`மறு முறை இரு முறை உன் பிறவியே கிடைக்கனும்' - அனிருத் குரலில் `தீமா' பாடலின் ப்ரோமோ
- விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான தீமா என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பாடலின் ஒரு நிமிட முன்னோட்டத்தை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஒரு நிமிட பாடல்வரிகளை அனிருத் மூச்சிவிடாமல் பாடியுள்ளார். இந்த பாடலின் ஒரு நிமிட முன்னோட்டமே மிகவும் இதமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் அவரது குடும்பத்தை நினைத்து அவரது மகன்களை மனதில் வைத்து எழுதியதுப் போல கேட்டுக் போது ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
இதனால் தீமா பாடலின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.