29.7.2024 முதல் 4.8.2024 வரை
மனோ தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குருவும், தன அதிபதி மற்றும் பாக்கிய அதிபதி செவ்வாயும் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள், கால தாமதங்கள் விலகும். ஞாபக சக்தி கூடும்.வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். தெய்வ நம்பிக்கை அதிகமாகும். சொத்துதகராறு, பாகப்பி ரிவினை போன்றவற்றால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பேச்சில் நிதா னத்துடன் இருந்து உடன் பிறந்தவர்களை அனு சரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும்.தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி சீராகும். இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும்.
கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். மாதச் சம்பள தாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் பிரச்சினை தீரும்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். தங்களை மாய்த்துக் கொள்ள துணிந்தவர்கள் கூட மனம் மாறுவார்கள். தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். செல்போன் நெட் வொர்க் மாற்றலாம். ஆடிப் பெருக்கு அன்று உணவு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406