சினிமா செய்திகள்
null

தனது 7-வது தேசிய விருதை பெற்றுக் கொண்டார் ஏ.ஆர் ரஹ்மான்

Published On 2024-10-08 12:47 GMT   |   Update On 2024-10-08 13:08 GMT
  • 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது.
  • பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் பெற்றுக்கொண்டார் .

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் விருதை பெற்றுக் கொண்டார். இது அவரது 7-வது தேசிய திரைப்பட விழாவாகும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News