோன்றிய நோய் ஒன்று, மீண்டும் தலைதூக்கும். பணம் பல வழி களிலும் செலவாகி மனதை வாட்டும். கொடுத்த கடன் வசூலாகாமல், மன நிம்மதியை இழக்க வைக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு பெரும் தொகையை செலவிடுவீர்கள்.

புதன் உச்சம்

புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெறுவது, ஒரு அற்புதமான நேரமாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பாகப்பிரிவினையில் எதிர்பார்த்த பங்கு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலை விரிவுசெய்ய பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வேலை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுப்பர். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.

துலாம் - சுக்ரன்

புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சுக்ரனுக்கு அது சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான அவர் தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது, ஒரு அற்புதமான நேரமாகும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். தொழில் சூடுபிடிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஒரு வருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலை உருவாகி பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

துலாம் - புதன்

புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியால், இதுவரை கைகூடாத ஒரு சில காரியங்கள் இப்பொழுது கைகூடும்.

வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேல் இடத்து நிர்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கலைஞர்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும். மாணவ- மாணவிகள், கல்வியில் கவனச் சிதறல் ஏற் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேசுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

செப்டம்பர்: 17, 18, 20, 21, அக்டோபர்: 2, 3, 6, 8, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

Similar News