சினிமா

இயக்குனர் பாலாவுக்காக பரோட்டா மாஸ்டர் ஆன நாயகன்

Published On 2017-05-11 11:11 GMT   |   Update On 2017-05-11 11:11 GMT
தான் எடுக்கும் படத்தை நேர்த்தியாக, கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர் பாலா, தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நாயகனை பரோட்டா போட கற்று வருமாறு அனுப்பியுள்ளார்.
இயக்குனர் பாலா தற்போது, ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பாலா இயக்கும் படத்தில் பெரோஸ்கானின் மகன் ‘சாட்டை’ யுவன் நாயகனாக நடிக்கிறார். அதில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் வேடம்.

இதற்காக அவரை பரோட்டா போட கற்றுவருமாறு பாலா கூறினார்.

இதையடுத்து, யுவன் நாகூர் சென்று ஒரு பரோட்டா கடையில் ஒரு மாதம் பரோட்டா போட கற்று வந்திருக்கிறார். கடைக்கு வந்து போகிறவர்களிடம் அவர் யார் என்பதை சொல்லாமலே இதை செய்து முடித்திருக்கிறார்.



இப்போது, எல்லாவிதமான பரோட்டாக்களையும் போடுவதில் யுவன் ‘எக்ஸ்பர்ட்’ ஆகி இருக்கிறார். அடுத்து ஆயுதம் இல்லாமல் தாக்கும் சண்டைபயிற்சி பெற இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யுவனின் தந்தை பெரோஸ்கான் செய்து வருகிறார்.
Tags:    

Similar News