சினிமா

அந்த எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன் - பிரியாமணி

Published On 2018-10-23 13:37 GMT   |   Update On 2018-10-23 13:37 GMT
அந்த எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன் என்று நடிகை பிரியாமணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Priyamani #MeToo
பருத்தி வீரன் உள்பட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி. இவரிடம் சமீபத்தில் அதிகரித்து வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் பற்றி கேட்டபோது, மீ டூ வி‌ஷயத்தில் பெண்கள் தங்களுக்கான நியாயத்துக்காக போராடுகின்றனர்.

எதுவும் நடக்காமலே நடந்ததாக எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். அதற்கான அவசியமும் இல்லை. சினிமாத் துறையில் இருக்கும் பெண்கள் பேசுவதால், சினிமாவில் மட்டுமே இதெல்லாம் நடப்பதாக அர்த்தமில்லை. பெண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் பாதுகாப்பு குறைவுதான். 



இதைச் சொல்வதற்கு அசிங்கமாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தச் சூழலுக்குள்ளே பெண் குழந்தைகளை வளர்ப்பதுதான் இன்றைய பெற்றோருக்கான சவால். நான் சினிமாவில் கிளாமராக வருகிறேன் என்றால், அது என் தொழில். அதற்காக நிஜத்திலும் அப்படியே இருப்பேன் என்ற எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன். எனக்குப் பாலியல் தொல்லை ஏற்பட்டால், நிச்சயம் என் கணவரின் உதவியுடன் எல்லோர் முன்னிலையிலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News